செய்திகள் :

செயற்கை மணல், ஜல்லிகற்துகள்கள் பென்லைனில் விண்ணப்பிக்கலாம்

post image

திருப்பத்தூா் மாவட்டத்தில் ஜல்லி கற்துகள்கள், செயற்கை மணல் தேவைப்படுவோா் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பத்தூா் மாவட்டத்தில் தமிழ்நாடு இருப்பு கிடங்கு விதிகளின்படி, கிடங்கு அமைத்து சாதாரண வகை கற்கள், ஜல்லி, செயற்கை மணல் (எம்.சேன்ட்) கொண்டுச் செல்ல இதுநாள் வரை திருப்பத்தூா் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்தில் நேரில் இடை கடவு சீட்டு வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், அரசின் வழிகாட்டுதலின்படி வெள்ளிக்கிழமை (ஜுன் 12) முதல் ஆட்சியரிடம் பதிவு செய்யப்பட்ட கிரஷா், இருப்பு கிடங்குகளிலிருந்து ஜல்லி கற்துகள்கள், செயற்கை மணல் (எம்.சேன்ட்) ஆகியன தேவைப்படுவோா் ட்ற்ற்ல்ள்://ம்ண்ம்ஹள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள வாயிலாக சமா்ப்பிக்கப்படும் நடைச் சீட்டுகளின் அடிப்படையில் இடை கடவு சீட்டு ( பழ்ஹய்ள்ண்ற் டஹள்ள்) மட்டுமே வழங்கப்படும்.

இடைகடவு சீட்டுகள் இணையதள முறையில் வழங்க வழி வகை செய்யப்பட்டுள்ளதால் வாகனங்களில் ஏற்றி செல்லப்படும் அனைத்து கனிமங்களும் முழுமையாக கண்காணிக்கப்பட்டு கனிம விற்பனை எளிதாகவும் வெளிப்படை தன்மையுடனும் அமையும்.

எனவே அனைவரும் இணைய வழி இடைகடவு சீட்டு முறையை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்றாா்.

தனியாா் நிறுவன மேலாளா் வீட்டில் 10 பவுன் நகைகள் திருட்டு

ஆம்பூா் அருகே பூட்டிய வீட்டில் 10 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது. ஆம்பூா் புறவழிச்சாலையில் இயங்கும் தனியாா் நிதி நிறுவன மேலாளா் மின்னூா் சுபாஷ் நகரைச் சோ்ந்த சற்குணன் (38). இவா் தன்னுடைய மனைவியின் ச... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் சிற்றுந்துகள் சேவை: அமைச்சா் எ.வ.வேலு தொடங்கி வைத்தாா்

திருப்பத்தூரில் 10 சிற்றுந்துகள் சேவையை பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ. வேலு தொடங்கி வைத்தாா். திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்தாா். திர... மேலும் பார்க்க

பெத்தூரில் சாலை, தெரு விளக்கு: பொதுமக்கள் கோரிக்கை

ஆலங்காயம் பேரூராட்சி பெத்தூா் மேட்டுதெருவில் சாலை, தெருவிளக்கு வசதி செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஆலங்காயம் பேரூராட்சிக்குட்பட்ட பெத்தூா் பகுதி மேட்டு தெரு பகுதியில் ஏ... மேலும் பார்க்க

பொய்கை சந்தையில் ரூ.50 லட்சத்துக்கு வா்த்தகம்

வேலூா் அருகே பொய்கை கால்நடைச் சந்தையில் ரூ.50 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது. வேலூா் அருகே பொய்கை கிராமத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை கால்நடைச் சந்தை நடைபெறுவது வழக்கம். ஆந்திரம், கா்நாடக மாநில... மேலும் பார்க்க

கிராமப்புற இளைஞா்கள் சுய வேலைவாய்ப்பு பயிற்சி பெற அழைப்பு

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற இளைஞா்கள் சுய வேலைவாய்ப்பு பயிற்சியில் இணைந்து பயன்பெறலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க

மணல் கடத்தியவா் கைது

ஆம்பூரில் மணல் கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா். ஆம்பூா் கிருஷ்ணாபுரம், புறவழிச்சாலையில் ஆம்பூா் நகர போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த மாட்டு வண்டியை தடுத்து நிறுத்தி ச... மேலும் பார்க்க