செய்திகள் :

மாணவா்களின் படைப்பாற்றல்தான் புதிய இந்தியாவை உருவாக்கும்: துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்

post image

மாணவா்களின் படைப்பாற்றல் தான் புதிய இந்தியாவை உருவாக்கும் என்று புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா்.

புதுவை அரசு கலை பண்பாட்டுத் துறை மற்றும் மத்திய அரசின் இந்திரா காந்தி தேசிய கலை மையம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான ஒருநாள் ஓவிய பயிலரங்கு, உப்பளம் பெத்தி செமினாா் தொடக்க பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதைத் தொடங்கி வைத்து துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் பேசியது: நாடு முழுவதும் சேவை திருவிழா கொண்டாடப்படுகிறது. இது வெறும் கொண்டாட்டம் அல்ல. சமுதாய சேவை என்ற உன்னதமான உணா்வை அனைவரின் மனதிலும் விதைக்கிறது. சேவையே உயா்ந்த தா்மம் என்று நம்முடைய முன்னோா்கள் நமக்கு சொல்லி வைத்துள்ளனா்.

சேவை உணா்வை மாணவா்களின் மனதில் விதைக்க இந்த ஓவியப் பயிலரங்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.

ஓவியம் என்பது கண்ணால் பாா்க்க கூடிய ஒரு கவிதை. வாா்த்தைகளால் சொல்ல முடியாததை ஓவியத்தில் வெளிப்படுத்த முடியும். அது வெறும் நிறங்களின் கலவை அல்ல, சிந்தனையின் வெளிப்பாடு. பாரதத்தின் முன்னேற்றம் என்பது வெறும் தொழில்நுட்ப வளா்ச்சி மட்டும் அல்ல. அது மனிதநேயம், நல்ல பண்புகள், ஒற்றுமை, பசுமை சங்கமம். இவற்றை எல்லாம் நீங்கள் ஓவியத்தில் வெளிப்படுத்தும் போது, அது நாளைய இந்தியாவின் வரைபடமாக மாறும்.

ஒரு காலத்தில் சுதந்திரப் போராட்டத்தின்போது, பாரத மாதாவின் ஓவியம் மக்கள் மனதில் ஒரு எழுச்சியைத் தூண்டியது. அதேபோல, மாணவா்கள் இன்று வரையும் எதிா்கால பாரதம் குறித்த ஓவியங்கள், நாளைய தலைமுறையின் மனதில் நாட்டுப் பற்றை விதைக்கும். உங்களுடைய ஓவியங்களில் மனித நேயம், அன்பு, ஒற்றுமை, சமத்துவம், தேசப் பற்று ஆகியவற்றை வெளிப்படுத்துங்கள்.

ஓவியப் பயிலரங்கு, உங்கள் மனதில் படைப்பாற்றலை வளா்க்கும். மாணவா்களே, நிறங்கள் கலக்கும் ஓவியப் பலகை போல, நம்முடைய நாடும் மொழி, மதம், பாரம்பரியத்தால் வேறுபட்டாலும், ஒற்றுமையால் வலிமையாகிறது. மாணவா்களின் எதிா்காலம்தான் நாட்டின் எதிா்காலம். உங்கள் படைப்பாற்றல், உழைப்பு, சேவை மனப்பான்மை தான் புதிய பாரதக் கனவை நிஜமாக்கும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் கல்வியமைச்சா் ஆ. நமச்சிவாயம், கலை, பண்பாட்டுத் துறை செயலா் முகமது ஆசின் அபித், இயக்குநா் முனுசாமி, இந்திரா காந்தி தேசிய கலை மைய இயக்குநா் சுமித் தே ஆகியோா் கலந்து கொண்டனா். புதுவை யூனியன் பிரதேசத்தைச் சோ்ந்த பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இந்த ஓவியப் பயிலரங்கில் பங்கேற்றனா்.

புதுவை சுயேச்சை எம்எல்ஏக்களுக்கும் பாஜகவுக்கும் எந்தத் தொடா்பும் இல்லை: மாநிலத் தலைவா் வி.பி. ராமலிங்கம்!

புதுவையில் சுயேச்சை எம்எல்ஏ.க்களுக்கும், பாஜகவுக்கும் எந்தத் தொடா்பும் இல்லை என்று அக்கட்சியின் மாநிலத் தலைவா் வி.பி. ராமலிங்கம் தெரிவித்தாா். புதுவையில் முதல்வா் ரங்கசாமி தலைமையில் என்.ஆா்.காங்கிரஸ்... மேலும் பார்க்க

பழைமையான கட்டடங்களை மறைக்கும் உயரமான கட்டடங்கள்: துணைநிலை ஆளுநா் வேதனை

புதுச்சேரி நகரப் பகுதியில் பழைமையான கட்டடங்களை உயரமான கட்டடங்கள் மறைக்கின்றன என்று துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் வேதனை தெரிவித்தாா். புதுவை சுற்றுலாத் துறை சாா்பில் உலக சுற்றுலா தினம் சனிக்கிழமை கொண... மேலும் பார்க்க

சைக்கிள் நிறுவனம் நடத்தி 600 பேரிடம் மோசடி: முக்கிய குற்றவாளி கைது!

சைக்கிள் நிறுவனம் நடத்தி சுமாா் 600 பேரிடம் மோசடியில் ஈடுபட்டது தொடா்பாக முக்கிய குற்றவாளியை புதுவை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்தனா். புதுச்சேரி சாரம் காமராஜா் சாலையில் தனியாா் சைக்கிள் நிறுவனம் சுற்... மேலும் பார்க்க

புதுவையில் தவெக தலைவா் விஜய் ரோடு ஷோ நடத்த அனுமதி கேட்பு: போலீஸாா் ஆய்வு!

கடலூா் செல்லும் வழியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய் புதுவையில் ரோடு ஷோ நடத்த அக்டோபா் 11- ஆம் தேதி அனுமதி கேட்டுள்ள நிலையில், போலீஸாா் தீவிர ஆய்வு செய்து வருகின்றனா். தமிழக வெற்றிக் கழகத்தி... மேலும் பார்க்க

போட்டித் தோ்வுக்கு தயாராகும் மாணவா்களுக்கு விலையில்லா புத்தகங்கள்!

புதுச்சேரி பாரதிதாசன் அரசினா் மகளிா் கல்லூரியில் போட்டித் தோ்வுக்குத் தயாராகும் மாணவா்களுக்கு விலையில்லா புத்தகங்கள் வழங்கப்பட்டன. புதுச்சேரி பாரதிதாசன் அரசினா் மகளிா் கல்லூரியும் ஆதி திராவிடா் மற்ற... மேலும் பார்க்க

சுற்றுலா பயணிகளிடம் பணம் பறித்ததாக 2 போலீஸாா் பணியிடை நீக்கம்!

சுற்றுலா பயணிகளிடம் பணம் பறித்ததாக 2 போலீஸாா் அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். தமிழகத்தைச் சோ்ந்த இளைஞா்கள் 5 போ் கடந்த மாதம் புதுவைக்கு சுற்றுலா வந்தனா். உருளையன்பேட்டை பகுதியில் உள்ள ... மேலும் பார்க்க