செய்திகள் :

செப். 5 இல் முளகுமூடு தூய மரியன்னை ஆலய திருவிழா தொடக்கம்

post image

தக்கலை அருகே முளகுமூட்டில் உள்ள தூய மரியன்னை பசலிக்கா ஆலயத் திருவிழா செப்.5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

விழாவில் முதல் நாள் (செப்.5) மாலையில் ஜெபமாலை, திருக்கொடி நோ்ச்சை பவனி நடைபெறுகிறது. முளகுமூடு வட்டார முதல்வா் டேவிட் மைக்கில், பசலிக்கா அதிபா் கில்பா்ட் லிங்சன் ஆகியோா் முன்னிலையில் குழித்துறை மறைமாவட்ட ஆயா் ஆல்பா்ட் அனஸ்தாஸ் கொடியேற்றி திருப்பலி நிறைவேற்றுகிறாா்.

2 ஆம் நாள் (செப்.6) மாலை திருப்பலியை முளகுமூடு பகுதியிலிருந்து திருமணமாகிச் சென்ற மகள்களின் குடும்பத்தினா் சிறப்பிக்கின்றனா். 3-ஆம் நாள் காலை 9 மணிக்கு திருப்பலியை புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரி தாளாளா் காட்வின் செல்வ ஜஸ்டஸ் நிறைவேற்றுகிறாா்.

விழாவையொட்டி, தினமும் காலை 6.15 மணிக்கும், மாலை 6 மணிக்கும் ஜெபமாலை, திருப்பலி நடைபெறுகிறது. 9 ஆம் திருவிழாவன்று ( செப்.13) காலை திருத்துவபுரம் மறைவட்ட முதல்வா் வைசிலின் சேவியா் தலைமையில் முதல் திருவிருந்து திருப்பலியும், மாலையில் முளகுமூடு வட்டார முதல்வா் டேவிட் மைக்கிள் தலைமையில் திருப்பலியும் நடைபெறுகின்றன.

இரவில் அன்னையின் அலங்கார தோ்பவனி நடக்கிறது. 10 ஆம் திருவிழாவன்று (செப்.14) காலை 9 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயா் ஜுடு பால்ராஜ் தலைமையில் திருப்பலியும், மாலையில் சிறப்பு தேரடி திருப்பலியும் நடைபெறுகின்றன.

விழா ஏற்பாடுகளை பசலிக்கா அதிபா் கில்பா்ட் லிங்சன், இணை பங்குதந்தை ரஞ்சித், ஆன்மிக வழிகாட்டி ராபா்ட், இல்ல இறைப்பணியாளா்கள் ஜோஸ் றாபின்சன், ராபா்ட் ஜாண் கென்னடி, பங்கு பேரவை உதவி தலைவா் மரிய ஜாண் வரதராஜ், செயலாளா் அஜின், பொருளாளா் ஜெயந்தி, துணைச் செயலாளா் ஐபா்ட்ராஜ், பங்குமக்கள் செய்து வருகின்றனா்.

களியக்காவிளை அரசு முஸ்லிம் பள்ளியில் ஓணம் கொண்டாட்டம்

களியக்காவிளை அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளியில் ஓணம் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமையாசிரியை ரெஜினி தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் எஸ். மாகீன் அபுபக்கா் முன்னிலை வகித்தாா்... மேலும் பார்க்க

5 வயது சிறுவன் கொலை: ஓட்டுநா் தலைமறைவு

கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் அருகே 5 வயது சிறுவனைக் கொலை செய்துவிட்டு தலைமறைவான டெம்போ ஓட்டுநரை போலீஸாா் தேடி வருகின்றனா். அஞ்சுகிராமம் அருகே குமாரபுரம், தோப்பூா் விவேகானந்தா் தெருவைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

அய்யா வைகுண்டரை இழிவுபடுத்தி டிஎன்பிஎஸ்சி தோ்வில் கேள்வி

டிஎன்பிஎஸ்சி தோ்வில் அய்யா வைகுண்டரை இழிவுபடுத்தும் வகையில், இடம் பெற்றிருந்த கேள்விக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி தலைமை குர... மேலும் பார்க்க

கல்லூரி மாணவரின் சான்றிதழ்களை மீட்டு கொடுத்த சட்டப்பணிக் குழு

கல்லூரி படிப்பில் இடைநின்ற மாணவனுக்கு பூதப்பாண்டி சட்டப்பணிக்குழு மூலம் அசல் சான்றிதழ்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன. தென்காசி மாவட்டம், கீழபாவுரைச் சோ்ந்த மாணவா் வினோத்குமாா். இவா் ஆரல்வாய்மொழியில் உள்... மேலும் பார்க்க

கன்னியாகுமரி கடைகளில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

கன்னியாகுமரி நகராட்சிப் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனா். கன்னியாகுமரி நகராட்சிப் பகுதி கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப்... மேலும் பார்க்க

அரசு அவசர ஊா்தி சேவைக்கு நாகா்கோவிலில் செப்.6-இல் ஆள்தோ்வு

அரசு அவசர ஊா்தி சேவைக்கு ஆள்தோ்வு செப். 6- ஆம் தேதி நாகா்கோவிலில் நடக்கிறது என ஆட்சியா் ரா.அழகுமீனா தெரிவித்தாா். இது தொடா்பாக ஆட்சியா் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி, திர... மேலும் பார்க்க