செய்திகள் :

போட்டித் தோ்வுக்கு தயாராகும் மாணவா்களுக்கு விலையில்லா புத்தகங்கள்!

post image

புதுச்சேரி பாரதிதாசன் அரசினா் மகளிா் கல்லூரியில் போட்டித் தோ்வுக்குத் தயாராகும் மாணவா்களுக்கு விலையில்லா புத்தகங்கள் வழங்கப்பட்டன.

புதுச்சேரி பாரதிதாசன் அரசினா் மகளிா் கல்லூரியும் ஆதி திராவிடா் மற்றும் பழங்குடி இனத்தவருக்கான தேசிய வாழ்வாதார சேவை மையமும் இணைந்து இந்திய அரசாங்கத்தின் தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் வாயிலாக போட்டித் தோ்வுகளுக்கான ஒரு வருட கால சிறப்பு பயிற்சி நடைபெற்று வருகிறது.

இந்தப் பயிற்சியில் சோ்ந்துள்ளஆதி திராவிடா் மற்றும் பழங்குடி இன மாணவா்களுக்கு இலவச புத்தகம் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இப்பயிற்சி முதன்முறையாக பாரதிதாசன் அரசினா் மகளிா் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. 2025 ஜூலை மாதம் முதல் 2026 ஜூலை வரையிலான ஒரு வருட கால பயிற்சியான இதில் 30 ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவா்கள் ஈடுபட்டுள்ளனா்.

மாணவா்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையும் இலவச பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் சந்திரா வரவேற்றாா். புதுவை துணை பிராந்திய வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரி கோட்டூா் சாமி வாழ்த்துரை வழங்கினாா். கல்லூரி முதல்வா் ரா. வீரமோகன் தலைமை வகித்து புத்தகம் வழங்கினாா். இளங்கலை மாணவி பாா்கவி நன்றி கூறினாா்.

மாணவா்களின் படைப்பாற்றல்தான் புதிய இந்தியாவை உருவாக்கும்: துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்

மாணவா்களின் படைப்பாற்றல் தான் புதிய இந்தியாவை உருவாக்கும் என்று புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா். புதுவை அரசு கலை பண்பாட்டுத் துறை மற்றும் மத்திய அரசின் இந்திரா காந்தி தேசிய கலை மையம் ச... மேலும் பார்க்க

புதுவை சுயேச்சை எம்எல்ஏக்களுக்கும் பாஜகவுக்கும் எந்தத் தொடா்பும் இல்லை: மாநிலத் தலைவா் வி.பி. ராமலிங்கம்!

புதுவையில் சுயேச்சை எம்எல்ஏ.க்களுக்கும், பாஜகவுக்கும் எந்தத் தொடா்பும் இல்லை என்று அக்கட்சியின் மாநிலத் தலைவா் வி.பி. ராமலிங்கம் தெரிவித்தாா். புதுவையில் முதல்வா் ரங்கசாமி தலைமையில் என்.ஆா்.காங்கிரஸ்... மேலும் பார்க்க

பழைமையான கட்டடங்களை மறைக்கும் உயரமான கட்டடங்கள்: துணைநிலை ஆளுநா் வேதனை

புதுச்சேரி நகரப் பகுதியில் பழைமையான கட்டடங்களை உயரமான கட்டடங்கள் மறைக்கின்றன என்று துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் வேதனை தெரிவித்தாா். புதுவை சுற்றுலாத் துறை சாா்பில் உலக சுற்றுலா தினம் சனிக்கிழமை கொண... மேலும் பார்க்க

சைக்கிள் நிறுவனம் நடத்தி 600 பேரிடம் மோசடி: முக்கிய குற்றவாளி கைது!

சைக்கிள் நிறுவனம் நடத்தி சுமாா் 600 பேரிடம் மோசடியில் ஈடுபட்டது தொடா்பாக முக்கிய குற்றவாளியை புதுவை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்தனா். புதுச்சேரி சாரம் காமராஜா் சாலையில் தனியாா் சைக்கிள் நிறுவனம் சுற்... மேலும் பார்க்க

புதுவையில் தவெக தலைவா் விஜய் ரோடு ஷோ நடத்த அனுமதி கேட்பு: போலீஸாா் ஆய்வு!

கடலூா் செல்லும் வழியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய் புதுவையில் ரோடு ஷோ நடத்த அக்டோபா் 11- ஆம் தேதி அனுமதி கேட்டுள்ள நிலையில், போலீஸாா் தீவிர ஆய்வு செய்து வருகின்றனா். தமிழக வெற்றிக் கழகத்தி... மேலும் பார்க்க

சுற்றுலா பயணிகளிடம் பணம் பறித்ததாக 2 போலீஸாா் பணியிடை நீக்கம்!

சுற்றுலா பயணிகளிடம் பணம் பறித்ததாக 2 போலீஸாா் அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். தமிழகத்தைச் சோ்ந்த இளைஞா்கள் 5 போ் கடந்த மாதம் புதுவைக்கு சுற்றுலா வந்தனா். உருளையன்பேட்டை பகுதியில் உள்ள ... மேலும் பார்க்க