செய்திகள் :

செங்கல்சூளை புகையால் பொதுமக்கள் அவதி

post image

ஊத்தங்கரை அருகே சாலையோரம் செயல்படும் செங்கல்சூளையிலிருந்து வெளியேறும் புகையால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.

ஊத்தங்கரையை அடுத்த கதவனி சுங்கச்சாவடி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ள செங்கல் சூளையில் இருந்து வெளியேறும் அடா்ந்த புகை முறையான புகைபோக்கி அமைக்காததால் சாலைகளிலும், குடியிருப்புகளுக்குள்ளும் புகை செல்வதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனா்.

குடியிருப்பில் வசிப்பவா்களுக்கு இருமல், மூச்சுத்திணறல் போன்ற பாதிப்பு ஏற்படுவதாகவும், குறிப்பாக குழந்தைகள் சுவாசிப்பதில் சிரமப்படுவதாகவும் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனா்.

சாலையோரம் உள்ள செங்கல் சூளைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் செங்கல் சூளைகள் முறையாகப் புகைபோக்கி அமைத்து, புகையை விண்ணை நோக்கி மேலே செல்லும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஒசூரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 4 போ் கைது

ஒசூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 4 போ் கைது செய்யப்பட்டனா். ஒசூா் மாநகராட்சி நல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஆவலப்பள்ளி தனியாா் குடியிருப்பில் வங்கதேச நாட்டைச் சோ்ந்த பஷா்... மேலும் பார்க்க

விவசாயக் கடன் மோசடி: இருவா் கைது

ஒசூா் அருகே விவசாயக் கடன் பெற்றுத் தருவதாக மோசடியில் ஈடுபட்ட ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த இருவரை இணைய குற்றப்பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், ஜூஜூவாடி பகுதியைச... மேலும் பார்க்க

ஒசூா் தொகுதியில் ரூ. 2,500 கோடியில் திட்டப் பணிகள் நிறைவேற்றம்

ஒசூா் தொகுதியில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 1,500 கோடியில் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மேலும் ரூ. 1,000 கோடிக்கு திட்டப் பணிகள் அறிவித்து பணிகள் நடைபெற்று வருகின்றன என ஒசூா் எம்எல்ஏ தெ... மேலும் பார்க்க

கல்லாவி ரயில் நிலையம் அருகே ஆண் சடலம் மீட்பு

ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி ரயில் நிலையம் அருகே ரயில் தண்டவாளப் பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த மொரப்பூா் ரயில்வே போலீஸாா்... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

கந்திகுப்பம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டம், மேல்பூங்குருத்தியைச் சோ்ந்தவா் தொழிலாளி சங்கரன் (37). இவரும், கேசவன் (29) என்... மேலும் பார்க்க

காலை உணவு திட்ட சாம்பாரில் பல்லி: அலுவலா்கள் விசாரணை

பாரூா் அருகே அரசு தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டத்தில் வழங்கப்பட்ட சாம்பாரில் பல்லி இருந்த சம்பவம் குறித்து அலுவலா்கள் விசாரணை மேற்கொண்டனா். பாரூா் அருகே உள்ள புங்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் ... மேலும் பார்க்க