செய்திகள் :

ஜப்பானில் நாளை சுனாமி வருகிறதா? கரோனா தொற்றை கூறிய பாபா வங்கா கணிப்பு!

post image

ஜப்பானில் சுனாமி வரவிருப்பதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவி வருகின்றன.

புதிய பாபா வங்கா என்றழைக்கப்படும் ரியோ தட்சுகி என்பவர் 1999 ஆம் ஆண்டில் கணித்த சில கணிப்புகள் நிஜமாகவே நிகழ்ந்த நிலையில், அவரை தீர்க்கதரிசியாகவே பலரும் கருதினர். அவரது கணிப்புகளாக வேல்ஸ் இளவரசி டயானாவின் இறப்பு, 2011-ல் ஜப்பானில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி, கரோனா தொற்று முதலியவற்றை அவர் கூறியிருந்தார். அவைகளும் ஏதோ ஒரு வகையில் நிகழ்ந்து விட்டன. அதிலிருந்து அவரை சிலர் வழிபட்டும் வருகின்றனர்.

இந்த நிலையில், அவர் 2025, ஜூலை 5 ஆம் தேதியில் ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கமும் சுனாமியும் ஏற்படப் போவதாக முன்னரே கணித்திருந்ததால், அந்நாட்டில் பலரும் பதற்றமடைந்துள்ளனர். இருப்பினும், 2025 தொடங்கியதில் இருந்து கணிப்புகளை நிறுத்தி விட்டதாகவும், அவருக்கு காட்சிகள் (தீர்க்கதரிசனம்) எதுவும் தோன்றவில்லை என்றும் கூறினார்.

ஜப்பான் - பிலிப்பைன்ஸ் இடையே கடலுக்கடியில் விரிசல் ஏற்பட்டு, 2011-ல் ஏற்பட்ட சுனாமியைவிட 3 மடங்கு சுனாமியால் உயரமான அலைகள் எழும் என்று அவர் கூறியிருந்ததால், மில்லியன் கணக்கானோர் ஆபத்தில் இருப்பதாக பொதுமக்கள் சிலர் பதற்றமடைந்துள்ளனர்.

தட்சுகியின் கணிப்புகள் தொடர்பான விடியோக்கள், சித்திரிப்பு காட்சிகளும் சமூக ஊடகங்களை ஆட்கொண்டு, நாளை உலகம் அழிந்து விடுவதாகவும் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

இதனிடையே, புதன்கிழமை பிற்பகல் 3:30 மணியளவில் ஜப்பானின் ககோஷிமா மாகாணத்தில் உள்ள டோகாரா தீவுகளில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மற்றும் ஷின்மோ மலையில் எரிமலை வெடிப்பு ஏற்பட்ட நிலையில், பலரும் பதற்றத்தின் உச்சத்துக்கு சென்றதாக சமூக ஊடகங்களில் தெரிவிக்கின்றனர்.

இந்தப் பதற்றத்துக்கிடையே, ஜப்பானில் விமானப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஜப்பானுக்கு சுற்றுலா மேற்கொள்ளவிருந்த ஹாங்காங், சீனா, தாய்லாந்து, வியட்நாம் உள்பட கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த பலரும், தங்கள் பயணத்தை ரத்து செய்து வருகின்றனர். சுனாமி வதந்திகளால் ஜப்பான் சுற்றுலாத் துறையில் 3.9 பில்லியன் டாலர் (ரூ. 33.2 ஆயிரம் கோடி) இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் பரவும் வதந்திகளுக்கு மறுப்பு தெரிவித்த அந்நாட்டு நில அதிர்வு நிபுணர்கள், நிலநடுக்கம் அல்லது சுனாமி ஏற்படுவதற்கான எந்த தரவும் இல்லை என்று கூறுகின்றனர். ஜூலை 5 ஆம் தேதிக்கு, எந்த அதிகாரப்பூர்வ சுனாமி எச்சரிக்கையையும் ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் விடுக்கவில்லை.

இதனிடையே, பொதுமக்கள் அனைவரும் அமைதியாக இருக்குமாறும், நிபுணர்களின் அறிவுறுத்தலைக் கேட்குமாறும் தட்சுகி கூறியுள்ளார்.

Japanese Baba Vanga Predicts Tsunami

நேபாளத்தில் புதிய வகை கரோனா பரவல்! 7 நாள்களில் 35 பேர் பாதிப்பு!

நேபாள நாட்டில் பரவி வரும் புதிய வகை கரோனா தொற்றால், 7 நாள்களில் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேபாளத்தின் 31 மாவட்டங்களிலும், கடந்த டிசம்பர் மாதம் முதல் கரோனா தொற்று மீண்டும் பரவ... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: வீட்டில் இருந்து தப்பி மக்களைத் தாக்கிய வளர்ப்பு சிங்கம்! விடியோ வைரல்!

பாகிஸ்தானின் லாஹுர் நகரத்தில் வீட்டிலிருந்து தப்பிய வளர்ப்பு சிங்கம், சாலையில் சென்ற மக்களைத் தாக்கியதில் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். லாஹுர் நகரத்திலுள்ள ஒரு வீட்டில் வளர்க்கப்பட்ட ... மேலும் பார்க்க

செக் குடியரசின் முக்கிய நகரங்களில் மின்சாரம் துண்டிப்பு! சைபர் தாக்குதலின் சதியா?

செக் குடியரசு நாட்டின் தலைநகர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால், அந்நாட்டின் பொது போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.செக் குடியரசின் தலைநகர் பிராக் உள்ளிட்ட வடக்க... மேலும் பார்க்க

காஸாவில் வான்வழித் தாக்குதல், துப்பாக்கிச்சூடு: 35 பேர் பலி

காஸாவில் வான்வழித் தாக்குதல், துப்பாக்கிச்சூட்டிற்கு 35 பாலஸ்தீனியர்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஸாவில் வெள்ளிக்கிழமை அதிகாலை இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 15 பாலஸ்தீனியர்கள... மேலும் பார்க்க

ரோமில் எரிவாயு நிலையம் வெடித்ததில் 20 பேர் காயம்

ரோமில் எரிவாயு நிலையம் வெடித்ததில் 20 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இத்தாலியின் தென்கிழக்கு ரோமில் உள்ள எரிவாயு நிலையம் வெள்ளிக்கிழமை அதிகாலை வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுத... மேலும் பார்க்க

தரவுகளைத் திருடிய கூகுள்? ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு ரூ.2680 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு!

அமெரிக்காவில் ஆன்ட்ராய்டு பயனர்களின் தரவுகளைத் தவறாகப் பயன்படுத்தியதாக கூகுள் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில், 1.4 கோடி ஆன்ட்ராய்டு பயனர்களின் தரவுகளை... மேலும் பார்க்க