செய்திகள் :

ஜப்பானில்.. முன்னாள் சிறைக் கைதியின் கல்லறையில் மன்னிப்புக் கோரிய அதிகாரிகள்! ஏன் தெரியுமா?

post image

ஜப்பானில், தவறுதலாகக் கைது செய்யப்பட்ட முன்னாள் சிறைக் கைதி ஒருவரின் கல்லறையில் காவல் மற்றும் நீதித் துறை அதிகாரிகள் மன்னிப்புக் கோரியுள்ளனர்.

டோக்கியோவுக்கு அருகில் அமைந்துள்ள யோகோஹாமா நகரத்தில் உள்ள இயந்திரத் தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த 3 நிர்வாகிகள், கடந்த 2020 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக உபகரணங்களை ஏற்றுமதி செய்ததாகத் தவறுதலாகக் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மூன்று நிர்வாகிகளில் ஒருவரான ஷிசுவோ ஐஷிமா (வயது 72), புற்றுநோயால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட பிணை வேண்டி 8 முறை அவரது வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுக்கல் நிராகரிக்கப்பட்டன.

அவர் மீதான குற்றச்சாட்டுகள் ரத்து செய்யப்படுவதற்கு 5 மாதங்களுக்கு முன்பாக, கடந்த 2021 பிப்ரவரியில் அவர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால், மிகவும் தாமதமாக அளிக்கப்பட்ட சிகிச்சையால் எந்தவொரு பலனுமின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், ஜப்பானின் காவல் மற்றும் நீதித் துறை அதிகாரிகள் ஐஷிமாவின் கல்லறையில் மலர் தூவி, தலை வணங்கி அதிகாரப்பூர்வமாக மன்னிப்புக் கோரியுள்ளனர்.

இதுகுறித்து, டோக்கியோ காவல் துறையின் உயர் அதிகாரி, எங்களது சட்டவிரோதமான விசாரணை மற்றும் கைதுகளுக்கு நாங்கள் மன்னிப்புக் கோருகிறோம் எனக் கூறியுள்ளார்.

மேலும், டோக்கியோ மாவட்ட துணை அரசு வழக்கறிஞரான ஹிரோஷி இச்சிகாவா, ஐஷிமாவுக்கு பிணை நிராகரிக்கப்பட்டது அந்நியாயம் என ஒப்புக்கொண்டதுடன், அதற்காக தனது வருத்தங்களையும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, உபகரணங்களை சட்டவிரோதமான முறையில் ஏற்றுமதி செய்த குற்றச்சாட்டுகளை அவர்களது நிறுவனம் தொடர்ந்து மறுத்து வந்தது.

பின்னர், அந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்ட நிலையில், தவறுதலாகக் கைது செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு டோக்கியோ அரசு ரூ.9.4 கோடி இழப்பீடு வழங்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேறினார் ஈரான் தூதர்!

In Japan, police and justice officials have apologized at the grave of a former prison inmate who was wrongly arrested.

‘இந்தியா-பாகிஸ்தான் சண்டையை அமெரிக்கா தலையிட்டு நிறுத்தியது’- 40-ஆவது முறையாக டிரம்ப் கருத்து

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சண்டையை வா்த்தகத்தைப் பயன்படுத்தி அமெரிக்காதான் நிறுத்தியது’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் 40-ஆவது முறையாக கருத்து தெரிவித்துள்ளாா். இந்திய பொருள்கள் மீது அவா் அ... மேலும் பார்க்க

‘எச்1பி’ விசா நடைமுறையில் மாற்றம்: அமெரிக்க வா்த்தக அமைச்சகம்

‘எச்1பி’ நுழைவுஇசைவு (விசா) திட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ள அமெரிக்கா அதிபா் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டு வருவதாக அந்நாட்டு வா்த்தக அமைச்சா் ஹோவா்ட் லுட்னிக் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். எச்1 பி விச... மேலும் பார்க்க

இந்தியா-வங்கதேசம் எல்லைப் பேச்சுவாா்த்தை: அதிகாரிகள் மீதான தாக்குதல் குறித்து முறையீடு

இந்தியா-வங்கதேசம் இடையேயான எல்லைப் பேச்சுவாா்த்தை வியாழக்கிழமை நிறைவடைந்தது. இந்திய எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) மற்றும் வங்கதேச பாதுகாப்பு படை (பிஜிபி) இடையே நடைபெற்ற இந்தப் பேச்சுவாா்த்தையின்ப... மேலும் பார்க்க

‘உணவுக்காக வந்த பாலஸ்தீனா்கள் கடத்தல்’

உணவுப் பொருள்களை வாங்குவதற்காக விநியோக மையங்களுக்கு வந்த ஏராளமான பாலஸ்தீனா்களை இஸ்ரேல் படையினா் கடத்திச் சென்று மாயமாக்கியுள்ளதாக ஐ.நா. மனித உரிமை ஆணைய நிபுணா்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா். இது குறித்து ... மேலும் பார்க்க

ரஷிய எண்ணெய்யால் இந்தியாவுக்கு பெரிய லாபம் இல்லை! ஆய்வறிக்கையில் தகவல்

ரஷியாவில் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால் இந்தியாவுக்குக் கிடைக்கும் லாபம் மிகைப்படுத்தப்பட்டுள்ளது என்றும், உண்மையான சேமிப்பு ஆண்டுக்கு 250 கோடி டாலா்கள் மட்டுமே என்றும் ஒர... மேலும் பார்க்க

சூடான்: துணை ராணுவ தாக்குதலில் 24 போ் உயிரிழப்பு

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் துணை ராணுவப் படையான ஆா்எஸ்எஃப் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 24 போ் உயிரிழந்ததாக அங்கு நடைபெறும் உள்நாட்டுப் போரைக் கண்காணித்துவரும் மருத்துவக் குழு தெரிவித்தது. அந்த ... மேலும் பார்க்க