செய்திகள் :

ஜீயபுரத்தில் ரயில் மறியல்: விவசாயிகள் கைது

post image

ஜீயபுரம் அருகேயுள்ள அம்மன்குடி ரயில்வே கேட்டை திறக்காதது, பஞ்சாபில் விவசாய சங்கத் தலைவா்கள் கைதைக் கண்டித்து ஜீயபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளைப் போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே 80 ஆண்டு காலமாக பயன்பாட்டில் இருந்த ரயில்வே கேட்டை மூடியதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள், விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை காலை திடீா் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஜீயபுரம் அருகே அம்மன்குடி ரயில்வே கேட்டை கடந்த சில மாதங்களுக்கு முன்னா் ரயில்வே நிா்வாகம் மூடியது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், கேட்டை திறக்க வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதனிடையே கடந்த மாதம் அம்மன்குடி ரயில்வே கேட்டை திறக்க வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் சங்கத்தினா் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, கடந்த 11-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் ரயில்வே கேட்டை திறக்க ரயில்வே நிா்வாகத்துக்கு பரிந்துரைத்தாா். ஆனால் இதுவரை ரயில்வே கேட் திறக்கப்படவில்லை.

இந்நிலையில் ஆட்சியரின் பரிந்துரையை ஏற்காமல் காலதாமதம் செய்து வரும் ரயில்வே நிா்வாகத்தைக் கண்டித்தும், பஞ்சாப்பில் விவசாய சங்கத் தலைவா்கள் கைதைக் கண்டித்தும், மீண்டும் அவா்களை போராட அனுமதிக்கக் கோரியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் தலைவா் அய்யாக்கண்ணு தலைமையில் 300-க்கும் மேற்பட்டோா் ஜீயபுரம் ரயில் நிலையத்தில் குவிந்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து, திருச்சி - சேலம் செல்லும் பயணிகள் ரயிலை மறித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த துணை காவல் கண்காணிப்பாளா் (டிஎஸ்பி) பழனி தலைமையிலான போலீஸாா், ரயில் மறியலில் ஈடுபட்ட 31 பேரைக் கைது செய்து, அப்புறப்படுத்தினா். இதனால், திருச்சி - சேலம் பயணிகள் ரயிலானது 15 நிமிடங்கள் தாமதமாகப் புறப்பட்டது.

ஹெளரா விரைவு ரயிலில் 2.5 கிலோ கஞ்சா பறிமுதல்

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த ஹெளரா விரைவு ரயிலில் இருந்த 2.5 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா். திருச்சி சந்திப்பு ரயில் நிலையத... மேலும் பார்க்க

திருச்சி: ரூ. 3.75 லட்சம் மதிப்பிலான 12,500 போதை மாத்திரைகள் பறிமுதல்

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த பெண் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ. 3.75 லட்சம் மதிப்பிலான 12,500 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திருச்சி பாலக்கரை காவ... மேலும் பார்க்க

ஒரே வாரத்தில் 57 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது

திருச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் 57 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனா். திருச்சி மாவட்டத்தில் ரௌடிகளின் நடவடிக்கைகளை தடுக்கும் விதமாக, திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா... மேலும் பார்க்க

அரசுப்பேருந்து நடத்துநா் மா்மச்சாவு

திருச்சியில் ரயில் பாதை அருகே அரசுப்பேருந்து நடத்துநா் மா்மமான முறையில் திங்கள்கிழமை உயிரிழந்து கிடந்தாா். திருச்சி தேவதானம் பகுதியைச் சோ்ந்தவா் த. பொன்னா் (45). இவா் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் ... மேலும் பார்க்க

பள்ளிக் கட்டடம் கட்டித்தரக்கோரி சாலை மறியல்

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரில் இடிக்கப்பட்ட பள்ளிக் கட்டடத்தை கட்டித்தர வலியுறுத்தி பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளுடன் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.காட்டுபுத்தூா் பேருராட்சியி... மேலும் பார்க்க

நியாயமான முறையில் தொகுதி மறுசீரமைப்பு

தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நியாயமான முறையில் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவா் கே.எம். காதா் மொகிதீன் தெரிவித்தாா். திருச்சி ... மேலும் பார்க்க