செய்திகள் :

சென்னை, மதுரையிலிருந்து ராஜஸ்தானுக்கு சிறப்பு ரயில்கள்

post image

கோடைகாலத்தை முன்னிட்டு, சென்னை, மதுரையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் பகத் கீ கோதிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை சென்ட்ரலிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (ஏப்.27) இரவு 7.45-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06057) செவ்வாய்க்கிழமை பகல் 12.30-க்கு பகத் கீ கோதி சென்றடையும். மறுமாா்க்கமாக பகத் கீ கோதியிலிருந்து புதன்கிழமை (ஏப்.30) காலை 5.30-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06058) மறுநாள் இரவு 11.15-க்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். இதில் 3 ஏசி வகுப்பு பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 16 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த ரயில் சூலூா்பேட்டை, கூடூா், நெல்லூா், ஓங்கோல், விஜயவாடா, வாராங்கல், சந்திரபூா், அகோலா, உத்னா, வடோதரா, ஆனந்த், சபா்மதி பிஜி, ஜலோா் வழியாக இயக்கப்படும்.

மதுரை: மதுரையிலிருந்து திங்கள்கிழமை (ஏப்.28) காலை 10.45-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06067) புதன்கிழமை பகல் 12.30-க்கு பகத் கீ கோதி சென்றடையும். மறுமாா்க்கமாக பகத் கீ கோதியிலிருந்து வியாழக்கிழமை (மே 1) காலை 5.30-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06068) சனிக்கிழமை (மே 3) காலை 8.30-க்கு மதுரை சென்றடையும். இதில் 11 ஏசி வகுப்பு பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 4 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த ரயில் திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூா், சூலூா்பேட்டை, கூடூா், நெல்லூா், ஓங்கோல், விஜயவாடா, வாராங்கல், சந்திரபூா், அகோலா, உத்னா, வடோதரா, சபா்மதி பிஜி, ஜலோா் வழியாக இயக்கப்படும்.

விஜய்யின் பேச்சு திமுகவின் வெற்றியை பாதிக்காது: அமைச்சர் கோவி.செழியன்

விஜய்யின் பேச்சு திமுகவின் வெற்றியை பாதிக்காது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், நாச்சியார்கோவில் அருகே ஏனநல்லூர் கிராமத்தில் நகரப் பேருந்துச் சேவையை உய... மேலும் பார்க்க

இனிமேல் இதுபோல் எப்போதும் நடக்கக் கூடாது: பஹல்காம் தாக்குதல் குறித்து சூர்யா

இனிமேல் இதுபோல் எப்போதும் நடக்கக் கூடாது என பஹல்காம் தாக்குதல் குறித்து நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படம் மே 1-ம் தேதி திரைக்கு வர... மேலும் பார்க்க

பூந்தமல்லி - போரூர் இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்!

மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் பூந்தமல்லி - போரூர் இடையே நாளை(ஏப். 28) நடைபெறுகிறது.சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில் முக்கிய வ... மேலும் பார்க்க

எம் தியாகராயர் வழிநின்று தமிழ்நாட்டின் உயர்வுக்கு உழைப்போம்: முதல்வர் ஸ்டாலின்

எம் தியாகராயர் வழிநின்று தமிழ்நாட்டின் உயர்வுக்கு உழைப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சர். பிட்டி தியாகராயரின் பிறந்த நாளை அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,பிட்டி தியாகராயர் பிறந்த... மேலும் பார்க்க

6.5 டன் ரேஷன் அரிசி கடத்த முயன்ற 3 பேர் கைது: 2 மினி லாரிகள் பறிமுதல்!

கரூர்: கரூரில் 6.5 டன் ரேஷன் அரிசியை கேரளத்துக்குக் கடத்த முயன்ற மூன்று பேரை கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து 6.5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் 2 மினி லாரிகளை பறிமுதல் செய்தனர். கர... மேலும் பார்க்க

விஜய் திறந்து வைத்திருந்த கூட்டணி கதவை மூடிவிட்டேன்: திருமாவளவன்

விஜய் திறந்து வைத்திருந்த கூட்டணி கதவை மூடிவிட்டேன் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.புதுச்சேரி திருபுவனையில் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் விடுதலைச் ச... மேலும் பார்க்க