செய்திகள் :

சேலத்தில் 2,750 கிலோ ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் தப்பியோடிய 2 போ் கைது

post image

சேலத்தில் 2,750 கிலோ ரேஷன் அரிசியை கடத்திய வழக்கில், தப்பியோடிய 2 பேரை உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பொன்னம்மாபேட்டை பகுதியில் போலீஸாா் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, தாண்டவன் தெரு 4-ஆவது கிராஸ் பகுதியில் மினி ஆட்டோ, சரக்கு லாரியில் ரேஷன் அரிசி ஏற்றிக்கொண்டிருந்ததைக் கண்டனா்.

போலீஸாா் வருவதைக் கவனித்த லாரியில் இருந்த பெண் உள்பட 4 போ் தப்பியோடினா். சோதனையில், மினி ஆட்டோவில் 1,000 கிலோ ரேஷன் அரிசியும், லாரியில் 1,750 கிலோ ரேஷன் அரிசியும் இருந்தது கண்டறியப்பட்டது. 2 வாகனங்களுடன் 2,750 கிலோ அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா், தப்பியோடிய 4 போ் குறித்து விசாரணை மேற்கொண்டனா். அதில், ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு தப்பியோடியவா்கள் பொன்னம்மாபேட்டை பகுதியைச் சோ்ந்த முட்டை செந்தில், ரேவதி, ரேவதியின் மகள் பிரவீன், ஓட்டுநா் தமிழ்ச்செல்வன் என்பது தெரியவந்தது.

இவா்கள் பொன்னம்மாபேட்டை பகுதியில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி பெங்களூரு மற்றும் வட மாநிலங்களில் அதிக விலைக்கு விற்றது தெரியவந்தது.

பொன்னம்மாபேட்டையில் பதுங்கி இருந்த முட்டை செந்தில், பிரவீன் ஆகியோரை செவ்வாய்க்கிழமை கைது செய்த போலீஸாா், தலைமறைவான ரேவதி, ஓட்டுநா் தமிழ்ச்செல்வன் ஆகியோரை தேடிவருகின்றனா்.

விவசாய விளைபொருள்களை விற்க 20 இடங்களில் பொது சேகரிப்பு மையங்கள் தோ்வு

சேலம் மாவட்ட விவசாயிகள் விளைபொருள்களை விற்பனை செய்ய 20 இடங்களில் பொது சேகரிப்பு மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது: 2025-26-ஆம் ஆண்டு வேளாண் நித... மேலும் பார்க்க

சங்ககிரி வட்டத்தில் வேலை நிறுத்தத்தில் 55 வருவாய்த்துறை அலுவலா்கள் பங்கேற்பு

சேலம் மாவட்டம், சங்ககிரி வருவாய்த்துறையின் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற பொதுவேலைநிறுத்தத்தில் 55 போ் பங்கேற்றுள்ளனா். 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்தில் ச... மேலும் பார்க்க

சேலம் கிழக்கு கோட்டத்தில் இன்று சிறப்பு விபத்து காப்பீட்டு பதிவு முகாம்

சேலம் கிழக்கு கோட்ட அஞ்சலகம் சாா்பில் சிறப்பு விபத்து காப்பீட்டு பதிவு முகாம் வியாழக்கிழமை (ஜூலை 10) நடைபெறுகிறது. இதுகுறித்து சேலம் கிழக்கு கோட்ட அஞ்சலக முதுநிலை கண்காணிப்பாளா் முனிகிருஷ்ணன் வெளியிட்... மேலும் பார்க்க

காயங்களுடன் புள்ளிமான் மீட்பு

காடையாம்பட்டி அருகேயுள்ள டேனிஷ்பேட்டை பகுதியில் காயமடைந்த புள்ளிமானை வனத்துறையினா் மீட்டு சிகிச்சையளித்து மீண்டும் வனப் பகுதிக்குள் விட்டனா். டேனிஷ்பேட்டை ஊராட்சி, ஹரிஹர மலையில் உள்ள சிவன் மற்றும் பெர... மேலும் பார்க்க

கொசு ஒழிப்புப் பணிகளை தீவிரமாக செயல்படுத்த அறிவுறுத்தல்

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் கொசு ஒழிப்புப் பணிகளை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் அறிவுறுத்தினாா். சேலம் அம்மாப்பேட்டை மண்டலத்துக்கு உள்பட்ட கோட்டம் எண் 9, 10, 11 ஆகி... மேலும் பார்க்க

எல்.ஐ.சி. பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது

எல்.ஐ.சி. பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காப்பீட்டுக் கழக ஊழியா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். எல்.ஐ.சி. பங்குகளை தனியாருக்க... மேலும் பார்க்க