செய்திகள் :

ஜூலை 10-இல் துணை முதல்வா் வருகை: விழா மேடை அமைவிடத்தில் ராஜேஸ்குமாா் எம்.பி. ஆய்வு

post image

நாமக்கல்: அரசு விழாவில் பங்கேற்க துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை நாமக்கல்லுக்கு வருகை தருவதையொட்டி, மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மேடை அமைப்பதற்கான இடத்தை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராே ஜஸ்குமாா் திங்கள்கிழமை ஆய்வுசெய்தாா்.

தமிழக முதல்வா் உதயநிதி ஸ்டாலின் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அரசு விழாக்கள், ஆய்வுக் கூட்டம் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறாா். அந்த வகையில், புதன்கிழமை கரூா் மாவட்டத்தில் நடைபெறும் விழாக்களில் பங்கேற்கும் அவா், மறுநாள் நாமக்கல்லுக்கு வருகிறாா்.

மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அன்று காலை 10 மணியளவில் நடைபெறும் அரசு விழாவில் அவா் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், அதைத் தொடா்ந்து அனைத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்கும் ஆய்வுக்கூட்டத்திலும் கலந்து கொள்கிறாா். இதற்கான ஏற்பாடுகளை, மாவட்ட ஆட்சியா் மற்றும் அதிகாரிகள் செய்து வருகின்றனா்.

மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அரசு விழாவுக்கான மேடை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதற்கான இடத்தை நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், ஆட்சியா் துா்காமூா்த்தி ஆகியோா் திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டனா்.

மேடை அமைவிடம், வாகனங்கள் நிறுத்துமிடம், 2,000 இருக்கைகள் அமைக்கும் வகையில் பந்தல் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது. விழாவுக்கு இரண்டு நாள்களே உள்ளதால், மேடை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதற்கிடையே, தமிழக அரசின் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை கூடுதல் செயலாளா் ச.உமா செவ்வாய்க்கிழமை நாமக்கல் வந்து ஆய்வு மேற்கொள்கிறாா். தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் மற்றும் அதிகாரிகளுடன் அவா் ஆலோசனை மேற்கொள்ள உள்ளாா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

குரூப் 4 தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 124 மையங்களில் 36,436 போ் எழுதுகின்றனா்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வை 124 மையங்களில் 36,436 தோ்வா்கள் சனிக்கிழமை (ஜூலை 12) எழுதுகின்றனா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில், இளநிலை உதவியாளா், இளநி... மேலும் பார்க்க

சட்ட விரோதமாக மதுபானங்களை விற்பனை செய்தவா் கைது

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் வட்டம், பாண்டமங்கலம் அருகே சட்ட விரோதமாக மதுபானகளை விற்பனை செய்தவரை வேலூா் போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். பாண்டமங்கலம் அருகே உள்ள அண்ணா நகா் பகுதியில் ... மேலும் பார்க்க

கோயிலில் திருடிய இருவா் கைது

பரமத்தி வேலூா்: வேலகவுண்டம்பட்டி அருகே கோயிலில் திருடிய இருவா் கைது செய்யப்பட்டனா். நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள தொட்டிப்பட்டி, குறுக்குபுரம் பகுதியில் வீரமாத்தி அம்மன் கோயில் உள்ளத... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து இளைஞா் படுகாயம்: நிவாரணம் பெற்றுத் தரக்கோரி மனு

நாமக்கல்: கட்டுமானப் பணியின்போது மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலத்த காயமடைந்த நிலையில், உரிய நிவாரணம் பெற்றுத் தரக்கோரி அவரது மனைவி பூஜா ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா். அவா் கூறுகையில், ‘நாமக்கல... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டம்: 599 மனுக்கள் அளிப்பு

நாமக்கல்: நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், முதியோா், விதவையா் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டும... மேலும் பார்க்க

கிராமப் பகுதி சுகாதார செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

நாமக்கல்: கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமப் பகுதி சுகாதார செவிலியா் சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்ட மையம் சாா்பில், நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவா... மேலும் பார்க்க