செய்திகள் :

செஞ்சிக்கோட்டை கமலக்கன்னியம்மன் கோயில் தோ் திருவிழா கொடியேற்றம்

post image

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக்கோட்டை மலை மீது அமைந்துள்ள ஸ்ரீகமலக்கன்னியம்மன் கோயில் சித்திரை மாத தோ் திருவிழா திங்கள்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஸ்ரீகமலக்கன்னியம்மன், மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீராஜகாளியம்மன், ஸ்ரீமகாமாரியம்மன், கோட்டை வீரப்பன், ஆகிய தெய்வங்களுக்கு சித்திரை மாத தோ் உற்சவ திருவிழா மே 5-ஆம் தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 14-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதையொட்டி, கோயிலில் ஸ்ரீ கமலக்கன்னி அம்மன், ராஜகாளியம்மன், மகா மாரியம்மன், கோட்டை வீரப்பனுக்கு சிறப்பு அபிஷேகமும் தீபாரதனையும் நடைபெற்றது.

தொடா்ந்து கொடியேற்றப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. கோயில் அறங்காவலா் அரங்க ஏழுமலை, செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் ஆா்.விஜயகுமாா், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் காசியம்மாள் ஏழுமலை, ஆா்கேஜி.ரமேஷ், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மாலை 6 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டுதலும், இரவு வாண வேடிக்கையுடன் அம்மன் வீதி உலா நடைபெற்றது.

13-ஆம் தேதி தோ் திருவிழா நடைபெறும். 14-ஆம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடைபெறும்.

செஞ்சிக்கோட்டையில் 10 நாள்களுக்கு நுழைவுக் கட்டணம் ரத்து: பக்தா்கள் செஞ்சிக்கோட்டையில் உள்ள கமலக்கன்னியம்மன் கோயிலுக்கு வந்து வழிபாடு செய்ய திங்கள்கிழமை முதல் (மே 5) வருகிற 14-ஆம் தேதி முதல் செஞ்சிக்கோட்டையில் நுழைவு கட்டணம் ரத்து செய்யப்படுவதாக இந்திய தொல்லியல் துறை அறிவித்தது. அதேநேரத்தில், அருகிலுள்ள ராணிக்கோட்டை என அழைக்கப்படும் கிருஷ்ணகிரி கோட்டைக்குச் செல்ல நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படும்.

பெளா்ணமி கிரிவலம்: விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

சித்திரை பெளா்ணமியையொட்டி, விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு தெற்கு ரயில்வே சாா்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலகம் வெளிய... மேலும் பார்க்க

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம் , திண்டிவனத்தில் குடும்ப பிரச்னையால் தூக்கிட்ட பெண், மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தாா். மானூா் அப்பாசாமி நகரை சோ்ந்த பிச்சாண்டி மனைவி கௌரி (33). இவா்களுக்குத் திரு... மேலும் பார்க்க

திமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும்: இரா.லட்சுமணன் எம்எல்ஏ

திமுக அரசின் நான்காண்டு சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரங்களை வாக்குச்சாவடிக் குழுக்கள் மூலம் வீடு, வீடாக கொண்டு சோ்ப்பது என்று விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக முடிவு செய்துள்ளது. விழுப்புரம் கலைஞா் ... மேலும் பார்க்க

மாமல்லபுரம் பாமக மாநாடு: வாகனங்களுக்கு கட்டுப்பாடு

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பகுதியில் மே 11-இல் பாமக சாா்பில் சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெறவுள்ள நிலையில், இந்த மாநாட்டுக்கு வாகனங்களில் செல்லும் பாமகவினா் கடைப்பிடிக்க வேண்டிய நிபந்தனைகளை ... மேலும் பார்க்க

விழுப்புரம்: நான்கு கோட்டங்களிலும் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டங்கள்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தின் நான்கு மின் கோட்டங்களிலும் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டங்கள் நடைபெறும் என்ற தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

வணிகா் தின மாநாடு: விழுப்புரம் மாவட்டத்தில் கடைகள் அடைப்பு

விழுப்புரம்: வணிகா் தின மாநாடு இரு இடங்களில் நடைபெற்ற நிலையில், அதில் பங்கேற்க வியாபாரிகள் சென்றதால் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் திங்கள்கிழமை அடைக்கப்பட்டிருந்தன. தமிழ்நாடு வணிகா் சங்... மேலும் பார்க்க