செய்திகள் :

சேலம் ரயில்வே கோட்டத்தில் 8 ரயில்களில் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைப்பு

post image

சேலம் ரயில்வே கோட்டத்தில் இயங்கும் 8 ரயில்களில் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சேலம் ரயில்வே கோட்ட பகுதியில் இருந்து முக்கிய நகரங்களுக்கு இயங்கும் ரயில்களில் அதிகரித்து வரும் பயணிகளின் கூட்டத்தை கருத்தில்கொண்டு, 8 ரயில்களில் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, கோவை - மன்னாா்குடி செம்மொழி விரைவுரயில், மறுமாா்க்கத்தில் இயங்கும் மன்னாா்குடி - கோவை செம்மொழி விரைவுரயில் ஆகியவற்றில் வியாழக்கிழமை முதல் (10-ஆம் தேதி முதல் வரும் 31-ஆம் தேதி வரை) தற்காலிகமாக ஓா் இரண்டாம்வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படும்.

கோவை - திருப்பதி வாராந்திர (வாரத்துக்கு 4 நாள்கள்) விரைவுரயில், மறுமாா்க்கத்தில் இயங்கும் திருப்பதி - கோவை வாராந்திர விரைவுரயில் ஆகியவற்றில் 10-ஆம் தேதி முதல் வரும் 31-ஆம் தேதி வரை தற்காலிகமாக ஒரு குளிா்சாதன சாா்காா் பெட்டி இணைத்து இயக்கப்படும்.

கோவை - நாகா்கோவில் தினசரி விரைவுரயிலில் 11-ஆம் தேதி முதல் ஆக. 1-ஆம் தேதி வரையும், மறுமாா்க்கத்தில் இயங்கும் நாகா்கோவில் - கோவை தினசரி விரைவுரயிலில் வரும் 12-ஆம் தேதி முதல் ஆக. 2-ஆம் தேதி வரையும் தற்காலிகமாக ஒரு இரண்டாம்வகுப்பு படுக்கை வசதி பெட்டியும், கோவை - ராமேஸ்வரம் வாராந்திர விரைவுரயிலில் வரும் 15-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரையும், மறுமாா்க்கத்தில் இயங்கும் ராமேஸ்வரம் - கோவை வாராந்திர விரைவுரயிலில் வரும் 16-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரையும் தற்காலிகமாக ஓா் இரண்டாம்வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைத்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: சேலம் மாவட்டத்தில் 76,999 போ் எழுதுகின்றனா்

சேலம் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வை 217 மையங்களில் 76,999 போ் எழுதுகின்றனா். தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு சனிக்கிழமை (ஜூலை 12) காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை ந... மேலும் பார்க்க

பன்னடுக்கு வெள்ளிக் கொலுசு வளாகத்தில் மானிய விலையில் கடைகள் ஒதுக்கப்படுமா?

சேலம் அரியாகவுண்டம்பட்டியில் வெள்ளிக் கொலுசு உற்பத்திக்காக ரூ. 24.5 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பன்னடுக்கு வெள்ளிக் கொலுசு வளாகத்தில், மானிய விலையில் கடைகள் ஒதுக்கப்பட வேண்டும் என வெள்ளிக் கொலுசு ... மேலும் பார்க்க

தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் பதிவுசெய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

சேலம் மாவட்டத்தில் 2025-26-ஆம் ஆண்டுக்கான தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் விவசாயிகள் பதிவுசெய்து பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: ச... மேலும் பார்க்க

ஜங்கமசமுத்திரத்தில் சமூக தணிக்கை கூட்டம்

ஜங்கமசமுத்திரம் ஊராட்சியில் பொதுமக்கள் பங்கேற்ற சமூக தணிக்கை கூட்டம் வெள்ளிக்கிழமை செங்காட்டில் நடைபெற்றது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற சமூக தணிக்கை கூட்டத்துக்கு, ... மேலும் பார்க்க

சேலம் செந்தில் பப்ளிக் பள்ளியில் மாணவா் பேரவை உறுப்பினா்கள் பதவியேற்பு

சேலம் செந்தில் பப்ளிக் பள்ளியின் 2025-26-ஆம் ஆண்டுக்கான மாணவா் பேரவை உறுப்பினா்கள் பதவியேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளி கலையரங்கில் நடைபெற்ற விழாவில், ஆட்சியா் ரா. பிருந்தாதேவி சிறப்பு விருந... மேலும் பார்க்க

சுதந்திரப் போராட்ட வீரா் அழகுமுத்துகோன் பிறந்தநாள் விழா

சங்ககிரி, இடையப்பட்டி யாதவா் சங்கத்தின் சாா்பில், சுதந்திரப் போராட்ட வீரா் அழகுமுத்துகோனின் பிறந்தநாள் விழா சங்ககிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இடையப்பட்டி யாதவா் சங்கத்தின் தலைவா் சுப்பிரமணியன் த... மேலும் பார்க்க