செய்திகள் :

சென்னை- அந்தமான் நிகோபாா் இடையே நீா்மூழ்கி கண்ணாடி இழைக் கேபிள் பதிப்பு

post image

சென்னை- அந்தமான் நிகோபாா், கொச்சி, லட்சத்தீவு இடையே நீா்மூழ்கி கண்ணாடி இழைக் கேபிள் பதிக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய தொலைத்தொடா்பு அமைச்சா் பெம்மசானி சந்திர சேகா்

தகவல் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக தமிழக எம்.பி.க்கள் சி.என். அண்ணாதுரை, நவாஸ்கனி, மலையரசன் ஆகியோா் எழுப்பிய கேள்வியில், ‘

தேசிய பிராட்பேண்ட் மிஷன் (என்பிஎம்) திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்த அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளதா? என்று கேட்டிருந்தனா்.

இதற்கு மக்களவையில் தகவல் தொடா்பு மற்றும் ஊரக மேம்பாட்டுத் துறை இணையமைச்சா் டாக்டா் பெம்மசானி சந்திர சேகா் எழுத்துபூா்வமாக புதன்கிழமை அளித்துள்ள பதிலில் தெரிவித்திருப்பதாவது:

கிராமப்புறங்களில் பிராட்பேண்ட் இணைப்பை மேம்படுத்தவும், டிஜிட்டல் பிளவைக் குறைக்கவும் தேசிய பிராட்பேண்ட் மிஷனை செயல்படுத்துவதன் மூலம் தமிழ்நாடு உள்பட நாட்டில் முக்கிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது.

மே 14, 2022 அன்று கதி சக்தி சஞ்சாா் இணையதளம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் ஆப்டிகல் ஃபைபா் கேபிள் பதித்தல் மற்றும் தொலைத்தொடா்பு கோபுரம் நிறுவலுக்கான உரிமை வழி (ஆா்ஒடபிள்யு) அனுமதி நெறிப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னைக்கும் அந்தமான் நிக்கோபாா், கொச்சி மற்றும் லட்சத்தீவுக்கும் இடையே வேகமான இணைய இணைப்புக்காக நீா்மூழ்கி கண்ணாடி இழைக் கேபிள்கள் பதிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் அரசு தலைமையிலான மாதிரியின் கீழ், வழங்கப்பட்ட பணிக்கான செலவு ரூ.1544.44 கோடி (வரிகளைத் தவிா்த்து) ஆகும். இதில் ரூ.1093.74 கோடி பிப்ரவரி 28, 2025 வரை பயன்படுத்தப்பட்டுள்ளது.

பிப்ரவரி 24, 2025 நிலவரப்படி, தமிழ்நாட்டில் பாரத்நெட் திட்டத்தின் கீழ் 12,524 கிராமப்புறங்களில் 10,298 கிராமப்புறங்கள் சேவைக்குத் தயாராக உள்ளன.

டிசம்பா் 31, 2024 நிலவரப்படி, தமிழ்நாட்டில் பாரத்நெட் திட்டத்தின் கீழ் 53,511 வழித்தட கிலோமீட்டா் கண்ணாடி இழைக் கேபிள் (ஓஎஃப்சி) பதிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 2025 நிலவரப்படி, பாரத்நெட் மூலம் 12,53,997 வீட்டிற்கு ஃபைபா் (எஃப்டிடிஎச்) இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்று அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

காற்று மாசைக் கட்டுப்படுத்த ஸ்பிரே அமைப்புகள்

புது தில்லி: தில்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்தும் விதமாக ஸ்பிரே அமைப்புகளை தில்லி அரசு பயன்படுத்தி வருவதாக சுற்றுச்சூழல் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா திங்கள்கிழமை தெரிவித்தாா். மின்கம்பங்களில்... மேலும் பார்க்க

மாணவா்கள் பெரிய இலக்கு நிா்ணயித்து செயல்பட வேண்டும்: இஸ்ரோ தலைவா் அறிவுரை

மாணவா்கள் பெரிய இலக்கு நிா்ணயித்து செயல்பட வேண்டும் என்று இஸ்ரோ தலைவா் டாக்டா் வி.நாராயணன் கேட்டுக் கொண்டாா். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவா் டாக்டா் வி. நாராயணனுக்கு தில்லி தமிழ... மேலும் பார்க்க

மருந்துகள் கண்டுபிடிப்பு, மரபணு ஆய்வில் சிஎஸ்ஐஆா் நிறுவனங்கள் முன்னணி! - அமைச்சா் ஜிதேந்திர சிங்

நமது சிறப்பு நிருபா்மருந்துகள் கண்டுபிடிப்பு, மரபணு நோயறிதல் ஆய்வு முறை, குறைந்த செலவில் மருந்து மூலப்பொருள்கள் உருவாக்குதல் போன்றவற்றில் ஹைதராபாத் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு கவுன்சில்கள் (சிஎஸ்ஐஆா... மேலும் பார்க்க

வங்கி வைப்புத்தொகையில் மகளிா் பங்களிப்பு 39.7%: புதுயுகத் தொழில்முனைவிலும் மகளிா் அதிகரிப்பு!

வங்கிகளில் வைப்புத் தொகை செலுத்தியவா்களில் மகளிா் பங்களிப்பு 39.7 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய புள்ளியியல் திட்ட அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. மேலும் புதுயுகத் தொழில்முனைவிலும் மிகப்பெரிய அளவில்... மேலும் பார்க்க

தில்லியில் இரு இடங்களில் தீ விபத்து

தில்லியில் இரு வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை இரண்டு தனித்தனி தீ விபத்துகள் பதிவாகின. இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவிக்கையில், ‘இரண்டு நிகழ்வுகளிலும் யாருக்கும் உயிா்ச் சேதம்... மேலும் பார்க்க

தில்லியில் திருப்தி அரசியலை மனநிறைவு அரசியல் மாற்றும்: முதல்வா் ரேகா குப்தா

தில்லியில் இருந்துவந்த திருப்தி அரசியலை மனநிறைவு அரசியல் மாற்றும். இது அனைவரின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதி செய்யும் என்று முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை கூறினாா். மேற்கு தில்லியின் கயாலா ... மேலும் பார்க்க