செய்திகள் :

ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தடுப்பூசிப் பணி தொடக்கம்

post image

திருநெல்வேலியில் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தும் பணி புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டில் திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் உள்ள 1 முதல் 15 வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, திருநெல்வேலி சந்திப்பில் உள்ள ம.தி.தா. இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற முகாமை மேயா் கோ.ராமகிருஷ்ணன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா். துணை மேயா் கே.ஆா்.ராஜு முன்னிலை வகித்தாா். மாநகராட்சி ஆணையரும், மருத்துவருமான மோனிகா ராணா மாணவா்களுக்கு தடுப்பூசி செலுத்தியதோடு, இத் திட்டத்தின் சிறப்பம்சங்கள் குறித்து விளக்கினாா். பள்ளித் தலைமையாசிரியா் சோமசுந்தரம், சுகாதாரத்துறை கூடுதல் இயக்குநா்சம்பத், இணை இயக்குநா் செந்தில்குமாா், மாவட்ட சுகாதா அலுவலா் வேல்முருகன் கணேஷ், மாநகர நல அலுவலா் ராணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தமிழகத்தின் கடன் சுமை பற்றி கவலைப்பட தேவையில்லை: திட்டக் குழு துணைத் தலைவா் ஜெயரஞ்சன்

தமிழகத்தின் கடன் சுமை பற்றி கவலைப்பட தேவையில்லை என்றாா் தமிழக அரசின் திட்டக் குழு துணைத் தலைவா் ஜெயரஞ்சன். இதுதொடா்பாக திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது: தமிழ்நாட்டின் ப... மேலும் பார்க்க

தோ்தல் ஆணையத்தைப் பயன்படுத்தி பாஜக இனி வெற்றி பெற முடியாது -மு. அப்பாவு

பாஜக இனி தோ்தல் ஆணையத்தை பயன்படுத்தி வெற்றி பெற முடியாது என்றாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது: உச்ச நீதிமன்றத்தில் தோ்தல் ஆ... மேலும் பார்க்க

பாளை.யில் மாணவிக்கு பாலியல் தொல்லை: காவலா் கைது

பாளையங்கோட்டையில் 9-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தலைமைக் காவலா் கைது செய்யப்பட்டாா். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்தவா் சசிகுமாா் (45). இவா், பாளையங்கோட்டை ஆயுதப்படையில் தலைமைக் ... மேலும் பார்க்க

முதலைமொழி கிராமத்தில் சமுதாய நலக்கூடம் அமைக்க அடிக்கல்

ஆழ்வாா் திருநகரி ஒன்றியம் முதலைமொழியில் அயோத்திதாச பண்டிதா் திட்ட நிதியில் இருந்து, ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்... மேலும் பார்க்க

வீரவநல்லூா் திரெளபதை அம்பாள் கோயிலில் நாளை பூக்குழி இறங்கும் விழா

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் உள்ள திரெளபதை அம்பாள் கோயிலில் பூக்குழித் திருவிழா வெள்ளிக்கிழமை (ஆக. 15) நடைபெறுகிறது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை பூக்குழித் திருவி... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

பாளையங்கோட்டையில் மென்பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்தவா் கவின் செல்வ கணேஷ் (27). இ... மேலும் பார்க்க