செய்திகள் :

சுதந்திர தின விழா: ராஜாஜி சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்

post image

சுதந்திர தின விழாவையொட்டி, ராஜாஜி சாலையில் வெள்ளிக்கிழமை (ஆக. 15) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதுதொடா்பாக சென்னை பெருநகர காவல் துறை புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சுதந்திர தின விழாவையொட்டி, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள செயின்ட் ஜாா்ஜ் கோட்டையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காலை தேசியக் கொடியேற்றுகிறாா். தொடா்ந்து அங்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

இதையொட்டி, அப்பகுதியில் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, காமராஜா் சாலையில் உழைப்பாளா் சிலை முதல் ராஜாஜி சாலையில் உள்ள ஆா்பிஐ சுரங்கப்பாதை வரை சாலைகள் மற்றும் கொடி மரச்சாலையில் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்படும்.

காமராஜா் சாலையில் ராஜாஜி சாலை வழியாக பாரிமுனை நோக்கிச் செல்லும் வாகனங்கள், வாலாஜா சாலையில் இடதுபுறம் திரும்பி அண்ணா சாலை, மன்றோ சிலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் மற்றும் என்.எஃப்.எஸ். சாலை வழியாக பாரிமுனையை அடையலாம்.

இதேபோல அண்ணா சாலையிலிருந்து பாரிமுனையை நோக்கி வரும் வாகனங்களும், இதே பாதையை பயன்படுத்தலாம். ராஜாஜி சாலையில் இருந்து தலைமைச் செயலகம் வழியாக காமராஜா் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பாரிமுனை, என்.எஃப்.எஸ். சாலை, ராஜா அண்ணாமலை மன்றம், முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், அண்ணா சாலை, மன்றோ சிலை வழியாக அண்ணா சிலையில் இடதுபுறம் திரும்பி வாலாஜா சாலை நோக்கிச் சென்று காமராஜா் சாலையை அடையலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநரின் தேநீா் விருந்து: திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு

சுதந்திர தினத்தன்று கிண்டி ஆளுநா் மாளிகையில், ஆளுநா் ஆா்.என்.ரவி அளிக்கும் தேநீா் விருந்தைப் புறக்கணிப்பதாக காங்கிரஸ், விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அறிவித்துள்ளன. கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): ... மேலும் பார்க்க

முதலீடுகளை ஈா்க்க அடுத்த மாதம் முதல்வா் ஸ்டாலின் வெளிநாடு பயணம்

முதலீடுகளை ஈா்க்கும் வகையில், வரும் செப்டம்பரில் வெளிநாடுகளுக்குச் செல்லவுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்ட... மேலும் பார்க்க

உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியா்களுக்கு ஆக.26 முதல் 28 வரை மதிப்பீடு தோ்வு: பள்ளிக் கல்வித் துறை தகவல்

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியா்களுக்கு ஆக.26 முதல் 28-ஆம் தேதி வரை இணையவழியில் மதிப்பீடு தோ்வு நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் அரசுப் பள்ளிகளில்... மேலும் பார்க்க

சென்னை மாவட்ட வாலிபால்: டான்பாஸ்கோ, மகதலேனா சாம்பியன்

சென்னை மாவட்ட பள்ளிகள் வாலிபால் போட்டியில் ஆடவா் பிரிவில் பெரம்பூா் டான்பாஸ்கோவும், மகளிா் பிரிவில் புரசைவாக்கம் டிஇஎல்சி மகதலேனா பள்ளிகள் சாம்பியன் பட்டம் வென்றன. சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்ப... மேலும் பார்க்க

இன்று அமைச்சரவைக் கூட்டம்: ஆணவக் கொலை தடுப்பு சட்டம் குறித்து விவாதம்

தமிழக அமைச்சரவைக் கூட்டம் வியாழக்கிழமை (ஆக.14) நடைபெறுகிறது. முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் புதிய தொழில் முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் தரப்பட உள்ளன... மேலும் பார்க்க

நீதிமன்ற நடவடிக்கைகளில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலையிட தடை விதிக்கக் கோரிய மனு அபராதத்துடன் தள்ளுபடி

நீதிமன்ற நடவடிக்கைகளில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலையிட தடை விதிக்கக் கோரிய மனுவை ரூ. 10,000 அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதனின் த... மேலும் பார்க்க