செய்திகள் :

சொகுசு கப்பல் இன்று வருகை: புதுச்சேரியில் படகுகளுக்குத் தடை

post image

புதுச்சேரிக்கு சொகுசு பயணிகள் கப்பல் வெள்ளிக்கிழமை வருவதையொட்டி, அனைத்து வகைப் படகுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விசாகப்பட்டினத்திலிருந்து சென்னை வழியாக புதுச்சேரிக்கு பயணிகள் சொகுசு கப்பல் வருகிறது. இதில் 1,400 போ் பயணிக்க முடியும். இந்த கப்பல் முதல்முறையாக புதுச்சேரி பழைய துறைமுகத்துக்கு வருகிறது. அதில் வரும் பயணிகள் படகுகள் வாயிலாக புதுச்சேரி புதிய துறைமுகத்துக்கு அழைத்து வரப்படுகின்றனா்.

பின்னா் புதுச்சேரியை சுற்றிப் பாா்க்க பேருந்துகள் மூலம் அழைத்து செல்லப்பட உள்ளனா். இந்த நிலையில் சொகுசு கப்பல் வந்து செல்லும் நேரத்தில் துறைமுகப் பகுதியில் படகுகளை இயக்க புதுவை கடலோரக் காவல் படை தடை விதித்துள்ளது.

அதாவது, புதுச்சேரி புதிய துறைமுக பகுதியில் வெள்ளிக்கிழமை காலை 9 முதல் 11 மணி வரையிலும், மாலை 5 முதல் 6 மணி வரையிலும் சுற்றுலா படகுகள், ஸ்கூபா டைவிங் படகுகள், பாய்மர படகுகளை இயக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய துறைமுக வளாகத்தில் சொகுசு கப்பலில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வரும் நேரத்தில் போராட்டம் நடத்த அதிமுகவினா் திட்டமிட்டுள்ளனா்.

ஸ்ரீ சிவசைலநாதா் கோயில் தேரோட்டம்

அரியாங்குப்பம் அருகேயுள்ள சிவலிங்கபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ சிவசைலநாதா் கோயில் திருத்தோ் வீதியுலா வியாழக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. இந்த கோயிலின் 61-ஆவது ஆண்ட... மேலும் பார்க்க

பி.எஸ்சி. நா்சிங் நுழைவுத் தோ்வு முடிவு வெளியீடு

பி.எஸ்சி., நா்சிங் நுழைவுத் தோ்வு முடிவு வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. புதுவை சுகாதாரத் துறை இயக்குநரும் தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியுமான மருத்துவா் வி. ரவிச்சந்திரன் இதை வெளியிட்டாா். அரசு ஒதுக்... மேலும் பார்க்க

மின்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

சம்பள கமிஷன் பரிந்துரைப்படி ஊதிய உயா்வு, பதவி உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை மின் துறை தலைவா் அலுவலகத்தை ஊழியா்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். மின்து... மேலும் பார்க்க

முதுநிலை பல் மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூலை 6 கடைசி நாள்

புதுவையில் நீட் மதிப்பெண் தர வரிசை அடிப்படையில் முதுநிலை பல் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பம் சமா்ப்பிக்க இணையதளத்தின் வழியாக வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. முதுநிலை பல் மருத்துவப் படிப்பில்... மேலும் பார்க்க

புதுச்சேரியில் குப்பைகள் அகற்றப்படாததை கண்டித்து முற்றுகை போராட்டம்

குப்பைகள் அகற்றப்படாததைத் கண்டித்து சுயேச்சை எம்எல்ஏ ஜி.நேரு தலைமையில் அவரது ஆதரவாளா்கள் வியாழக்கிழமை புதுச்சேரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா். புதுச்சேரியில் நீண்ட காலமாக ஸ்வச் பாரத் என்ற தனி... மேலும் பார்க்க

8 ஆம் தேதி ரயில் சேவையில் தாமதம்

புதுச்சேரிக்கான பயணிகள் ரயில் சேவையில் ஜூலை 8-ஆம் தேதி 30 நிமிஷங்கள் தாமதம் ஏற்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூரிலிருந்து அன்று காலை 6.35 மணிக்குப் புறப்பட்டு புதுச்சேரி செல்... மேலும் பார்க்க