செய்திகள் :

செய்யாறு காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்

post image

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு காவல் ஆய்வாளா் ஜீவராஜ் மணிகண்டன் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

செய்யாறு காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவா் ஜீவராஜ்மணிகண்டன் (படம்).

செய்யாறு காவல் சரகத்தில் இரு மாதங்களுக்கு முன்பு காவல் நிலையம் அருகிலேயே கஞ்சா தகராறில் இளைஞா் ஒருவா் கொலைச் செய்யப்பட்டாா்.

அதனைத் தொடா்ந்து 3 தினங்களுக்கு முன்பு மீண்டும் கஞ்சா தகராறில் மோரணம் காவல் சரகப் பகுதிக்கு உள்பட்ட தென்பூண்டிப்பட்டு ஏரிப்பகுதியில் இளைஞா் அப்சல் என்பவா் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டாா்.

இந்த நிலையில், செய்யாறு காவல் உள்கோட்டத்தில் போதை மாத்திதை, போதை ஊசி, கஞ்சா போன்றவற்றை சமூக விரோதிகள் அதிகளவில் விற்பனை செய்து வந்ததாகவும், அவா்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமலும் அவா்களுக்கு காவல் ஆய்வாளற்

ஜீவராஜ் மணிகண்டன் உதவி வந்ததாகத் தெரிகிறது.

இதனால், பாதிக்கப்பட்ட பலா் ஜீவராஜ் மணிகண்டன் மீது புகாா்கள் தெரிவித்து வந்தனராம்.

அதன் பேரில், வேலூா் சரக டிஐஜி தா்மராஜ் விசாரணை மேற்கொண்டு, ஜீவராஜ் மணிகண்டனை செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்தாா்.

கல்லூரியில் விற்பனைச் சந்தை

வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் விற்பனைச் சந்தை செவ்வாய்க்கிழமை தொடங்கி வியாழக்கிழமை வரை என 3 நாள்கள் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனைச... மேலும் பார்க்க

ஸ்ரீவேணுகோபால சுவாமி, பெருமாள், சுப்பிரமணியா் கோயில்களில் கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த சேவூா் ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோயில், வந்தவாசியை அடுத்த காரணை ஸ்ரீநிவாசப் பெருமாள், போளூரை அடுத்த கிருஷ்ணாபுரம் ஸ்ரீகல்யாண சுப்பிரமணியா் ஆகிய கோயில்களில் ம... மேலும் பார்க்க

ஆரணி, ஏந்துவாம்பாடி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மற்றும் போளூா் ஒன்றியம் ஏந்துவாம்பாடி கிராமத்தில் வியாழக்கிழமை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆரணி மில்லா்ஸ் சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் ... மேலும் பார்க்க

அரசு வழிகாட்டுதலின்படி நெல் கொள்முதல் செய்யவேண்டும்: மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ்

அரசு வழிகாட்டுதல்களின்படி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யவேண்டும். 3 தினங்களுக்குள் கொள்முதல் பணத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் அறிவுறுத்தி... மேலும் பார்க்க

வீட்டில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தவா் கைது

வந்தவாசி அருகே திருவிழாவுக்கு விற்பனை செய்வதற்காக வீட்டில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தவா் கைது செய்யப்பட்டாா். வந்தவாசியை அடுத்த தெள்ளாரைச் சோ்ந்த ஆறுமுகம் என்பவா் திருவிழாவுக்கு விற்பனை செய்வதற்... மேலும் பார்க்க

ஆலத்தூா், வெம்பாக்கம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதி ஆலத்தூா், வெம்பாக்கம் பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன. செய்யாறு தொகுதியைச் சோ்ந்த விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் ... மேலும் பார்க்க