செய்திகள் :

சென்னை ஐஐடி மீண்டும் தேசிய தரவரிசையில் முதலிடம்: ஏழாவது ஆண்டாக ஆதிக்கம்!

post image

சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐஐடி மீண்டும் முதலிடத்தைப் பிடித்து ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது.

தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு(என்ஐஆர்எஃப்) 2025 கல்வி அமைச்சகத்தால் ஆண்டுதோறும் சிறந்த கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்தப் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு மாணவர்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் சேர மிகவும் உதவியாக உள்ளது.

அதன் அடிப்படையில் கல்வி அமைச்சகம் 10வது தரவரிசைப் பதிப்பை இன்று அறிவித்தது. ஒட்டுமொத்த பிரிவில் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக சென்னை ஐஐடி முதலிடத்தைப் பிடித்துள்ளது. சிறந்த பல்கலைக்கழகமாக ஐஐஎஸ்சி பெங்களூர் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜெஎன்யு) புதுதில்லி மற்றும் மணிப்பால் உயர் கல்வி அகாடமி முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளன.

கல்லூரிகள் பிரிவில் தில்லியில் உள்ள இந்து கல்லூரி முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டது. மிராண்டா ஹவுஸ் மற்றும் ஹன்ஸ்ராஜ் கல்லூரி இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தன.

பொறியியல் பிரிவிலும் சென்னை ஐஐடி முதலிடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஐஐடி தில்லி மற்றும் ஐஐடி மும்பை ஆகியவையாகும். நாட்டின் சிறந்த மேலாண்மை நிறுவனமாக ஐஐஎம் அகாமதாபாத் உருவெடுத்துள்ளது. அதேநேரத்தில் ஜாமியா ஹம்தார்ட் புதுதில்லி மருந்தகப் பிரிவில் முதல் இடத்தைப் பிடித்தது. மருத்துவக் கல்வித் துறையில், புது தில்லி எய்ம்ஸ் இந்தியாவின் சிறந்த மருத்துவக் கல்லூரியாக தனது நிலையை மீண்டும் தக்க வைத்துக் கொண்டது.

மீரட்: பெண்களைக் கடத்தும் நிர்வாண கும்பல்! போலீஸார் விசாரணை

உத்தர பிரதேசத்தில் பெண்களை கடத்த முயற்சிக்கும் நிர்வாண கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.உத்தர பிரதேச மாநிலத்தில் பராலா கிராமத்தில் வேலைக்குச் சென்றுகொண்டிருந்த பெண் ஒருவரை நிர்வாணமாக ஓடிவந்த இரு ஆண்க... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு!

புது தில்லி: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு - பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இன்று(செப். 6) சந்தித்துப் பேசினர்.குடியரசு துணைத் தலைவராகப் பதவி வகித்த ஜகதீப் தன்கா் கடந்த ஜூலையில் தனது பதவியை ராஜிநாமா... மேலும் பார்க்க

குஜராத்: 2,600 அடி உயர மலைக் கோயிலில் ரோப்காரின் கேபிள் அறுந்து விபத்து: 6 பேர் பலி!

குஜராத்தில் கடல் மட்டத்திலிருந்து 2,600 அடி உயரத்தில் அமைந்துள்ள பாவாகத் மலைக் கோயிலில் ரோப்காரின் கேபிள் அறுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர்.குஜராத் மாநிலம் பஞ்சமஹால் மாவட்டத்தில் 800 மீட்டர் உயரத்தில் அம... மேலும் பார்க்க

அமெரிக்காவுடனான உறவு சீர்குலையக் கூடாது: அகிலேஷ் யாதவ்

அமெரிக்காவுடனான உறவு சீர்குலையக் கூடாது என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருள்கள் மீது அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் மொத்தம் 50 சதவீதம் வரியை வி... மேலும் பார்க்க

நீட் தேர்வு கலந்தாய்வில் மோசடி: 11 தேர்வர்கள் மீது வழக்குப்பதிவு!

நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெற்ற மருத்துவக் கலந்தாய்வில் மோசடியில் ஈடுபட்டதாக 11 தேர்வர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.உத்தரப் பிரதேசத்தில் சான்றிதழ் மோசடியில் ஈடுபட்டு நீட் தேர்வு மதிப்ப... மேலும் பார்க்க

கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பஞ்சாப்: தில்லி அரசு ரூ. 5 கோடி நிதியுதவி

கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பஞ்சாப் மாநில மக்களுக்கு தில்லி அரசு தரப்பிலிருந்து ரூ. 5 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.கனமழை, வெள்ளத்தால் பஞ்சாப், உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசம், அஸ்ஸாம், ஜம்மு-... மேலும் பார்க்க