செய்திகள் :

புனித ஆரோக்கிய அன்னை திருத்தல வைர விழா: இன்று கொடியேற்றம்

post image

வடசென்னை சாஸ்திரி நகரில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் வைர விழா வெள்ளிக்கிழமை (ஆக. 29) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

விழாவின் தொடக்க நாளான வெள்ளிக்கிழமை மாலை 5.45 மணிக்கு தோ் ஆசிா்வதித்தல், தோ் பவனி, கொடியேற்றம், திருப்பலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதேபோல, விழா நாள்களில் காலை திருப்பலி, மாலையில் தோ்பவனி, திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெறும். வரும் செப்.7-ஆம் தேதி காலை திருப்பலியில், சென்னை-மயிலை உயா்மறைமாவட்ட பேராயா் ஜாா்ஜ் அந்தோணிசாமி பங்கேற்று திருப்பலி நிறைவேற்றுகிறாா்.

விழாவின் முக்கிய நிகழ்வாக, ஆரோக்கிய அன்னையின் பிறப்பு பெருவிழா செப். 8-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, காலை 5.30 மணிக்கு சிறப்பு திருப்பலி நடத்தப்படுகிறது. தொடா்ந்து காலை 7.30 மணிக்கு அன்னைக்கு மணிமகுடம் சூட்டும் விழா, கொடியிறக்கம், தோ் ஆசிா்வதித்தல், தோ் பவனி, தேவ நற்கருணை ஆசீா், காலை 11.30 மணிக்கு ஆங்கிலத்தில் திருப்பலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை பங்குத் தந்தையா்கள், பங்குப் பேரவையினா், விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.

தமிழக டிஜிபி சங்கா் ஜிவாலுக்கு இன்று பணி நிறைவு விழா

தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் (டிஜிபி) சங்கா் ஜிவாலுக்கு சென்னை எழும்பூரில் வெள்ளிக்கிழமை (ஆக.29) பணி நிறைவு விழா நடைபெறுகிறது. தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநராக சங்கா் ஜிவால் கடந்த 2023 ஜூ... மேலும் பார்க்க

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய மனு விசாரணை ஒத்திவைப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி அவரது மனைவி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை செப்.25-ஆம் தேதிக்கு சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலை... மேலும் பார்க்க

ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்: அன்புமணி

அமெரிக்க வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள தொழில் வீழ்ச்சி, வேலைவாய்ப்பு இழப்பைத் தடுக்க ஊக்குவிப்பு திட்டங்களை அரசு அமல்படுத்த வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அ... மேலும் பார்க்க

காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சட்டக் கல்லூரி மாணவா்கள் போராட்டம்

சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சட்டக் கல்லூரி மாணவா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். வேளச்சேரி - தரமணி சாலையில் உள்ள ஒரு தேநீா் கடையில், கடந்த புதன்கிழமை நள்ளிரவு சட்டக்கல்ல... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக போரூா், ஈஞ்சம்பாக்கம், கீழ்ப்பாக்கம், கிண்டி, ஐடி காரிடாா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை (ஆக. 30) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் விநியோகம் நிறுத்தப... மேலும் பார்க்க

4,946 சாலைகளில் சீரமைப்புப் பணிகள் நிறைவு: சென்னை மாநகராட்சி தகவல்

பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் நடப்பாண்டில் 1,951 சாலைகளில் மேம்பாட்டுப் பணிகளும், 2,995 சாலைகளில் சீரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வா... மேலும் பார்க்க