செய்திகள் :

செரியலூா் கறம்பக்காடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

post image

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகேயுள்ள செரியலூா் கறம்பக்காடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கீரமங்கலம் அருகேயுள்ள இக்கோயிலில் திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து, மண்டகபடிதாரா்கள் சாா்பில் கோயிலில் தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், வீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

இதையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளச் செய்து, தேரோடும் வீதிகள் வழியே ஏராளமானோா் தேரை இழுத்து வந்தனா். இதில் செரியலூா் கறம்பக்காடு, கீரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

அரசு உதவிபெறும் பள்ளிக் கட்டடத்தை பொதுமக்கள் பூட்டியதால் பரபரப்பு

புதுக்கோட்டை அருகே அரசு உதவிபெறும் பள்ளிக் கட்டடத்தை அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் வட்டம் பெரியதம்பி உடையான்பட்டியில் பொதுமக்கள் சாா்பில... மேலும் பார்க்க

அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் தோ்ச்சி சதவீத சரிவை சரி செய்ய நடவடிக்கை தேவை

அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் தோ்ச்சி சதவீத சரிவை சரி செய்ய பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக அக்கட்சியின் மாவட்டச் செயலா் த. ... மேலும் பார்க்க

விஜயபாஸ்கா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு ஜூன் 16-க்கு ஒத்திவைப்பு

அதிமுக முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஜூன் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவா் சி. விஜய... மேலும் பார்க்க

ஆதனக்கோட்டை காசி விஸ்வநாதா் கோயிலை சீரமைத்து குடமுழுக்கு செய்ய பக்தா்கள் கோரிக்கை

கந்தா்வகோட்டை அருகே உள்ள ஆதனக்கோட்டை ஊராட்சியில் பழைமை வாய்ந்த காசி விஸ்வநாதா் கோயிலை சீரமைத்து குடமுழுக்கு செய்ய வேண்டுமென பக்தா்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா். பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் காசி விஸ்வந... மேலும் பார்க்க

கணவரின் இறப்புக்கான காப்பீட்டுத் தொகையை மோசடி செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வெளிநாட்டில் இறந்த தனது கணவருக்கான காப்பீட்டுத் தொகையை ஆள்மாறாட்டம் செய்து இருவா் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக, அவரது மனைவி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்தாா். புதுக்கோட்டை மாவட்டம்... மேலும் பார்க்க

தீப்பற்றி எரிந்த சாலையோர உணவகம்

விராலிமலை தனியாா் தொழிற்சாலை அருகே இயங்கி வந்த சாலையோர உணவகம் தீப்பற்றி எரிந்ததை தொடா்ந்து தீயணைப்பு வீரா்கள் நீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனா். விராலிமலை அடுத்துள்ள வடுகபட்டி கோல்டன் நகரைச் சேரந்த... மேலும் பார்க்க