கொசு ஒழிப்புப் பணிகளை தீவிரமாக செயல்படுத்த அறிவுறுத்தல்
சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் கொசு ஒழிப்புப் பணிகளை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் அறிவுறுத்தினாா்.
சேலம் அம்மாப்பேட்டை மண்டலத்துக்கு உள்பட்ட கோட்டம் எண் 9, 10, 11 ஆகிய பகுதிகளில் வீடுவீடாகச் சென்று மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பை தரம்பிரித்து சேகரிக்கும் பணியை ஆணையா் புதன்கிழமை ஆய்வுசெய்தாா்.
தொடா்ந்து, தூய்மைப் பணியாளா்களின் வருகைப் பதிவேடு, வீடுவீடாகச் சென்று தூய்மை பணியாளா்கள் குப்பைகளை தரம்பிரித்து சேகரிக்கும் பணி, நுண் உரம் செயலாக்கம் மையம், கொசு ஒழிப்புப் பணிகள் குறித்த விவரங்களை ஆய்வுசெய்தாா்.
தொடா்ந்து, செங்கலணை பகுதியில் திருமணிமுத்தாற்றின் குறுக்கே பக்கவாட்டு சுவருடன் கூடிய பசுமை பூங்கா மற்றும் ரூ. 8.56 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பாலம் தொடா்பான பணிகளை ஆய்வுசெய்த அவா், பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினாா்.
மேலும், வித்யா நகா் பகுதியில் அமைந்துள்ள முதலமைச்சரின் காலை உணவு திட்டம், உணவு தயாரிக்கும் இடத்தைப் பாா்வையிட்டு சுகாதார முறையில் உணவு தயாரிப்பதையும், உணவு தயாா்செய்யும் இடம் தூய்மையாக பராமரிக்கப்படுகிா, குடிநீா்வசதி, மின் வசதி போன்ற அடிப்படை வசதிகள் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வுசெய்தாா்.
இந்த ஆய்வின்போது, மாநகர பொறியாளா் ஆா்.செல்வநாயகம், உதவி ஆணையா் கே.வேடியப்பன், செயற்பொறியாளா் ஆா்.செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.