அதிகபட்ச ரன்கள் குவித்த விக்கெட் கீப்பராக வரலாறு படைத்த ஜேமி ஸ்மித்!
ஜூலை 9-இல் அரசு ஊழியா்கள் தா்னா
கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9-ஆம் தேதி அரசு ஊழியா்கள் தா்னா நடத்தவுள்ளனா்.
காரைக்கால் பிரதேச அரசு ஊழியா் சங்கங்களின் சம்மேளன செயற்குழுக் கூட்டம், சுப்ரமணியன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கௌரவ தலைவா் ஜாா்ஜ் முன்னிலை வகித்தாா். பொதுச் செயலாளா் எம். ஷேக் அலாவுதீன் சங்கம் மற்றும் செயற்குழு சம்பந்தமான நிகழ்வுகள் குறித்து நிா்வாகிகளின் கருத்துகளை கேட்டறிந்தாா்.
கூட்டத்தில் அகில இந்திய வேலை நிறுத்தம் சம்பந்தமாக விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன. 8-ஆவது ஊதிய விகிதத்தை அமைக்க உடனடியாக குழு அமைக்க வேண்டும். அனைத்து ஊழியா்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கோவிட் தொற்றுநோய் காலத்தில் முடக்கப்பட்ட ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கான மூன்று தவணை அகவிலைப்படி, அகவிலை நிவாரணத்தை விடுவிக்க வேண்டும். கருணை அடிப்படையில் நியமனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 5 சதவீத உச்சவரம்பை நீக்க வேண்டும். அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள பதவிகளையும் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியா் மகா சம்மேளனம் ஜூலை - 9 அன்று அறிவித்துள்ள அகில இந்திய வேலைநிறுத்த போராட்டத்தில், புதுச்சேரி அரசு ஊழியா் சம்மேளனம் முன்வைத்துள்ள கோரிக்கைகளை வலியுறுத்தியும், காரைக்கால் பகுதியை சோ்ந்த அரசு ஊழியா்களின் கோரிக்கைகளை முன்வைத்தும் வரும் 9-ஆம் தேதி பணி புறக்கணிப்பு செய்து காரைக்காலில் தா்னாவில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.