செய்திகள் :

சொத்துப் பிரச்னையில் மூத்த மகன் வெட்டிக்கொலை! தந்தை சரண், இளைய மகன் தலைமறைவு!

post image

மன்னார்குடி அருகே சொத்துப் பிரச்னை காரணமாக மகனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த சேரி பிரதான சாலையைச் சேர்ந்தவர் பாலு என்கிற சி.பாலகிருஷ்ணன்(58). இவரது மனைவி பவானி(52). இவர்களுக்கு அரவிந்த் மோகன்(32), அருண் மோகன்(30) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இவர்களின் வீட்டின் கீழ்தளத்தில் பாலகிருஷ்ணன், அருண் மோகன் குடும்பத்தினரும், முதல் தளத்தில் அரவிந்த் மோகன் மற்றும் அவரது மனைவி ஜெயப்ரீத்தா, 2 வயது பெண் குழந்தையுடன் வசித்து வருகின்றனர்.

ஓராண்டுக்கு முன்னர், பாலகிருஷ்ணன் குடும்பத்தில் பாகப் பிரிவினை நடைபெற்றது.இதில் மூத்தமகன் அரவிந்த் மோகனுக்கும் அவரது தந்தை பாலகிருஷ்ணனுக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் புதன்கிழமை (மே 7) இப்பிரச்னை குறித்து பேச்சுவார்த்தையும் நடத்தினர். அப்போது, இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்ப்பட்டதையடுத்து, மறுநாள் பேசிக்கொள்ளலாம் என கூறி சென்று விட்டனர்.

இந்நிலையில், பெற்றோரிடம் பேசிவிட்டு வருவதாக மனைவி ஜெயப்ரீத்தாவிடம் அருண்மோகன் கூறிவிட்டு, மாடியிலிருந்து கீழே இறங்கி வந்து பேசிக்கொண்டிருந்த போது, பாலகிருஷ்ணனும், அருண்மோகன் இருவரும் சேர்ந்து அரவிந்த் மோகனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

அப்போது, சத்தம் கேட்டு அங்குவந்த தாயார் பவானி, ஜெய ப்ரீத்தா இருவரும் தடுக்க முயன்றதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதில் காயமடைந்து மூவரையும் அருகிலிருந்தவர்கள் மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். இதில்,அரவிந்த்மோகனை மேல்சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை அதிகாலை அவர் உயிரிழந்தார்.

இது குறித்து, கோட்டூர் காவல்நிலையத்தில் ஜெயப்ரீத்தா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, மேல்விசாரணை செய்து வரும் நிலையில், திருத்துறைப்பூண்டி நடுவர் நீதி மன்றத்தில் வியாழக்கிழமை காலை பாலகிருஷ்ணன் சரணடைந்தார். தலைமறைவாக உள்ள அருண் மோகனை, போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

சொத்துப் பிரச்னைக்காக மூத்த மகனை இளைய மகனுடன் சேர்ந்து தந்தை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க:பிளஸ் 2: தோல்வி பயத்தில் தற்கொலை செய்துகொண்ட மாணவி தேர்ச்சி!

தமிழகத்தில் நாளை 2 இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை!

தமிழத்தில் வெள்ளிக்கிழமையான நாளை(மே 9) இரண்டு இடங்களில் நடைபெறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழநாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி சில முக்கிய... மேலும் பார்க்க

வெய்யில் வெளுத்து வாங்கும் வேலூரில் 3-வது நாளாக மழை!

பகலில் வெய்யில் கொளுத்திய நிலையில் மாலையில் வேலூரில் வெளுத்து வாங்கிய கனமழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.வேலூர் மாவட்டத்தில் அக்கினி வெய்யில் துவங்கியதில் இ... மேலும் பார்க்க

தில்லியே திரும்பிப் பார்க்கும் நம்முடைய மாதிரிப் பள்ளி: முதல்வர் ஸ்டாலின்

தில்லியே திரும்பிப் பார்க்கும் வகையில் நம்முடைய மாதிரிப் பள்ளி உருவாகியிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.பள்ளிக் கல்வித் துறை சார்பில் திருச்சிராப்பள்ளி, துவாக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூர... மேலும் பார்க்க

பெரம்பூர் மாநகராட்சி பள்ளி மாணவிகள் பிளஸ் 2 தேர்வில் சாதனை!

தமிழகத்தில் இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து, சென்னை, பெரம்பூர் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சென்னையிலேயே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்... மேலும் பார்க்க

கண்ணீர் வேண்டாம்.. கைகள் இன்றி +2 தேர்வில் சாதனை படைத்த மாணவருக்கு ஸ்டாலின் பதில்

கைகள் இன்றி பொதுத் தேர்வில் சாதித்த மாணவருக்கு, கண்ணீர் வேண்டாம் தம்பி என தமிழக முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.தமிழ்நாடு பாடத்திட்டத்தில் பயின்று பொதுத் தேர்வு எழுதிய +2 மாணவர்களுக்கான தேர்வு ம... மேலும் பார்க்க

துவாக்குடியில் ரூ. 56.47 கோடியில் புதிய கட்டடங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்!

திருச்சி, துவாக்குடியில் ரூ. 56.47 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.பள்ளிக் கல்வித் துறை சார்பில் திருச்சிராப்பள்ளி, துவாக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி... மேலும் பார்க்க