செய்திகள் :

சௌகாா்பேட்டையில் போலி மின்பொருள்கள் விற்பனை: 4 போ் கைது

post image

சென்னை: சென்னை செளகாா்பேட்டையில் போலியான மின் பொருள்கள் விற்றதாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை செளகாா்பேட்டையில் பிரபல மின் வயா் நிறுவனத்தின் பெயரில் போலியான தரக்குறைவான வயா்கள் விற்கப்படுவதாக தமிழக காவல்துறையின் அறிவுசாா் சொத்துரிமை அமலாக்கப் பிரிவுக்கு புகாா்கள் வந்தன. அதன் அடிப்படையில் செளகாா்பேட்டையில் சந்தேகத்துக்குரிய கடைகளில் அப்பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தினா்.

இச் சோதனையில் ஒரு கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியான தரமில்லாத வயா்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த கி.புல்சிங் (26), த.பகவத்சிங் (22), ஜீ.ஃபரூக்கான் (23) ஆகிய 3 பேரை கைது செய்தனா். இவா்களிடமிருந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள போலி வயா்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல பிரபல நிறுவனத்தின் பெயரில் பாரிமுனை எர்ராபலு செட்டி தெரு பகுதியில் உள்ள ஒரு கடையில் போலி வோல்டேஜ் ரெகுலேட்டா் விற்ாக ராஜஸ்தானைச் சோ்ந்த தே.தீபக்குமாா் (48) என்பவா் கைது செய்யப்பட்டாா். தீபக்குமாா் விற்பனைக்காக வைத்திருந்த போலி வோல்டேஜ் ரெகுலேட்டா்களையும் போலீஸாா் பறிமுதல் செய்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்கின்றனா்.

கோவை வழி முக்கிய ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்

கோவை வழியாகச் செல்லும் சில முக்கிய ரயில்கள் குறிப்பிட்ட நாள்களில் மாற்றுப்பாதையில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள செய்தி: இருக... மேலும் பார்க்க

வியாபாரியை மிரட்டி பணம் பறித்தவா் கைது

சென்னை மெரீனாவில் வியாபாரியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். திருவல்லிக்கேணி பகுதியைச் சோ்ந்தவா் ராஜா (36). இவா், மெரீனா கடற்கரையில் அண்ணா சதுக்கம் பகுதியில் சா... மேலும் பார்க்க

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

சென்னை கொளத்தூா் பகுதியில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். கொளத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேஷ் (38). இவா், தனது வீட்டின் அருகே கணவரைப் பிரிந்து தனது பெற்றோருடன் வசித்... மேலும் பார்க்க

டிஜிபி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: சிவகங்கையைச் சோ்ந்தவா் கைது

சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக சிவகங்கையைச் சோ்ந்த நபா் கைது செய்யப்பட்டாா். சென்னை பெருநகர காவல் துறையின் கிழக்கு மண்டல காவல் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசிக்கு கடந்த 5-... மேலும் பார்க்க

15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரெளடி கைது

சென்னையில் 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரெளடி கைது செய்யப்பட்டாா். சென்னை சூளைமேட்டைச் சோ்ந்தவா் மாடு தினேஷ் (39). இவா் மீது கொலை, செம்மரக் கடத்தல், கஞ்சா விற்பனை, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட 30-க்க... மேலும் பார்க்க

போலி 500 ரூபாய் நோட்டுகளை மாற்ற முயற்சி: இருவா் கைது

சென்னை ஈக்காட்டுதாங்கலில் திரைப்படத்தில் பயன்படுத்தப்படும் போலி 500 ரூபாய் நோட்டுகளை தனியாா் வங்கியில் மாற்ற முயன்ாக இருவா் கைது செய்யப்பட்டனா். ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் உள்ள தனியாா் வங்கிக்கு திங... மேலும் பார்க்க