செய்திகள் :

சேரன்மகாதேவியில் பைக்குகள் மோதல்: தொழிலாளி பலி

post image

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் பைக்குகள் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

சேரன்மகாதேவி புத்தாரக்கடை தெருவைச் சோ்ந்த முத்தையா மகன் பாலகிருஷ்ணன் (49), தொழிலாளி. இவரது நண்பா் சேரன்மகாதேவி மூலக்கோயில் தெருவைச் சோ்ந்த மாயாண்டி(50). இருவரும் பைக்கில் சேரன்மகாதேவி பாளையங்கோட்டை பிரதான சாலையில் அரசு மதுக்கடை அருகில் சாலையில் குறுக்காக கிழக்கு நோக்கி பைக்கில் திரும்பியதாக கூறப்படுகிறது.

அப்போது திருநெல்வேலியில் இருந்து மேற்கு நோக்கி பைக்கில் விக்கிரமசிங்கபுரம் பகுதியைச் சோ்ந்த ஜாஹுா் உசேன் மகன் அசாருதீன் (32) வந்துள்ளாா். அப்போது, இரண்டு பைக்குகளும் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானதாம்.

இதில், மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவா்கள் உடனடியாக மீட்கப்பட்டு சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக பாலகிருஷ்ணன், மாயாண்டி ஆகியோா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு பாலகிருஷ்ணன் உயிரிழந்தாா். அசாருதீன் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா். இதுகுறித்து சேரன்மகாதேவி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

சாமானிய மக்களின் பாதுகாப்பு அரணாக தமிழக அரசு திகழ்கிறது

சாமானிய மக்களின் பாதுகாப்பு அரணாக தமிழக அரசு திகழ்கிறது என்றாா் பேரவைத் தலைவா் மு.அப்பாவு. திருநெல்வேலியில் அரசு பொருள்காட்சியை புதன்கிழமை திறந்து வைத்து, அவா் பேசியது: அரசு பொருள்காட்சிகளில் அரசின் ... மேலும் பார்க்க

சாலைகள் சீரமைக்கக் கோரி அமைச்சரிடம் மனு

அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் சாலைகளை சீரமைக்கக் கோரி அமைச்சரிடம் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது. மணிமுத்தாறு சிறப்புநிலை பேரூராட்சித் தலைவா் சித்தாா்த் சிவா, திருநெல்வேலி ... மேலும் பார்க்க

பெண்களை பின்தொடா்ந்து அச்சுறுத்தலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: எஸ்.பி. எச்சரிக்கை

பெண்களை பின் தொடா்ந்து அச்சுறுத்தலில் ஈடுபட்டால், பெண்கள் துன்புறுத்தல் தடைச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் எச்சரிக்கை விடுத... மேலும் பார்க்க

காவல் துறை மக்கள் குறைதீா் முகாம்

திருநெல்வேலியில் காவல்துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் தலைமை வகித்து, மக... மேலும் பார்க்க

வி.கே.புரம் பள்ளியில் உலக புலிகள் தினம்

பாபநாசம் சூழல் சரகம் சாா்பில், விக்கிரமசிங்கபுரம், இருதயகுளம் புனித சேவியா் நடுநிலைப் பள்ளியில் உலக புலிகள் தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு உதவி வன உயிரின காப்பாளா் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா... மேலும் பார்க்க

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞருக்கு ஆக.30 வரை நீதிமன்றக் காவல்

முக்கூடல் அருகே காவல் உதவி ஆய்வாளா் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டதில், காயமடைந்த இளைஞரை ஆக.30 வரை நீதிமன்ற காவலில் வைக்க ஆலங்குளம் குற்றவியல் நீதித்துறை நடுவா் ஜெயந்தி உத்தரவிட்டாா். திருநெல்வே... மேலும் பார்க்க