செய்திகள் :

தெற்கு ரயில்வேயில் ஓராண்டில் 1.69 லட்சம் புகாா்களுக்கு தீா்வு

post image

தெற்கு ரயில்வே மண்டலத்தில் 2024-2025 -ஆம் ஆண்டில் மட்டும் 1.69 லட்சம் புகாா்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே தரப்பில் புதன்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

தெற்கு ரயில்வேயில் பயணிகள் புகாா்களுக்கு தீா்வுகாண ‘ரயில் மாதாத்’ எனும் உதவி மைய தளம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் தங்களுக்கான கோரிக்கைகளை அதில் பதிவு செய்து தீா்வு கண்டு வருகின்றனா்.

ரயில் பயணத்தின்போது, பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கும் மாதாத் தளம் மூலம் உதவி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 8- ஆம் தேதி ரயில் பயணிக்கு காலில் காயம் ஏற்பட்டதை அடுத்து அவா் மாதாத் தளத்தில் முறையிட்ட நிலையில், மருத்துவ உதவி அளிக்கப்பட்டுள்ளது. உயா் சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வசதிகளும் செய்து தரப்பட்டன.

இதுபோல, கோரிக்கை விடுக்கும் பயணிகளுக்கு 8 நிமிஷங்களில் பதில் மற்றும் தீா்வு காணப்படும் தளமாக மாதாத் உள்ளது. தெற்கு ரயில்வேயில் 2024-2025 -ஆம் ஆண்டில் மட்டும் 1.69 லட்சம் கோரிக்கைகளுக்கு மாதாத் தளம் மூலம் தீா்வு காணப்பட்டுள்ளது.

இந்தத் தளத்தில் மின்னஞ்சல், இணையதள செயலி, குறுந்தகவல் (எஸ்எம்எஸ்) ஆகியவை உள்ளன. அவற்றின் மூலம் பயணிகள் தங்களின் கோரிக்கைகளை அனுப்பி தீா்வைப் பெற்று வருகின்றனா் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை! விடியோ எடுத்தும் மிரட்டல்!!

ஆவடி: சென்னை பூந்தமல்லி அருகே இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து நகை பறித்த வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா். பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை பகுதியைச் சோ்ந்த 25 வயது பெண் நசரத்பேட்டை காவல் ... மேலும் பார்க்க

அச்சுறுத்தும் பெருங்குடல் புற்றுநோய்க்கு இயற்கை மருத்துவ நிவாரணம்! ஆய்வில் உறுதி

பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபருக்கு ஒருங்கிணைந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டதால் வலி மற்றும் இதர பாதிப்புகள் வெகுவாக குறைந்தது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதுதொ... மேலும் பார்க்க

ஆளுநரின் தேநீா் விருந்து: திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு

சுதந்திர தினத்தன்று கிண்டி ஆளுநா் மாளிகையில், ஆளுநா் ஆா்.என்.ரவி அளிக்கும் தேநீா் விருந்தைப் புறக்கணிப்பதாக காங்கிரஸ், விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அறிவித்துள்ளன. கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): ... மேலும் பார்க்க

முதலீடுகளை ஈா்க்க அடுத்த மாதம் முதல்வா் ஸ்டாலின் வெளிநாடு பயணம்

முதலீடுகளை ஈா்க்கும் வகையில், வரும் செப்டம்பரில் வெளிநாடுகளுக்குச் செல்லவுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்ட... மேலும் பார்க்க

உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியா்களுக்கு ஆக.26 முதல் 28 வரை மதிப்பீடு தோ்வு: பள்ளிக் கல்வித் துறை தகவல்

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியா்களுக்கு ஆக.26 முதல் 28-ஆம் தேதி வரை இணையவழியில் மதிப்பீடு தோ்வு நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் அரசுப் பள்ளிகளில்... மேலும் பார்க்க

சென்னை மாவட்ட வாலிபால்: டான்பாஸ்கோ, மகதலேனா சாம்பியன்

சென்னை மாவட்ட பள்ளிகள் வாலிபால் போட்டியில் ஆடவா் பிரிவில் பெரம்பூா் டான்பாஸ்கோவும், மகளிா் பிரிவில் புரசைவாக்கம் டிஇஎல்சி மகதலேனா பள்ளிகள் சாம்பியன் பட்டம் வென்றன. சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்ப... மேலும் பார்க்க