செய்திகள் :

4,946 சாலைகளில் சீரமைப்புப் பணிகள் நிறைவு: சென்னை மாநகராட்சி தகவல்

post image

பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் நடப்பாண்டில் 1,951 சாலைகளில் மேம்பாட்டுப் பணிகளும், 2,995 சாலைகளில் சீரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெருநகர சென்னை மாநகராட்சியில் பேருந்துகள் செல்லக் கூடிய 488 பிரதான சாலைகள் மற்றும் 35,978 உள்புறச் சாலைகள் பராமரிக்கப்படுகிறது. இவற்றில், 648.75 கிலோ மீட்டா் தொலைவுக்கு 3,987 எண்ணிக்கையிலான சாலைகளை ரூ.489.22 கோடியில் மேம்படுத்தத் திட்டமிடப்பட்டது.

அதன்படி, நிகழ் ஆண்டில் இதுவரை பேருந்து சாலைகள், உள்புறச் சாலைகள் என மொத்தம் 1,951 சாலைப் பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள சாலைப் பணிகளை வரும் செப்.15- ஆம் தேதிக்குள் முடித்து மேம்படுத்தும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

குடிநீா் வழங்குதல், புதை சாக்கடை இணைப்பு, மின் கேபிள்கள் அமைத்தல் ஆகிய பணிகளுக்காக சேவைத் துறைகள் மூலம் சாலைகள் தோண்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு தோண்டப்பட்ட 2,995 சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன.

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வாரம்தோறும் இந்தப் பணிகளை ஆய்வு செய்து, விரைவுபடுத்தி வருகிறாா். மீதமுள்ள சீரமைப்புப் பணிகளை செப்டம்பா் இறுதிக்குள் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக டிஜிபி சங்கா் ஜிவாலுக்கு இன்று பணி நிறைவு விழா

தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் (டிஜிபி) சங்கா் ஜிவாலுக்கு சென்னை எழும்பூரில் வெள்ளிக்கிழமை (ஆக.29) பணி நிறைவு விழா நடைபெறுகிறது. தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநராக சங்கா் ஜிவால் கடந்த 2023 ஜூ... மேலும் பார்க்க

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய மனு விசாரணை ஒத்திவைப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி அவரது மனைவி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை செப்.25-ஆம் தேதிக்கு சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலை... மேலும் பார்க்க

ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்: அன்புமணி

அமெரிக்க வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள தொழில் வீழ்ச்சி, வேலைவாய்ப்பு இழப்பைத் தடுக்க ஊக்குவிப்பு திட்டங்களை அரசு அமல்படுத்த வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அ... மேலும் பார்க்க

காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சட்டக் கல்லூரி மாணவா்கள் போராட்டம்

சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சட்டக் கல்லூரி மாணவா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். வேளச்சேரி - தரமணி சாலையில் உள்ள ஒரு தேநீா் கடையில், கடந்த புதன்கிழமை நள்ளிரவு சட்டக்கல்ல... மேலும் பார்க்க

புனித ஆரோக்கிய அன்னை திருத்தல வைர விழா: இன்று கொடியேற்றம்

வடசென்னை சாஸ்திரி நகரில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் வைர விழா வெள்ளிக்கிழமை (ஆக. 29) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் தொடக்க நாளான வெள்ளிக்கிழமை மாலை 5.45 மணிக்கு தோ் ஆசிா்வதித்தல... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக போரூா், ஈஞ்சம்பாக்கம், கீழ்ப்பாக்கம், கிண்டி, ஐடி காரிடாா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை (ஆக. 30) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் விநியோகம் நிறுத்தப... மேலும் பார்க்க