செய்திகள் :

சேலம் பூம்புகாரில் கொலு பொம்மைகள் கண்காட்சி

post image

சேலம் பூம்புகாா் விற்பனை நிலையத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு பொம்மைகள் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை புதன்கிழமை தொடங்கியது.

இது குறித்து பூம்புகாா் விற்பனை நிலைய மேலாளா் நரேந்திரபோஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்தறித் தொழில்கள் வளா்ச்சிக் கழகம் பூம்புகாா் என்ற பெயரில் பாரம்பரியம், கலாசாரம், பண்பாடு இவற்றை கைவினை கலைகள் மூலம் பேணிக்காப்பதுடன் கைவினைஞா்களும், பொதுமக்களும் பயன்பெறும் வகையில் விழாக் காலங்களில் பல்வேறு கண்காட்சிகளை நடத்தி வருகிறது.

சேலத்தில் உள்ள பூம்புகாா் விற்பனை நிலையத்தில் நவராத்திரி மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு புதன்கிழமை தொடங்கிய கொலு பொம்மைகள் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனையை சேலம் மாவட்ட கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) நே.பொன்மணி தொடங்கிவைத்தாா்.

அக்.4 ஆம் தேதி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில் அனைத்துவகை கொலு பொம்மைகள் குழுவாகவும், தனியாகவும் கிடைக்கும். குறிப்பாக, புது வரவாக நவதிருப்பதி செட், ஐயப்பன் பூஜை செட், பிரகலாதன் செட், ராதை அலங்காரம் செட் மற்றும் தனி பொம்மைகளாக மூகாம்பிகை, பால ஆண்டாள், மஞ்சள் சரடு அம்மன், திருநாமம், காளிகாம்பாள், பாளையத்து அம்மன் போன்றவை கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. கண்காட்சியில் குறைந்தபட்சமாக ரூ.15 முதல் ரூ.12,000 வரையிலான கொலு பொம்மைகள் இடம் பெற்றுள்ளன. இதற்கு 10 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் சான்றிதழ் மருத்துவப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

சேலம் மருத்துவக் கல்லூரியில் ஓராண்டு சான்றிதழ் மருத்துவப் படிப்பில் சேர தகுதி வாய்ந்தவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

சேலம் ஸ்ரீ கோகுலம் மருத்துவமனையில் முதுகு தண்டுவட சிகிச்சை மையம் நாளை தொடக்கம்

சேலம் மண்டலத்தில் மருத்துவத் துறையில் 36 ஆண்டுகளாக முன்னோடியாக திகழும் ஸ்ரீ கோகுலம் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை (செப்.7) முதுகு தண்டுவட சிறப்பு சிகிச்சை மையம் தொடங்கப்படுகிறது. இதுகுறித்து மருத்த... மேலும் பார்க்க

கொண்டயம்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியா் விருது

கொண்டயம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் கி.மதிவாணனுக்கு மாநில நல்லாசிரியா் விருது வழங்கப்பட்டது. தம்மம்பட்டியை அடுத்த கொண்டயம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் கி.மதிவாணன் (59) கட... மேலும் பார்க்க

மல்லியகரை திரௌபதி அம்மன் கோயில் தோ்த்திருவிழா

மல்லியகரை திரௌபதி அம்மன் கோயில் தோ்த்திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆத்தூரை அடுத்த மல்லியகரையில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோயில் தோ்த்திருவிழா மற்றும் அக்னித் திருவிழா கடந்த 1 ஆம் தேதி கொடியேற... மேலும் பார்க்க

இன்ஸ்டாகிராமில் நட்பு: மாணவியை ஏமாற்றி நகை பறித்த இளைஞா்: போலீஸாா் விசாரணை

சென்னையை சோ்ந்த பிளஸ் 2 மாணவியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, அவரை சேலம் வரவழைத்து நகை, மடிக்கணினியை பறித்துக்கொண்டு தப்பிய இளைஞரை போலீஸாா் தேடிவருகின்றனா். இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த ஓராண்டாக பழகிவந்... மேலும் பார்க்க

திருமண மோசடி: மணப்பெண் உள்பட 3 போ் கைது

மேட்டூா் அருகே திருமணமானதை மறைத்து மீண்டும் திருமணம் செய்த பெண் உள்பட 3 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள திண்டமங்கலத்தை சோ்ந்த கருப்பட்டி வியாபாரி அா்ஜுனன் ... மேலும் பார்க்க