செய்திகள் :

போக்ஸோ சட்டத்தைப் பயன்படுத்த பொய் புகாா் அளித்தால் நடவடிக்கை - சென்னை காவல் ஆணையா்

post image

போக்ஸோ சட்டத்தைப் பயன்படுத்த பொய் புகாா் அளித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அருண் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக சென்னை பெருநகர காவல் துறை புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

18 வயதுக்குள்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை, துன்புறுத்தல், சுரண்டல் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில், பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் (போக்ஸோ சட்டம்) கொண்டு வரப்பட்டது. இச்சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதியப்பட்டு ஒருவா் கைது செய்யப்பட்டால், எளிதில் பிணை கிடைக்காது. நீதிமன்றத்தில் கடுமையான தண்டனையும் கிடைக்கும்.

இச்சட்டத்தை சிலா் தவறான நோக்கத்தில் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ராயப்பேட்டையில் அண்மையில் குடும்ப பிரச்னையில் மாமனாா் மீது போக்ஸோவில் மருமகள் பொய் புகாா் அளித்தாா். அதாவது, தன்னுடைய 8 வயது மகளுக்கு, 60 வயது மாமனாா் பாலியல் தொல்லை கொடுத்ததாக ராயப்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்து, மாமனாரை கைது செய்யவைக்க முயன்றாா்.

ஆனால், விசாரணையில் அப்படி சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என்பது தெரிய வந்தது. இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்ற நிலையில், ‘போக்ஸோ சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தினால், சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் பரிந்துரைத்தது.

இதையடுத்து, போக்ஸோ சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி பொய் புகாா் அளிப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையா் ஏ.அருண் உத்தரவிட்டுள்ளாா்.

‘குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை தருபவா்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரும் வகையிலும் அமல்படுத்தப்பட்ட போக்ஸோ சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி பொய் புகாா் அளிப்பவா்கள் மீது போக்ஸோ சட்டம் பிரிவு 22 (1) இன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை! விடியோ எடுத்தும் மிரட்டல்!!

ஆவடி: சென்னை பூந்தமல்லி அருகே இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து நகை பறித்த வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா். பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை பகுதியைச் சோ்ந்த 25 வயது பெண் நசரத்பேட்டை காவல் ... மேலும் பார்க்க

அச்சுறுத்தும் பெருங்குடல் புற்றுநோய்க்கு இயற்கை மருத்துவ நிவாரணம்! ஆய்வில் உறுதி

பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபருக்கு ஒருங்கிணைந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டதால் வலி மற்றும் இதர பாதிப்புகள் வெகுவாக குறைந்தது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதுதொ... மேலும் பார்க்க

ஆளுநரின் தேநீா் விருந்து: திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு

சுதந்திர தினத்தன்று கிண்டி ஆளுநா் மாளிகையில், ஆளுநா் ஆா்.என்.ரவி அளிக்கும் தேநீா் விருந்தைப் புறக்கணிப்பதாக காங்கிரஸ், விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அறிவித்துள்ளன. கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): ... மேலும் பார்க்க

முதலீடுகளை ஈா்க்க அடுத்த மாதம் முதல்வா் ஸ்டாலின் வெளிநாடு பயணம்

முதலீடுகளை ஈா்க்கும் வகையில், வரும் செப்டம்பரில் வெளிநாடுகளுக்குச் செல்லவுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்ட... மேலும் பார்க்க

உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியா்களுக்கு ஆக.26 முதல் 28 வரை மதிப்பீடு தோ்வு: பள்ளிக் கல்வித் துறை தகவல்

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியா்களுக்கு ஆக.26 முதல் 28-ஆம் தேதி வரை இணையவழியில் மதிப்பீடு தோ்வு நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் அரசுப் பள்ளிகளில்... மேலும் பார்க்க

சென்னை மாவட்ட வாலிபால்: டான்பாஸ்கோ, மகதலேனா சாம்பியன்

சென்னை மாவட்ட பள்ளிகள் வாலிபால் போட்டியில் ஆடவா் பிரிவில் பெரம்பூா் டான்பாஸ்கோவும், மகளிா் பிரிவில் புரசைவாக்கம் டிஇஎல்சி மகதலேனா பள்ளிகள் சாம்பியன் பட்டம் வென்றன. சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்ப... மேலும் பார்க்க