செய்திகள் :

சென்னை: கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி - சிறைக்கு சென்ற பின்னணி

post image

சென்னை, கொளத்தூர், லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் காதர் பாஷா (42). இவரின் மனைவி நிலவர் நிஷா. கடந்த 10.04.2025-ம் தேதி அதிகாலை காதர் பாஷா தன் பக்கத்து வீட்டில் வசிக்கும் முத்துவழிவிட்டான் என்பவரின் வீட்டு கதவைத் தட்டினார். கதவை திறந்து பார்த்தபோது தீக்காயங்களுடன் காதர் பாஷா, துடித்துக் கொண்டிருந்தார். உடனே காதர் பாஷாவிடம் முத்துவழிவிட்டான் என்ன நடந்தது என்று விசாரித்திருக்கிறார். அப்போது காதர் பாஷா, நான் தூங்கிக் கொண்டிருக்கும் போது என்னுடைய மனைவி நிலவர் நிஷா, கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிவிட்டார் என பதற்றத்துடன் கூறியிருக்கிறார். இதையடுத்து காதர் பாஷாவை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து புழல் காவல் நிலையத்துக்கு மருத்துவமனையிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

கணவரைக் கொலை செய்ய முயன்ற மனைவி

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் காதர் பாஷாவிடமும் அவரை மருத்துவமனையில் சேர்த்த முத்துவழிவிட்டானிடமும் விசாரணை நடத்தினர். பின்னர் இதுதொடர்பாக கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதிந்த போலீஸார், காதர் பாஷாவின் மனைவி நிலவர் நிஷாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், `தினமும் குடித்துவிட்டு சொல்ல முடியாத தொல்லைகளை காதர் பாஷா செய்து வந்தார். அவரால் வீட்டில் நிம்மதியில்லை. சம்பவத்தன்றும் மதுபோதையில் என்னிடம் காதர்பாஷா தகராறு செய்தார். பின்னர் அவர் தூங்கச் சென்றுவிட்டார். அவர் உயிரோடு இருந்தால் நிம்மதியாக வாழ முடியாது எனக் கருதி வீட்டிலிருந்த எண்ணெய்யை அடுப்பில் வைத்து கொதிக்க வைத்தேன். பின்னர் தூங்கிக் கொண்டிருந்த என் கணவர் மீது எண்ணெய்யை ஊற்றினேன்’ என்று கூறினார். அதனால் காதர் பாஷாவின் மனைவி நிலவர் நிஷாவை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கணவரின் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி அவரை மனைவியே கொலை முயற்சி செய்த சம்பவம் புழல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

தேனி: பள்ளியில் ஈட்டி குத்தி காயமடைந்த சிறுவன்; சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு!

தேனி மாவட்டம் கோம்பை துரைச்சாமிபுரம் பகுதியைச் சார்ந்தவர்கள் சந்திரன் - சுகன்யா தம்பதியர். இவர்களது மகன் சாய் பிரகாஷ் (13) உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டியில் அரசு உதவி பெறும் பள்ளி விடுதியில் த... மேலும் பார்க்க

சென்னை: பாலியல் சீண்டல்? - முதியவர் கொலையில் திருநங்கை கைது!

சென்னை, அபிராமபுரம், விசாலாட்சி தோட்டம் பகுதியில் யாசகம் செய்து வந்தவர் சேகர் (57). இவருக்கு திருமணமாகவில்லை. கடந்த 07.08.2025-ம் தேதி இரவு விசாலாட்சி தோட்டம் பகுதியில் சேகர் நின்றுக் கொண்டிருந்தார். ... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: காவல் நிலையம் அருகில் இளைஞர் படுகொலை - திமுக கவுன்சிலர் கைது; இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

கவுன்சிலரின் கணவன் சுதாகர்ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகிலுள்ள அம்மனூர் பகுதியைச் சேர்ந்த தி.மு.க ஒன்றியக் கவுன்சிலர் அஸ்வினி (வயது 36). இவரின் கணவன் சுதாகர் (வயது 45) ஃபைனான்ஸ் விட்டு வட்டி வச... மேலும் பார்க்க

தூத்துக்குடி: பாலிடெக்னிக் கல்லூரியில் வெடித்த நாட்டு வெடி; 2 மாணவர்கள் காயம்; என்ன நடந்தது?

தூத்துக்குடி – பாளையங்கோட்டை சாலையில் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இக்கல்லூரியில் திருச்செந்தூர... மேலும் பார்க்க

குளச்சல்: சிறுமியை மிரட்டி கர்ப்பமாக்கிய உறவினர்; குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு சின்னக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் தேசலிங்கம்(42). இவர் கடந்த 6 மாதங்களாக கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை அடுத்த ரீத்தாபுரம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தனது மனைவி... மேலும் பார்க்க

`காதல் என்ன சாதியைப் பார்த்து வருவதா?' - இன்ஸ்டா பிரபலம் திவாகர் மீது நடிகை ஷகிலா புகார்!

சமூக வலைதளங்களில் பரவலாக அறியப்படும் திவாகர் என்பவர் மீது நடிகை ஷகிலா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய ஷகிலா, "இன்ஸ்டாவில் வரக் கூடிய தராதரம் இல்லாத ஆட்கள... மேலும் பார்க்க