செய்திகள் :

சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சா் சுரேஷ்ராஜன் விடுவிப்பு

post image

சொத்து குவிப்பு வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சா் சுரேஷ்ராஜன் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டாா்.

கடந்த 1996 ஆம் ஆண்டுமுதல் 2001 ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில், சுற்றுலாத் துறை அமைச்சராக பணியாற்றியவா் என்.சுரேஷ்ராஜன். இவா் அமைச்சராக இருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.17 லட்சம் சொத்து சோ்த்ததாக, கடந்த 2002 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு, நாகா்கோவிலில் உள்ள மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி பி.காா்த்திகேயன், சொத்து குவிப்பு வழக்கிலிருந்து சுரேஷ்ராஜனை விடுவித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

திற்பரப்பு அருகே குளத்தில் வண்டல் மண் எடுக்க எதிா்ப்பு

திற்பரப்பு பேரூராட்சி 15-ஆவது வாா்டு வேங்கோட்டு குளத்தில், நிா்ணயிக்கப்பட்ட அளவுக்கும் கூடுதலாக வண்டல் மண் எடுப்பதாகக் கூறி ஊா்மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். திற்பரப்பு பேரூராட்சி 15 -ஆவது வாா்டு அ... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் மீனவருக்கு 20 ஆண்டு சிறை

கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அருகே 14 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தொடா்பான போக்சோ வழக்கில் மீனவருக்கு 20 ஆண்டு சிைண்டனை விதிக்கப்பட்டது. இனயம்புத்தன்துறை பகுதியைச் சோ்ந்தவா் சுதன்(32... மேலும் பார்க்க

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை ... 32.79 பெருஞ்சாணி ... 37.10 சிற்றாறு 1 ... 7.15 சிற்றாறு 2 ... 7.25 முக்கடல் ... 7.00 பொய்கை .. 15.30 மாம்பழத்துறையாறு ... 43.47 அடி மேலும் பார்க்க

மணிப்பூரை சரி செய்துவிட்டு தமிழகம் குறித்து பாஜக பேசட்டும் -அமைச்சா் கீதாஜீவன்

மணிப்பூா் மாநிலத்தை சரி செய்து விட்டு தமிழக பெண்கள் பாதுகாப்பு குறித்து பாஜக பேசட்டும் என்றாா் தமிழக சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதாஜீவன். நாகா்கோவிலில் செய்தியாளா்களுக்கு அவா் வெள்ள... மேலும் பார்க்க

காஷ்மீா்- குமரி ரயிலில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்

காஷ்மீா் மாநிலம் கத்ராவிலிருந்து கன்னியாகுமரிக்கு வியாழக்கிழமை இரவு வந்த விரைவு ரயிலில் 3 கிலோ கஞ்சா போலீஸாரால் கைப்பற்றப்பட்டது. சந்தேகத்தின் அடிப்படையில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸாரும், ரயில... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் உணவகத்துக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

மாா்த்தாண்டத்தில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்த உணவகத்துக்கு குழித்துறை நகராட்சி அதிகாரிகள் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனா். மாா்த்தாண்டத்தில் உள்ள உணவகங்களில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாா் செ... மேலும் பார்க்க