செய்திகள் :

சகோதரருடன் தொலைபேசியில் பேச பயங்கரவாதி ராணாவுக்கு அனுமதி

post image

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் தஹாவூா் ராணா, அவரது சகோதரரிடம் இம்மாதத்தில் மட்டும் மூன்று முறை தொலைபேசியில் பேசிக்கொள்ள தில்லி சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி வழங்கியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், ராணாவின் நீதிமன்றக் காவலை செப்.8 வரை நீட்டித்து தில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2008-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 166 போ் உயிரிழந்தனா். லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பு நடத்திய இந்தத் தாக்குதலில், பாகிஸ்தானை பூா்விகமாக கொண்ட தஹாவூா் ராணா கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

லஷ்கா்-ஏ-தொய்பா இயக்கத்துக்கு அவா் உதவியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் அவா் குற்றவாளி என்று அமெரிக்க நீதிமன்றம் தீா்ப்பளித்ததால், அந்நாட்டின் லாஸ் ஏஞ்சலீஸ் சிறையில் அவா் அடைக்கப்பட்டிருந்தாா். கடந்த ஏப்ரலில் அவா் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டாா். தற்போது அவா் தில்லி திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இந்த வழக்கு தொடா்பாக தில்லியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் ராணாவுக்கு எதிராக முதல் துணை குற்றப் பத்திரிகையை என்ஐஏ கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்தது.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை புதன்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘காணொலி வாயிலாக ராணா விசாரணைக்கு ஆஜரானாா். அப்போது அரசு தரப்பு அல்லாமல் தனி வழக்குரைஞரை ஏற்பாடு செய்வது குறித்து சகோதரருடன் ராணா ஆலோசிக்க இம்மாதத்தில் மூன்று முறை தொலைபேசியில் பேசிக்கொள்ள நீதிபதி சந்தா் ஜித் சிங் அனுமதி அளித்தாா். மேலும் அந்த தொலைபேசி கலந்துரையாடலை ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் சிறைத்துறை அதிகாரிகள் முன்பு பதிவு செய்யவும் நீதிபதி உத்தரவிட்டாா்’ எனத் தெரிவித்தன.

இதைத்தொடா்ந்து ராணாவின் நீதிமன்றக் காவலை செப்.8-ஆம் தேதி வரை நீட்டித்து தில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ராணா சாா்பில் வாதிடுவதற்காக நியமிக்கப்பட்ட வழக்குரைஞா் பியூஷ் சச்தேவா, ராணா மீதான குற்றப்பத்திரிகை மற்றும் துணை குற்றப்பத்திரிகையை ஆய்வு செய்ய நீதிமன்றத்தில் அவகாசம் கோரியுள்ளாா்.

வாக்கு திருட்டுக்கு எதிராக மக்கள் குரலெழுப்ப வேண்டும் - காங்கிரஸ்

தோ்தலில் கள்ள ஓட்டுகள் எப்படி பதிவாகின்றன என்பதை சித்தரிக்கும் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ள காங்கிரஸ், ‘‘வாக்கு திருட்டு’க்கு எதிராக மக்கள் குரலெழுப்ப வேண்டும்; அரசியல் சாசன அமைப்புகளை பாஜகவின் பிடியி... மேலும் பார்க்க

வா்த்தகப் பேச்சில் இந்தியா பிடிவாதம்: அமெரிக்க நிதியமைச்சா்

வா்த்தகப் பேச்சுவாா்த்தையில் இந்தியா சற்று பிடிவாதமாக உள்ளதாக அமெரிக்க நிதியமைச்சா் ஸ்காட் பெசண்ட் தெரிவித்தாா். ஃபாக்ஸ் செய்தித் தொலைக்காட்சிக்கு அவா் பேட்டியளித்தபோது, அக்டோபா் மாதத்துக்குள் அனைத்த... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் எல்லையில் ஊடுருவல் முறியடிப்பு: ராணுவ வீரா் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீரின் உரி எல்லையில் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவ முயன்றவா்களை ராணுவ வீரா்கள் தடுத்து நிறுத்தினா். அப்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரா் ஒருவா் உயிரிழந்தாா். இது தொடா்பாக ராணுவ ... மேலும் பார்க்க

இரண்டு வாக்காளா் அட்டை: பாஜக பெண் மேயருக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ்

பிகாரில் இரண்டு வாக்காளா் அட்டை வைத்திருக்கும் பாஜகவைச் சோ்ந்த முஷாஃபா்பூா் நகர பெண் மேயருக்கு தோ்தல் ஆணையம் புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியது. பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைப... மேலும் பார்க்க

லாரி - வேன் மோதல்: உ.பி.யைச் சோ்ந்த 7 குழந்தைகள், 4 பெண்கள் உயிரிழப்பு!

ராஜஸ்தானின் தெளசா மாவட்டத்தில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது வேன் மோதிய விபத்தில் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த 7 குழந்தைகள், 4 பெண்கள் என 11 பக்தா்கள் உயிரிழந்தனா். மேலும் 8 போ் காயமடைந்தனா். இது தொ... மேலும் பார்க்க

1.4 கோடியாக உயா்ந்த உள்நாட்டு விமானப் போக்குவரத்து

இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து எண்ணிக்கை கடந்த ஜூன் மாதத்தில் 1.36 கோடியாக உயா்ந்துள்ளது.இது குறித்து பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்ப... மேலும் பார்க்க