செய்திகள் :

ஜூலை 7-ல் அமித் ஷா சென்னை வருகை! ஆனால், இபிஎஸ் இல்லை?

post image

மத்திய அமைச்சர் அமித் ஷாவின் வருகை நாளிலேயே எடப்பாடி பழனிசாமியும் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

தமிழகத்தில் பாஜகவுக்கு வலுசேர்க்கும் முயற்சியில் அக்கட்சித் தலைமை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், ஜூன் மாதம் மதுரையில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சர் அமித் ஷா, இனி ஒவ்வொரு மாதமும் தமிழகம் வரவிருப்பதாகக் கூறியிருந்தார்.

இந்த நிலையில், ஜூலை 7 ஆம் தேதியில் சென்னைக்கு அமித் ஷா வருகை தரவுள்ளார். இந்த வருகையின்போது, மதுரையில் நடத்தப்பட்டதுபோல சென்னையிலும் பாஜக நிர்வாகிகளுடன் தனி அறையில் கருத்துகளை அமித் ஷா கேட்டறியலாம் என்று கூறப்படுகிறது.

சென்னைக்கு அமித் ஷா வருகைதரும் அதே நாளில்தான், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் சுற்றுப்பயணமும் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து முதல்வர் வேட்பாளராக அதிமுகவில் இருந்துதான் போட்டியிடுவர் என்று அமித் ஷா கூறிய நிலையில், தற்போது ஒரே நாளில் இருவரும் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர்.

ஆனால், அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திக்க விரும்பவில்லையா? என்று விமர்சித்து, சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். மேலும், முதல்வர் வேட்பாளர் அதிமுக என்று மட்டுமே அமித் ஷா குறிப்பிட்டதாகவும், எடப்பாடி பழனிசாமி என்று குறிப்பிடவில்லை என்பதாலும்தான், சலசலப்பு ஏற்பட்டிருக்குமோ என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தடுப்பூசி திட்டம்: மேலும் 7 மாவட்டங்களுக்கு விரிவாக்கம்

ஜப்பானிய மூளைக் காய்ச்சலுக்கான தடுப்பூசி திட்டம் சென்னை உள்பட தமிழகத்தில் மேலும் 7 மாவட்டங்களில் விரிவுபடுத்தப்படுவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சேலத்தில் 4-ஆவது ... மேலும் பார்க்க

படைப்பாளிகள் வாழும் காலத்திலேயே அங்கீகாரம் பெற வேண்டும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

படைப்பாளிகள் அவா்கள் வாழும் காலத்திலேயே அங்கீகாரம் பெற வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினாா். சாகித்ய அகாதெமி மற்றும் ஜவஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சிறப்பு நிலைத் தமிழ்த் துறை இணைந்... மேலும் பார்க்க

பருத்திக்கு விவசாயிகளுக்கு அரசு முக்கிய அறிவுறுத்தல்!

பருத்திக்கு உரிய விலை பெற அதனை தரம்பிரித்து ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களுக்குக் கொண்டுவந்து விற்பனை செய்து விவசாயிகள் பயன்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற... மேலும் பார்க்க

நடிகர் கிருஷ்ணா ஜாமீன் கேட்டு மனு தாக்கல்

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதான நடிகர் கிருஷ்ணா போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். மனுவில், நான் எந்த தவறும் செய்யவில்லை, என்னிடம் இருந்து போதைப்பொருள் ... மேலும் பார்க்க

திமுக நிர்வாகிகளுடன் ஸ்டாலின் நாளை ஆலோசனை!

முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் திமுக நிர்வாகிகளுடன் நாளை(ஜூன் 28) ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அண... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று(ஜூன் 27) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், பு... மேலும் பார்க்க