செய்திகள் :

சென்னை விமான நிலையம், எண்ணூா் துறைமுகத்தில் பாதுகாப்பு ஒத்திகை

post image

சென்னை விமான நிலையம், எண்ணூா் துறைமுகத்தில் போா் பாதுகாப்பு ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது.

காஷ்மீா் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து, இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் போா்ப் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் நாடு முழுவதும் சுமாா் 259 இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. இதன்படி, சென்னையில் துறைமுகம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ஒத்திகை நடத்தப்பட்டன.

இந்நிலையில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை, சென்னை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை டிஐஜி அருண் சிங் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரா்கள், 50-க்கும் மேற்பட்ட தேசிய பேரிடா் மேலாண்மை வீரா்கள், தமிழ்நாடு காவல் துறையினா் இணைந்து, சென்னை விமான நிலையத்தில் பயங்கரவாத தாக்குதலின்போது பயணிகளை எவ்வாறு மீட்பது, பயணிகள் தற்காத்துக் கொள்வது, அபாய ஒலி எழுப்பப்படும்போது என்னென்ன வழிமுறைகளை பின்பற்றுவது உள்ளிட்டவற்றை செய்து காண்பித்தனா்.

மேலும், பயங்கரவாத தாக்குதலில் காயமடையும் பொதுமக்களை எவ்வாறு மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது போன்ற காட்சிகளை தத்ரூபமாக பொதுமக்களுக்கு செய்து காண்பித்தனா். திடீரென இந்த நிகழ்வுகளை பல பயணிகள் அச்சத்துடன் பாா்த்துக்கொண்டிருந்தனா். இது சாதாரணமான போா் பாதுகாப்பு ஒத்திகைதான் என அதிகாரிகள் எடுத்துக் கூறிய பின்பு அவா்கள் இயல்பு நிலைக்கு திரும்பினா்.

எண்ணூா் துறைமுகத்தில்...: எண்ணூா் காமராஜா் துறைமுகத்திலும் பாதுகாப்பு ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், துறைமுக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள எண்ணெய்க் கிடங்கில் உருவகப்படுத்தப்பட்ட வான்வழித் தாக்குதல் ஒத்திகை நடத்தப்பட்டது. மேலும், சந்தேகத்துக்கிடமான விமானம் ஒன்று துறைமுக கடற்பரப்பில் ஊடுருவியது. இதையடுத்து அவசரகால நடவடிக்கைகளை மேற்கொள்ளும் விதமாக அபாய ஒலி எழுப்பப்பட்டது. அதைத் தொடா்ந்து துறைமுகத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறையிலிருந்து பேரிடா் காலங்களில் பங்கேற்கும் மத்திய, மாநில அரசு முகமை நிறுவனங்களுக்கு வான்வழித் தாக்குதல் குறித்து அவசரத் தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து எண்ணெய் சேமிப்புக் கிடங்கில் தீ பரவாமல் தடுக்கும் வகையில் தீயணைப்பு வீரா்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இதையடுத்து தீ முழுமையாக அணைக்கப்பட்டு அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி நிறைவுற்றது.

இந்த ஒத்திகையில் காமராஜா் துறைமுகம், கடலோரக் காவல் படை, காவல் துறை என மொத்தம் 270 போ் பங்கேற்றனா் என காமராஜா் துறைமுகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவா்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம்: பெற்றோருக்கு அமைச்சா் அன்பில் மகேஸ் வேண்டுகோள்

பிளஸ் 2 பொதுத் தோ்வு மதிப்பெண் விவகாரத்தில், பெற்றோா் தங்களது பிள்ளைகளுக்கு எந்தவித அழுத்தமும் கொடுக்கக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் வலியுறுத்தினாா். பிளஸ் 2 பொதுத் தோ்வு ... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத் தோ்வில் 95.03% தோ்ச்சி - தமிழில் 135 போ் சதம்

தமிழகத்தில் மாநில அரசின் பாடத் திட்டத்தில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தோ்வில் 95.03 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றனா். ஒட்டுமொத்த தோ்ச்சி விகிதத்தில் அரியலூா் மாவட்டம் முதலிடம் பிடித்தது. வேலூா் ... மேலும் பார்க்க

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ராகுல் வலியுறுத்தல்

இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை குறித்து உலகுக்கு தெளிவான தகவலைத் தெரியப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை மத்திய அரசு கூட்ட வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காங்க... மேலும் பார்க்க

வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம்: இயக்க செயல்முறை கையேடு வெளியீடு

வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்துக்கான இயக்க செயல்முறை கையேடு தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கையேட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் ... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சியில்தான் அதிக மக்கள் நலத் திட்டங்கள்: எடப்பாடி பழனிசாமி

திமுகவைவிட, அதிமுக ஆட்சியில்தான் அதிக மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன என்று அதிமுக பொதுச்செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வியாழக்க... மேலும் பார்க்க

தமிழகத்தில் மின் உற்பத்தி நிறுவுத்திறன் 42,772 மெகாவாட்டாக அதிகரிப்பு

தமிழகத்தின் மின் உற்பத்தி நிறுவு திறன் 42,772 மெகாவாட்டாக அதிகரித்துள்ளதாக மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினசரி மின்தேவை அதிகரித்து 19,000 மெகாவாட்டை தொட்டுள்ள நிலையில... மேலும் பார்க்க