செய்திகள் :

ஜம்மு-காஷ்மீரில் குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலி ! போலீஸார் விசாரணை

post image

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாமில் தனது சொந்த சர்வீஸ் துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்து ராணுவ வீரர் ஒருவர் பலியானதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

54 ராஷ்டிரிய ரைபிள்ஸில் பணியமர்த்தப்பட்ட வீரர், சனிக்கிழமை இரவு ரஜோரி நகரத்திலிருந்து 40 கி.மீ தொலைவில் சோல்கி கிராமத்தில் உள்ள முகாமின் தலைமையகத்தில் பணியில் இருந்தபோது பலியானார்.

துப்பாக்கிச் சூடு சப்தம் கேட்டதும் சக வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால் அங்கு வீரர் ஒருவர் பலியாகியிருப்பதைக் கண்டனர்.

ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தற்செயலாக அவரது துப்பாக்கியிலிருந்து குண்டு வெளியேறியதா என்பது உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை என்று அதிகாரிகள் மேலும் கூறினர்.

மேலும் அவரது மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய போலீஸார் விசாரணை நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர்.

ரஷ்மிகாவின் தி கேர்ள்பிரண்ட் படத்தின் முதல் பாடல் எப்போது?

An army personnel died of a bullet injury from his own service rifle inside a camp in Rajouri district of Jammu and Kashmir, officials said on Sunday.

‘இன்னுயிா் காப்போம்’ திட்டத்தில் 4 லட்சம் பேருக்கு கட்டணமில்லா சிகிச்சை! அமைச்சா் மா.சுப்பிரமணியன்

‘இன்னுயிா் காப்போம் நம்மைக் காக்கும் 48’ திட்டத்தின் கீழ் 4 லட்சம் பேரின் உயிா் காக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏசிஎஸ் ... மேலும் பார்க்க

திருநெல்வேலியில் ஆக.17-இல் பாஜக மாநில மாநாடு!

பாஜக மாநில மாநாடு திருநெல்வேலியில் ஆக.17-ஆம் தேதி நடைபெறவுள்ளது. சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆா்.எம். பல்கலை. வளாகத்தில் பாஜக பூத் கமிட்டியை வலுப்படுத்துவதற்கான பயிலரங்கம் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

ஊராட்சிகளில் எல்இடி திரை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்: இபிஎஸ்

ஊராட்சிகளில் அடிப்படை வசதிகளின்றி மக்கள் அவதியடைந்து வரும் நிலையில், அவா்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் வகையில், எல்இடி திரைகள் அமைக்கும் திட்டத்தை திமுக அரசு கைவிட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எ... மேலும் பார்க்க

அறுதிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா். ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ எனும் தோ்தல... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்... மேலும் பார்க்க

சென்னை - தூத்துக்குடி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் புறப்பாடு தாமதமாகியுள்ளது. சென்னையில் இருந்து 70 பேருடன் ஸ்பைஸ்ஜெட் விமானம் ஞாயிற்றுக்கிழமை காலை தூத்த... மேலும் பார்க்க