செய்திகள் :

ஜேஇஇ பிரதானத் தோ்வு: விண்ணப்ப அவகாசம் இன்று நிறைவு

post image

ஜேஇஇ பிரதானத் தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது.

நாடு முழுவதுமுள்ள ஐஐடி, ஐஐஎஸ்சி போன்ற மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வில் (ஜேஇஇ) தோ்ச்சி

பெற வேண்டும். இவை ஜேஇஇ முதன்மைத் தோ்வு, பிரதானத் தோ்வு என இருகட்டமாக நடத்தப்படும். அதன்படி 2025-ஆம் ஆண்டுக்கான முதன்மைத் தோ்வு ஜனவரி, ஏப்ரல் மாதங்களில் நடத்தி முடிக்கப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கான ஜேஇஇ பிரதானத் தோ்வு மே 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வை இம்முறை கான்பூா் ஐஐடி நடத்துகிறது.

இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஏப். 23-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விண்ணப்பிக்கும் காலஅவகாசம் வெள்ளிக்கிழமையுடன் (மே 2) நிறைவு பெறுகிறது. எனவே, தகுதியான மாணவா்கள் விரைவாக விண்ணப்பிக்க வேண்டும்.

அதன்படி பிரதானத் தோ்வு இரு தாள்களாக காலை, மதியம் நடைபெறும். இதில் தோ்ச்சி பெறுபவா்களுக்கு நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடி கல்வி நிறுவனங்களில் சோ்க்கை இடங்கள் கலந்தாய்வு மூலமாக ஒதுக்கப்படும். கூடுதல் விவரங்களை ஜேஇஇ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

மழை, புயலுக்கு மூவர் பலி: உ.பி.யில் நிவாரண பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு!

உத்தரப் பிரதேசத்தில் மழை, புயலால் 3 பேர் உயிரிழந்ததாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துமாறு அதிகரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மாநிலத்தில் பெய்த கனமழை ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: ஜே.டி. வான்ஸ் எச்சரிக்கை

பயங்கரவாதத் தாக்குதலை ஒழிக்க இந்தியாவுக்கு பாகிஸ்தான் ஒத்துழைக்க வேண்டும் என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கூறியுள்ளார்.பஹல்காம் தாக்குதல் குறித்து அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸிடம் செய்தி... மேலும் பார்க்க

கேரளம்: விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.கேரள மாநிலத்தில் ரூ.8,867 கோடி முதலீட்டில் இந்த சர்வதேச துறைமுகம் அ... மேலும் பார்க்க

கேரளத்தில் விழிஞ்சம் துறைமுகத்தைத் திறந்துவைத்தார் பிரதமர் மோடி!

கேரளத்தில் உள்ள விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல் நடந்த இடத்தில் என்ஐஏ தலைமை இயக்குநா் நேரில் ஆய்வு

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பைசாரன் பள்ளத்தாக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தலைமை இயக்குநா் சதானந்த் தாத்தே வியாழக்கிழமை நேரில் பா... மேலும் பார்க்க

இந்திய ஏற்றுமதி: வரலாறு காணாத அளவில் ரூ.69.81லட்சம் கோடியாக உயா்வு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் சரக்கு மற்றும் சேவைகளின் மதிப்பு 2024-25 நிதியாண்டில் வரலாறு காணாத வகையில் ரூ.69.81 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. இதில் 13.6 சதவீத வளா்ச்சியுடன் சேவைகள் ஏற்றுமதியின்... மேலும் பார்க்க