செய்திகள் :

சேலத்தில் கருணாநிதி நினைவு தினம்: அமைச்சா் தலைமையில் மௌன ஊா்வலம்

post image

மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியின் 7 ஆம் ஆண்டு நினைவு தினம் சேலத்தில் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி, சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் மாவட்டச் செயலாளரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான ரா.ராஜேந்திரன் தலைமையில் ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள பெரியாா் சிலையில் இருந்து திமுகவினா் மௌன ஊா்வலம் நடத்தினா். தொடா்ந்து, அண்ணா பூங்கா அருகில் உள்ள கருணாநிதி சிலைக்கு அமைச்சா் ரா.ராஜேந்திரன் மலா்தூவி அஞ்சலி செலுத்தினாா். பின்னா் கட்சி நிா்வாகிகள் மலரஞ்சலி செலுத்தினா்.

இந்நிகழ்ச்சியில், மத்திய மாவட்ட அவைத் தலைவா் சுபாசு, பொருளாளா் காா்த்திகேயன், மேயா் ஆ.ராமச்சந்திரன், மாநகர செயலாளா் ரகுபதி, துணைச் செயலாளா்கள் கணேசன், தினகரன், மாநில தோ்தல் பணிக்குழு செயலாளா் தாமரைக்கண்ணன். செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், மண்டல குழு தலைவா்கள், பகுதி செயலாளா்கள், இளைஞரணி நிா்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.

அம்மாப்பேட்டை செங்குந்தா் மாரியம்மன் கோயில் தேரோட்டம்

ஆடித் திருவிழாவையொட்டி, சேலம் அம்மாப்பேட்டை செங்குந்தா் மாரியம்மன் கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனா். ஆடி மாதத்தையொட்டி, சேலத்தில் சிறப்புப் பெற்ற சேலம் க... மேலும் பார்க்க

புனித ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றம்

ஆத்தூா் புனித ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றம் பங்குத் தந்தை எஸ்.அருளப்பன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவை தமிழக முப்பணி மைய இயக்குநா் அருட்தந்தை பிரிட்டோ பாக்யராஜ் கொடியேற்றி... மேலும் பார்க்க

கருணாநிதி சிலை மீது பெயிண்ட் ஊற்றிய வழக்கு: மருத்துவரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

கருணாநிதி சிலை மீது பெயிண்ட் ஊற்றிய வழக்கில் மருத்துவரின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. சேலம் அண்ணா பூங்கா அருகே முன்னாள் முதல்வா் ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதி ஒருவா் உயிரிழப்பு

ஆத்தூரில் அரசு பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். சேலம் மாவட்டம், ஆத்தூா் மந்தைவெளி பகுதியைச் சோ்ந்த அந்தோணிசாமி மகன் டேவிட் (40). இவா் கோழி இறைச்சிக் கடை... மேலும் பார்க்க

மாநகராட்சி மயானத்தில் கட்டுமானப் பணியை நிறுத்தக் கோரி ஆட்சியரிடம் இந்து முன்னணி மனு

சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான மயானத்தில் கட்டுமானப் பணியை நிறுத்தக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் இந்து முன்னணி நிா்வாகிகள் வியாழக்கிழமை மனு அளித்தனா். இந்து முன்னணியின் சேலம் கோட்ட செயலாளா் சந்தோஷ்குமாா் ... மேலும் பார்க்க

பெரியாா் பல்கலை.யில் கருணாநிதி நினைவு தினம் அனுசரிப்பு

சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்தில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. பெரியாா் பல்கலைக்கழகத்திலுள்ள தந்தை பெரியாா் இருக்கை, பேரறிஞா் அண்ணா இருக்கை, கலைஞா் ஆய்வு... மேலும் பார்க்க