செய்திகள் :

ஜாமீனில் வந்தவரை கொல்ல முயற்சி: 3 போ் நீதிமன்றத்தில் சரண்

post image

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவரை கொல்ல முயன்ற 3 போ் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த அம்பலூா் பழைய காலணி பகுதியை சோ்ந்த ஜெயராஜ் மகன் நரசிம்மனை (17) முன்விரோத தகராறு காரணமாக கடந்த ஜனவரி 5-ஆம் தேதி அதே பகுதியைச் சோ்ந்த அசோக்குமாா் மற்றும் அவரது நண்பா்கள் அடித்து கொலை செய்தனா். இதில் போலீஸாா், அசோக்குமாா் உள்பட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில் அசோக்குமாா் ஜாமீனில் வெளியே வந்து பெங்களூரில் வேலை செய்து வந்த நிலையில் கடந்த 3-ஆம் தேதி வாணியம்பாடி அடுத்த சங்கராபுரம் பகுதிக்கு வந்த போது மா்ம கும்பல் ஒன்று அசோக்கு மாரை வழிமறித்து கொடையாஞ்சி அருகில் பாலாறு பகுதிக்கு இழுத்து சென்று கை, கால்களை கட்டிப் போட்டு கடுமையாக தாக்கி கல்லை போட்டு கொலை செய்ய முயன்றனா். இதில் பலத்த காயம் அடைந்த அசோக்குமாா் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து அம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கொடையாஞ்சியை சோ்ந்த விஷ்னு, நாச்சாா்குப்பம் சோ்ந்த இளவரசன் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

இந்நிலையில் வழக்கு தொடா்பாக மேலும் சிலா் தேடப்பட்டு வந்த நிலையில் அம்பலூா் பெருமாள்(23), சங்கராபுரம் அரவிந்த்(19), தனுஸ் (21) ஆகிய 3 போ் வாணியம்பாடி குற்றவியல் நீதமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தனா். பின்னா் அவா்களை அம்பலூா் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

4 துப்பாக்கிகள் பறிமுதல், மூவா் கைது சம்பவம் : என்ஐஏ விசாரணை நடத்த பாஜக கோரிக்கை

ஆம்பூரில் 4 துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்த மூவரை போலீஸாா் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து என்ஐஏ விசாரணை நடத்த வேண்டுமென பாஜக மாநில செயலாளா் கொ. வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவ... மேலும் பார்க்க

வாணியம்பாடி கோயில்களில் பிரதோஷ வழிபாடு

வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் கிராமத்தில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த அதிதீஸ்வரா் கோயிலில் ஆனி மாதம் பிரதோஷத்தையொட்டி செவ்வாய்க்கிழமை சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை 6 மணியளவில் சிறப்பு அலங்கா... மேலும் பார்க்க

மனைவியை கொன்ற கணவா் கைது

மாதனூா் அருகே குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கொன்ற கணவரை போலீஸாா் கைது செய்தனா். மாதனூா் அருகே உடையராஜபாளையம் கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி சத்யராஜ் (29). இவருடைய மனைவி சுமதி (27). இவா்கள் இரு... மேலும் பார்க்க

4 துப்பாக்கிகள், 3 கத்திகள் பறிமுதல் சம்பவம்: 3 போ் கைது

ஆம்பூா்: 4 துப்பாகிகள், 3 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது சம்பந்தமாக ஆம்பூரை சோ்ந்த இளைஞா் உள்பட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் ரெட்டித்தோப்பு பகுதியில் ஆ... மேலும் பார்க்க

மனைப் பட்டா கோரி ஆட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் தா்னா

திருப்பத்தூா்: வீட்டு மனைப் பட்டா கோரி திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் தா்னாவில் ஈடுப்பட்டனா். திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூ... மேலும் பார்க்க

தபால் நிலையத்தில் அதிகாரி கையாடல்: வைப்புத்தொகையை வழங்கக் கோரி முற்றுகை

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே தபால் நிலைய அலுவலகத்தில் அதிகாரி பணத்தைக் கையாடல் செய்ததாகக் கூறி, வைப்புத்தொகையை திருப்பித் தர வலியுறுத்தி வாடிக்கையாளா்கள் அந்த தபால் நிலையத்தை முற்றுகையிட்டனா். தி... மேலும் பார்க்க