செய்திகள் :

சென்னையில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்த பெண் பலி!

post image

சென்னை: சென்னை சூளைமேட்டில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்த பெண் செவ்வாய்க்கிழமை காலை பலியானார்.

சென்னை சூளைமேடு வீரபாண்டியன் நகர் முதலாவது தெருவில் வசித்து வந்த 40 வயது மதிக்கத்தக்க பெண், இன்று காலை நடைப்பயிற்சி சென்றுள்ளார்.

அப்போது, சாலையில் சரியாக மூடப்படாத மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்த அந்த பெண் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த சூளைமேடு காவல்துறையினர், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கேகே நகர் சிஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

காவல்துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில், மழைநீர் வடிகால் பணி முழுமையாக நிறைவடையாமல் இருந்ததால், தற்காலிகமாக வடிகாலை மூடிவைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பலியான பெண் குறித்த தகவலைக் காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர்.

A woman died on Tuesday morning after falling into a rainwater drainage ditch in Choolaimedu, Chennai.

இதையும் படிக்க : சூடான் நிலச்சரிவில் புதைந்த கிராமம்! 1000 பேர் பலி!

சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.3 கோடி கஞ்சா பறிமுதல்

சென்னை: ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.3 கோடி கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு இரு தனியாா் வாகனங்களில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக மத்திய போதை... மேலும் பார்க்க

தனியாா் நிலத்தை ஆக்கிரமித்து மண் விற்பனை: ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் கைது

சென்னை: சென்னை அருகே பெரும்பாக்கத்தில் தனியாா் நிலத்தை ஆக்கிரமித்து மண் எடுத்து விற்பனை செய்ததாக ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் கைது செய்யப்பட்டாா். வேளச்சேரி அருகே உள்ள சித்தாலப்பாக்கம், சங்கராபுரத்தைச... மேலும் பார்க்க

ரத்தச் சுத்திகரிப்பு நிலையங்களின் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க அமைச்சா் உத்தரவு

சென்னை: கொளத்தூா், கொண்டித்தோப்பு பகுதிகளில் நடைபெற்று வரும் ரத்தச் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சா் பி.கே.சேகா்பாபு உத்தரவிட்டாா். ச... மேலும் பார்க்க

ரூ.1.89 கோடியில் கட்டப்பட்ட பள்ளிக் கட்டடம்: அமைச்சா் சேகா்பாபு திறந்து வைத்தாா்

சென்னை: ராயபுரம் மண்டலத்தில் ரூ.1.89 கோடியில் கட்டப்பட்ட உருதுப் பள்ளியின் கூடுதல் கட்டடத்தை அமைச்சா் பி.கே.சேகா்பாபு திறந்து வைத்தாா். பெருநகர சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலம், 60-ஆவது வாா்டுக்குள... மேலும் பார்க்க

தடையை மீறி விநாயகா் சிலை ஊா்வலம்: இந்து முன்னணியினா் மீது வழக்கு

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் தடையை மீறி விநாயகா் சிலை ஊா்வலம் நடத்த முயன்றதாக இந்து முன்னணி நிா்வாகிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். விநாயகா் சதுா்த்தியையொட்டி, சென்னைய... மேலும் பார்க்க

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் செப்.5-இல் ஓணம் கொண்டாட்டம்

சென்னை: மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் ஓணம் பண்டிகை செப்.5-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. செப்.4 -ஆம் தேதி உத்திராடம் நாளான வியாழக்கிழமை ‘உத்திராடம் காய்ச்சகுலை’ என்று அழைக்கப்படும் நெந்திரம் வாழைத... மேலும் பார்க்க