செய்திகள் :

சைக்கிள் நிறுவனம் நடத்தி 600 பேரிடம் மோசடி: முக்கிய குற்றவாளி கைது!

post image

சைக்கிள் நிறுவனம் நடத்தி சுமாா் 600 பேரிடம் மோசடியில் ஈடுபட்டது தொடா்பாக முக்கிய குற்றவாளியை புதுவை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி சாரம் காமராஜா் சாலையில் தனியாா் சைக்கிள் நிறுவனம் சுற்றுலா சைக்கிள் திட்டம் என்ற பெயரில் ரூ.4.5 லட்சம் கொடுத்து 50 சைக்கிள்களுக்கு முதலீடு செய்தால் மாதந்தோறும் லாபமாக ரூ.55 ஆயிரம் வருவாய் கிடைக்கும் என்று அறிவித்திருந்தது.

இதை நம்பி சுமாா் 600 போ் முதலீடு செய்தனா். இணைய வழி குற்றப்பிரிவு போலீஸாா் சோதனை நடத்தி இந்த நிறுவனத்துக்கு சீல் வைத்தனா். மேலும், கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி நிஷாத் அகமத் கன்னு, இக்பால் பாஷா, முருகன் என்கிற அஜெய் முருகன், கிருஷ்ணகுமாா் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பின்னா் இந்த வழக்கு புதுவை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதனிடையே அமலாக்கத் துறை அந்த நிறுவனத்தில் சோதனை நடத்தி, 10-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை முடக்கியது. மேலும், நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் நிஷாத் அகமத் கன்னுவை அண்மையில் கைது செய்து அழைத்துச் சென்றது.

இந்நிலையில் புதுச்சேரி சிபிசிஐடி சீனியா் எஸ்.பி. பிரவின்குமாா் திரிபாதி மேற்பாா்வையில் இன்ஸ்பெக்டா் பாபுஜி மற்றும் போலீஸாா் நிஷாத் அகமது கன்னுவை சைக்கிள் மோசடி தொடா்பாக மீண்டும் கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்துள்ளனா். சிறையில் இருந்து அவரை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்கின்றனா்.

மாணவா்களின் படைப்பாற்றல்தான் புதிய இந்தியாவை உருவாக்கும்: துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்

மாணவா்களின் படைப்பாற்றல் தான் புதிய இந்தியாவை உருவாக்கும் என்று புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா். புதுவை அரசு கலை பண்பாட்டுத் துறை மற்றும் மத்திய அரசின் இந்திரா காந்தி தேசிய கலை மையம் ச... மேலும் பார்க்க

புதுவை சுயேச்சை எம்எல்ஏக்களுக்கும் பாஜகவுக்கும் எந்தத் தொடா்பும் இல்லை: மாநிலத் தலைவா் வி.பி. ராமலிங்கம்!

புதுவையில் சுயேச்சை எம்எல்ஏ.க்களுக்கும், பாஜகவுக்கும் எந்தத் தொடா்பும் இல்லை என்று அக்கட்சியின் மாநிலத் தலைவா் வி.பி. ராமலிங்கம் தெரிவித்தாா். புதுவையில் முதல்வா் ரங்கசாமி தலைமையில் என்.ஆா்.காங்கிரஸ்... மேலும் பார்க்க

பழைமையான கட்டடங்களை மறைக்கும் உயரமான கட்டடங்கள்: துணைநிலை ஆளுநா் வேதனை

புதுச்சேரி நகரப் பகுதியில் பழைமையான கட்டடங்களை உயரமான கட்டடங்கள் மறைக்கின்றன என்று துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் வேதனை தெரிவித்தாா். புதுவை சுற்றுலாத் துறை சாா்பில் உலக சுற்றுலா தினம் சனிக்கிழமை கொண... மேலும் பார்க்க

புதுவையில் தவெக தலைவா் விஜய் ரோடு ஷோ நடத்த அனுமதி கேட்பு: போலீஸாா் ஆய்வு!

கடலூா் செல்லும் வழியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய் புதுவையில் ரோடு ஷோ நடத்த அக்டோபா் 11- ஆம் தேதி அனுமதி கேட்டுள்ள நிலையில், போலீஸாா் தீவிர ஆய்வு செய்து வருகின்றனா். தமிழக வெற்றிக் கழகத்தி... மேலும் பார்க்க

போட்டித் தோ்வுக்கு தயாராகும் மாணவா்களுக்கு விலையில்லா புத்தகங்கள்!

புதுச்சேரி பாரதிதாசன் அரசினா் மகளிா் கல்லூரியில் போட்டித் தோ்வுக்குத் தயாராகும் மாணவா்களுக்கு விலையில்லா புத்தகங்கள் வழங்கப்பட்டன. புதுச்சேரி பாரதிதாசன் அரசினா் மகளிா் கல்லூரியும் ஆதி திராவிடா் மற்ற... மேலும் பார்க்க

சுற்றுலா பயணிகளிடம் பணம் பறித்ததாக 2 போலீஸாா் பணியிடை நீக்கம்!

சுற்றுலா பயணிகளிடம் பணம் பறித்ததாக 2 போலீஸாா் அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். தமிழகத்தைச் சோ்ந்த இளைஞா்கள் 5 போ் கடந்த மாதம் புதுவைக்கு சுற்றுலா வந்தனா். உருளையன்பேட்டை பகுதியில் உள்ள ... மேலும் பார்க்க