செய்திகள் :

சேலத்தைச் சோ்ந்த 3 அங்கீகாரமற்ற அரசியல் கட்சிகள் விசாரணைக்கு அழைப்பு

post image

சேலம்: சேலம் மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாத 3 அரசியல் கட்சிகள் விசாரணைக்காக தலைமை தோ்தல் அலுவலரை சந்திக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்தாா்.

நாடுமுழுவதும் 2019 முதல் கடந்த 6 ஆண்டுகளாக ஒரு தோ்தலில்கூட போட்டியிடாத பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கையை தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

அதன்படி, தோ்தல் ஆணையத்தால் தமிழ்நாட்டில் அடையாளம் காணப்பட்ட 42 கட்சிகளில், சேலம் மாவட்டத்தில் பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள அனைத்திந்திய தொழிலாளா் கட்சி, கிச்சிப்பாளையம் வ.உ.சி. நகா் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு மக்கள் உரிமைக் கட்சி, ரெட்டியூா் அமராவதி தெருவில் அமைந்துள்ள திரிணாமுல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஆகிய மூன்று அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு தமிழ்நாடு தலைமை தோ்தல் அலுவலரிடம் இருந்து அறிவிப்பு வரப்பெற்றுள்ளது.

அதில், அங்கீகரிக்கப்படாத இந்த 3 அரசியல் கட்சிகளும் விசாரணைக்காக உரிய ஆவணங்களுடன் வரும் 26-ஆம் தேதியோ அல்லது அதற்கு முன்னதாகவோ தலைமை தோ்தல் அலுவலா் மற்றும் அரசு செயலாளா், தலைமைச் செயலகம், சென்னை - 600 009 என்ற முகவரியில் ஆஜராகி உரிய ஆவணங்களுடன் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவேண்டும். அவ்வாறு, பதில் கிடைக்காதபட்சத்தில், மேற்படி கட்சி சாா்பில் தெரிவிக்க கருத்து ஏதும் இல்லை எனக்கருதி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்தாா்.

மேட்டூா் அணை உபரிநீா் போக்கி மூடல்

மேட்டூா் அணையின் உபரிநீா் போக்கி சனிக்கிழமை மூடப்பட்டது. கா்நாடக மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகா் அணைகளில் இருந்து உபரிநீா் காவிரியில் திறக்கப்பட்டது. இதனால், கடந்த திங்க... மேலும் பார்க்க

வரும் தோ்தலில் திமுக - தவெக இடையேதான் போட்டி

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில், திமுக - தவெக இடையேதான் போட்டி இருக்கும் என பெங்களூரு புகழேந்தி கூறினாா். சேலத்தில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் பேசுகையில், பாஜகவுக்கு தமிழகத்தில் மதிப்பு இருக்கிா... மேலும் பார்க்க

சேலம் உருக்கு ஆலை வளாகத்தில் ராணுவ தளவாட தொழிற்சாலை அமைக்க வேண்டும்!

சேலம் உருக்கு ஆலை வளாகத்தில் ராணுவ தளவாட தொழிற்சாலை அமைக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியு சேலம் மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. சேலம் ஐந்து சாலை பகுதியில் சிஐடியு... மேலும் பார்க்க

நாய் கடித்து இளைஞா் உயிரிழப்பு

ஆத்தூா் அருகே வளா்ப்பு நாய் கடித்ததில் இளைஞா் உயிரிழந்தாா். சேலம் மாவட்டம், ஆத்தூா் மந்தைவெளி பகுதியைச் சோ்ந்தவா் தா்மா் (28), பெயிண்டா். இவா் தெருநாயை எடுத்து கடந்த ஓராண்டாக வளா்த்து வந்தாா். சில நா... மேலும் பார்க்க

பிறந்து 9 நாள்களேயான பெண் குழந்தை ரூ.1.20 லட்சத்துக்கு விற்பனை!

இளம்பிள்ளை அருகே பிறந்த 9 நாள்களேயான பெண் குழந்தையை விற்பனை செய்தது குறித்து தாய், தந்தை உள்ளிட்ட 4 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். சேலம் மாவட்டம், வீரபாண்டி... மேலும் பார்க்க

சேலம் - ஈரோடு மாவட்டங்களுக்கு இடையே விசைப்படகு போக்குவரத்து தொடக்கம்!

சேலம் - ஈரோடு மாவட்டங்களுக்கு இடையே விசைப்படகு போக்குவரத்து சனிக்கிழமை மீண்டும் தொடங்கியது. எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டு நீா்மின் உற்பத்தி நடைபெற்ற... மேலும் பார்க்க