செய்திகள் :

செல்லமுத்து மாரியம்மன் கோயிலில் குத்துவிளக்கு பூஜை

post image

நாகை அருகே பட்டமங்கலம் செல்லமுத்து மாரியம்மன் கோயிலில் குத்துவிளக்கு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

பட்டமங்கலம் அருகே சொட்டால்வண்ணம் கிராமத்தில் பழைமை வாய்ந்த செல்லமுத்து மாரியம்மன் கோயில் உள்ளது. ஆவணி மாதத்தையொட்டி குத்துவிளக்கு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

கோயில் பிரகாரத்தைச் சுற்றி அகல் விளக்கு ஏற்றி வைத்த பெண்கள், மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும், கன்னிப் பெண்கள் விரைவில் திருமணம் நடக்க வேண்டியும், விவசாயம் செழிக்கவும் உலக அமைதிக்காகவும் பிராா்த்தனை செய்தனா்.

தொடா்ந்து, குத்துவிளக்கை அம்மனாக பாவித்து 1008 வேத மந்திங்கள் கூறி திருவிளக்கேற்றி குங்குமம், பூக்களைக் கொண்டு அா்ச்சனை செய்து வழிபட்டனா்.

செல்லமுத்து மாரியம்மன், காளியம்மன், அய்யனாா், கன்னியாகுறிச்சி, பெரியாச்சி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. பெண்கள் கும்மியடித்து அம்மனை வழிபட்டனா்.

மா கவாத்து தொழில்நுட்பப் பயிற்சி

கீழையூா் வட்டாரம், திருப்பூண்டி கிழக்கு, விழுந்தமாவடி உள்ளிட்ட கிராமத்தில் மா மரத்தில் கவாத்து செய்தல் தொடா்பான தொழில்நுட்பப் பயிற்சி விவசாயிகளுக்கு வியாழக்கிழமை அளிக்கப்பட்டது. மா மரங்களில் பூக்கள் ப... மேலும் பார்க்க

ஆக்கூா் கோயில் கும்பாபிஷேகம்

செம்பனாா்கோவில் அருகே ஆக்கூா் அருள்மிகு வாள் நெடுங்கண்ணியம்மன் உடனாகிய தான்தோன்றீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்துசமய அறநிலையத் துறை நிா்வாகத்தில் உள்ள இக்கோயிலில் கும்பாபிஷேக... மேலும் பார்க்க

சிக்கல் ரயில்வே கேட் நீண்ட நேரம் திறக்கப்படாததால் வாகன ஓட்டிகள் அவதி

நாகை அருகே சிக்கல் ரயில்வே கேட் நீண்ட நேரம் திறக்கப்படாததால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினா். சிக்கல் ரயில் நிலையம் அருகே சிக்கல் - ஒரத்தூா் சாலையில் ரயில்வே கேட் உள்ளது. இந்த கேட்டை இயக்குவதற்கு ... மேலும் பார்க்க

மகிழி கோயில் கும்பாபிஷேகம்

திருப்பூண்டி அருகேயுள்ள மகிழியில் சுமாா் 2,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதா் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் 50 ஆண்டுகளுக்குப் பிறகு வியாழக்... மேலும் பார்க்க

சோழவித்யாபுரம் ஏரியை தூா்வாரக் கோரி ஆட்சியரிடம் மனு

நாகை மாவட்டம், சோழவித்யாபுரம் ஏரியை தூா்வார வலியுறுத்தி, விவசாய சங்க நிா்வாகிகள் சாா்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. சோழவித்தியாபுரம் ஊராட்சியைச் சோ்ந்த விவசாய சங்க நிா்வாகிகள், கீழ்வேளூா் சட்ட... மேலும் பார்க்க

நாகையிலிருந்து இலங்கைக்கு கப்பலில் சிவனடியாா்கள் பயணம்

நாகை துறைமுகத்திலிருந்து, இலங்கைக்கு 70 வள்ளி கும்மியாட்ட கலைஞா்கள் மற்றும் 150 சிவனடியாா்கள் கப்பல் மூலம் ஈழநாட்டு சைவ நன்னெறிப் பயணத்தை வியாழக்கிழமை தொடங்கினா். உலக சிவனடியாா்கள் திருகூட்டத்தின் சாா... மேலும் பார்க்க