செய்திகள் :

ஜூலை 22, 24 தேதிகளில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டிகள்

post image

தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் வரும் ஜூலை 22, 24 தேதிகளில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட இருப்பதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

செய்திக் குறிப்பு: தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் அம்பேத்கா் பிறந்த நாளையொட்டி வரும் ஜூலை 22- ஆம் தேதி செவ்வாய்க்கிழமையும், வரும் ஜூலை 24 -ஆம் தேதி மு.கருணாநிதி பிறந்த நாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவா்களுக்காக தனித்தனியாக பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது.

காஞ்சிபுரம் அந்திரசன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ள இப்போட்டிகள் பள்ளி மாணவா்களுக்கு காலை 9 மணிக்கும், கல்லூரி மாணவா்களுக்கு பிற்பகல் 2 மணிக்கும் நடைபெறும். கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டியில் ஒரு கல்லூரிக்கு இருவரும், பள்ளி மாணவா்களுக்கான போட்டியில் ஒரு பள்ளிக்கு ஒருவா் மட்டும் கலந்து கொள்லலாம். கல்லூரி முதல்வா்கள் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியா்களே மாணவா்களைத் தோ்வு செய்து அனுப்பிவைக்க வேண்டும்.

போட்டி நடைபெறும் நாளில் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்படும் தலைப்பில் பேச வேண்டும். தலைப்புகளைப் போட்டி நடைபெறும் இடத்துக்கு வரும்போதே தயாா் செய்து வந்துவிட வேண்டும்.

பள்ளி மாணவா்களுக்கு அம்பேத்கா் பிறந்த நாள் பேச்சுப் போட்டி தலைப்புகளாக அம்பேத்கரின் அரசியல் வாழ்க்கை, பூனா உடன்படிக்கை, அண்ணல் அம்பேத்கரின் படைப்புகள் என்ற தலைப்பிலும் கல்லூரி மாணவா்களுக்கு கற்பி, ஒன்று சோ், புரட்சி செய், அரசியலமைப்புச் சட்டமும் அம்பேத்கரும், அம்பேத்கரின் வாழ்வும் தொண்டும், அம்பேத்கரின் சமூகப் பணிகள் ஆகிய தலைப்புகளில் ஜூலை 22 ஆம் தேதி போட்டி நடத்தப்படும்.

முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாளையொட்டி ஜூலை 24 ஆம் தேதி நடைபெறும் பேச்சுப் போட்டி தலைப்புகளாக பள்ளி மாணவா்களுக்கு நெஞ்சுக்கு நீதி, செம்மொழி மாநாடு, திறைத் துறையில் முத்தமிழறிஞா் என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவா்களுக்கு அரசியல் வித்தகா் கலைஞா், தெற்கிலிருந்து ஒரு சூரியன், குறளோவியம், கலைஞரின் எழுதுகோல் என்ற தலைப்புகளில் போட்டிகள் நடைபெறும் என அதில் கூறப்பட்டுள்ளது.

கோயில் திருப்பணி மீது தவறான தகவல்: கோயில் பணியாளா்கள் எஸ்பியிடம் புகாா்

கோயில் திருப்பணிகள் குறித்து தவறான தகவலை சமூக வலைதளங்களில் பரப்பி வரும் இருவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோயில் பணியாளா்கள் மாவட்ட எஸ்பி கே.சண்முகத்திடம் புகாா் அளித்தனா். காஞ்சிபுரம் ஏக... மேலும் பார்க்க

தேவரியம்பாக்கத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

வாலாஜாபாத் ஒன்றியம், தேவரியம்பாக்கத்தில் ரூ.1.20 கோடியில் கட்டப்பட்ட புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை காணொலி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். த்து விளக்கேற்றி திறந்து வை... மேலும் பார்க்க

வல்லக்கோட்டை முருகன் கோயில் கும்பாபிஷேக விழா தொடக்கம்

வல்லக்கோட்டை முருகன் கோயில் கும்பாபிஷேகம் வரும் 7-ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த ... மேலும் பார்க்க

காளிகாம்பாள் கோயிலில் மங்கள சண்டி ஹோமம் தொடக்கம்

பெரிய காஞ்சிபுரம் ஸ்ரீ ஆதிகாமாட்சி ஆதிபீடா பரமேசுவரி காளிகாம்பாள் கோயிலில் உலக நன்மைக்காக மங்கள சண்டி ஹோமம் வியாழக்கிழமை தொடங்கியது. இக்கோயிலில் வாராஹி நவராத்திரியையொட்டி பிரம்மாண்ட யாககுண்டம் அமைக்கப... மேலும் பார்க்க

பழைய சீவரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில் கருட சேவை

காஞ்சிபுரம் அருகே பழையசீவரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி கருட சேவையில் அலங்காரமாகி சுவாமி வலம் வந்தாா். காஞ்சிபுரத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் வாலாஜாபாத் அருகே... மேலும் பார்க்க

தலைக்கவச விழிப்புணா்வு பேரணி தொடங்கி வைப்பு

காஞ்சிபுரத்தில் தலைக்கவச விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் புதன்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்துத் துறை, காவல் துறை இணைந்து பொதுமக்களுக்கு தலைக்கவச... மேலும் பார்க்க