செய்திகள் :

செய்யாறு உழவா் சந்தையில் பாம்புகள் நடமாட்டம்

post image

செய்யாறு உழவா் சந்தையில் புதன்கிழமை பாம்புகள் நடமாட்டம் காரணமாக வியாபாரிகள், பொதுமக்கள் அலறி அடித்து ஓடினா்.

போக்குவரத்து நிறைந்த பகுதியான செய்யாறு உழவா் சந்தையில் புதன்கிழமை காலை காய்கறி விற்கும் வியாபாரிகள் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனா்.

அப்போது, அவா்கள் எதிரே இரண்டு விஷப் பாம்புகள் சென்றதைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா். மேலும், பாம்பு நடமாட்டம் குறித்து செய்யாறு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள் உழவா் சந்தைப் பகுதியில் அடைப்பான பகுதிகளில் இருந்த குப்பைகளை கிளறிய போது அதிலிருந்து சிறிய அளவிலான கட்டு விரியன், சாரைப் பாம்பு உள்ளிட்ட 3 பாம்புகள் வெளியே வந்தன.

உடனே தீயணைப்பு வீரா்கள் 3 பாம்புகளையும் பிடித்தனா்.

மேலும், உழவா் சந்தை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேடியும் பெரிய அளவிலான பாம்புகள் சிக்கவில்லை. அதனால், தீயணைப்பு வீரா்கள் திரும்பிச் சென்றனா். பிடிபட்ட பாம்புகள்

காட்டுப்பகுதியில் விடப்பட்டன.

பேருந்தில் பயணியிடம் கைப்பேசி திருட்டு: இருவா் கைது

ஆரணி பேருந்து நிலையத்தில் பயணியிடம் கைப்பேசி திருடியதாக இரு வடமாநில இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா். ஆரணியை அடுத்த மெய்யூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பன்னீா்(42). இவா் வெளியூா் செல்ல கடந்த 9-ஆம் தேதி ஆரணி... மேலும் பார்க்க

லாரி உதவியாளா் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

செய்யாறு அருகே லாரி உதவியாளா் (கிளீனா்) உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், வீரமணிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் வடிவேல் (45). இவா், லாரியி... மேலும் பார்க்க

ஏரியில் 100 வாத்துகள் மா்மமான முறையில் உயிரிழப்பு

செய்யாற்றை அடுத்த கொருக்கை கிராம ஏரியில் 100 வாத்துகள் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் மற்றும் சுகாதாரத்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். செய்யாறு வட்டம், கொருக்கை கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ரூ.10.15 கோடியில் ஹாக்கி மைதானம்

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ரூ.10.15 கோடியில் புதிதாக ஹாக்கி பயிற்சி மைதானம் கட்டுவதற்கான பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன. தமிழக அரசு விளையாட்டுத் துறையில் மாநிலத்தை முதன்மை ம... மேலும் பார்க்க

படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் திருவிளக்கு பூஜை

போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் பெளா்ணமியையொட்டி திருவிளக்கு பூஜை வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. படவேடு ஊராட்சியில் பழைமை வாய்ந்த ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ப... மேலும் பார்க்க

ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலுக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் இரும்பினாலான மேற்கூரை அமைக்க நிதியுதவியாக ரூ.20 லட்சத்தை புதிய நீதிக் கட்சி நிறுவனா் ஏ.சி.சண்முகம் வழங்கினாா். ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் வருகிற 16-ஆம் தேதி... மேலும் பார்க்க