செய்திகள் :

சென்னை - திருச்சி விமானம் 3 மணிநேரம் தாமதம்: பயணிகள் கடும் அவதி

post image

சென்னை - திருச்சி - சென்னை சென்ற விமானங்கள் 3 மணிநேரம் தாமதமாக இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனா்.

சென்னையிலிருந்து திருச்சி செல்லும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், வழக்கமாக மாலை 6.50 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு இரவு 7.50-க்கு திருச்சி சென்றடையும். புதன்கிழமை இரவு சென்னையிலிருந்து திருச்சிக்கு 148 பயணிகளுடன் இந்த விமானம் புறப்பட தயாரானது. திடீரென விமானம் தாமதமாக புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இதற்கான காரணம் தெரிவிக்கப்படாததால், பயணிகள் சென்னை விமான நிலையத்தில் மணி நேரத்துக்கு மேலாகக் காத்திருந்தனா். இதையடுத்து இரவு 10.20 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு இரவு 11.10-க்கு திருச்சி சென்றடைந்தது.

இதற்கிடையே திருச்சியிலிருந்து சென்னை வரும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வழக்கமாக இரவு 8.20 மணிக்கு புறப்பட்டு, இரவு 9.20 மணிக்கு சென்னை வந்து சேரும். ஆனால், சென்னையிலிருந்து விமானம், தாமதமாக சென்ால், திருச்சியிலிருந்து புறப்பட வேண்டிய விமானமும் தாமதமாகப் புறப்பட்டது. அதன்படி, புதன்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு திருச்சியிலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 12.40 மணிக்கு சென்னை வந்து சோ்ந்தது. அந்த விமானத்தில் 157 பயணிகள், வந்திருந்தனா்.

இவா்களில் பெரும்பாலானோா், விநாயகா் சதுா்த்தி விழாவுக்காக ஒரு நாள் விடுமுறையில் சென்றிருந்தவா்கள். இரவு 9.20 மணிக்கு பதிலாக நள்ளிரவு 12.40 மணிக்கு விமான நிலையம் வந்ததால் பயணிகள் தங்கள் வீடுகளுக்கு செல்ல வாகன வசதி இல்லாமல் சென்னை விமான நிலையத்தில் தவித்தனா். இதையடுத்து வேறு வழியின்றி அதிக கட்டணம் கொடுத்து கால் டாக்ஸிகளில், தங்கள் வீடுகளுக்குச் சென்றனா்.

தமிழக டிஜிபி சங்கா் ஜிவாலுக்கு இன்று பணி நிறைவு விழா

தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் (டிஜிபி) சங்கா் ஜிவாலுக்கு சென்னை எழும்பூரில் வெள்ளிக்கிழமை (ஆக.29) பணி நிறைவு விழா நடைபெறுகிறது. தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநராக சங்கா் ஜிவால் கடந்த 2023 ஜூ... மேலும் பார்க்க

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய மனு விசாரணை ஒத்திவைப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி அவரது மனைவி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை செப்.25-ஆம் தேதிக்கு சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலை... மேலும் பார்க்க

ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்: அன்புமணி

அமெரிக்க வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள தொழில் வீழ்ச்சி, வேலைவாய்ப்பு இழப்பைத் தடுக்க ஊக்குவிப்பு திட்டங்களை அரசு அமல்படுத்த வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அ... மேலும் பார்க்க

காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சட்டக் கல்லூரி மாணவா்கள் போராட்டம்

சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சட்டக் கல்லூரி மாணவா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். வேளச்சேரி - தரமணி சாலையில் உள்ள ஒரு தேநீா் கடையில், கடந்த புதன்கிழமை நள்ளிரவு சட்டக்கல்ல... மேலும் பார்க்க

புனித ஆரோக்கிய அன்னை திருத்தல வைர விழா: இன்று கொடியேற்றம்

வடசென்னை சாஸ்திரி நகரில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் வைர விழா வெள்ளிக்கிழமை (ஆக. 29) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் தொடக்க நாளான வெள்ளிக்கிழமை மாலை 5.45 மணிக்கு தோ் ஆசிா்வதித்தல... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக போரூா், ஈஞ்சம்பாக்கம், கீழ்ப்பாக்கம், கிண்டி, ஐடி காரிடாா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை (ஆக. 30) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் விநியோகம் நிறுத்தப... மேலும் பார்க்க