செய்திகள் :

டாடாவின் அல்ட்ரோஸ் இப்போது புது வடிவில்!

post image

இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமான டாடா, அதன் அல்ட்ரோஸ் மாடலை தற்போது புதுப்பித்துள்ளது.

முதன்முதலாக 2020ல் அல்ட்ரோஸ் மாடல் முழுமையாக மேம்படுத்தப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். புதிதாக மேம்படுத்தப்பட்ட டாடா அல்ட்ரோஸ் அதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை வெளியிட்டுள்ளது.

2025ல் புதுப்பிக்கப்பட்ட டாடா அல்ட்ரோஸ் மாடல் இந்தியாவில் மே 22ல் அறிமுகமாக உள்ளது. அதன் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாக டாடா அல்ட்ரோஸ் அதன் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி டாடா அல்ட்ரோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் நேர்த்தியான, மெல்லிய கோடுகள் மற்றும் 3D முன்பக்க கிரில் பொருத்தப்பட்டுள்ளது.

இதனுடன் புதிய லுமினேட் எல்இடி விளக்குகள், இன்ஃபினிட்டி கனெக்டெட் எல்இடி டெயில் விளக்குகள் மற்றும் ஃபிளஷ் டோர் ஹேண்டல்கள் ஆகியவை புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் ஃபாக் லேம்ப் ஹவுசிங் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட முன்பக்க பம்பர், புதிய 5 ஸ்போக், 16 இன்ச் அலாய் வீல்களும் அடங்கும்.

அதேபோன்று அல்ட்ரோஸின் முன்பக்கம், உள்புறம் மற்றும் கேபினிலும் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. டு-ஸ்போக் ஸ்டீரிங் வீல், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் பல அம்சங்கள் அடங்கும். டேஷ்போர்டின் வடிவமைப்பை முற்றிலுமாக மாற்றியுள்ளது.

இந்த புதிய மாடலானாது ஸ்மார்ட், ப்பூர், கிரியேடிவ், அக்கம்ப்டிளஷ்டு மற்றும் அக்கம்ப்டிளஷ்டு எஸ் என அனைத்து வேரியண்ட்களும் 6 ஏர்பேக் பாதுகாப்பு அம்சத்தை கொண்டுள்ளது. மேலும் 17.78 செ.மி தொடுதிரை, 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் சார்ஜர், குரல் உதவியுடன் கூடிய மின்சார சன்ரூஃப் என பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட அல்ட்ரோஸில் இது 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினையும் கொண்டுள்ளது.

அல்ட்ரோஸின் விலை ரூ. 7.50 லட்சம் முதல் ரூ. 11.50 லட்சம் வரை இருக்கலாம். காரின் ரேசர் அல்லது டார்க் எடிஷனை பொருத்து விலை அதிகரிக்கலாம்.

அக்ஸோ நோபல் 4-வது காலாண்டு லாபம் சரிவு!

புதுதில்லி: வண்ணப்பூச்சு மற்றும் பூச்சுகள் தயாரிப்பாளரான அக்ஸோ நோபல் இந்தியா லிமிடெட், மார்ச் 31, 2025 உடன் முடிவடைந்த 4-வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.108.4 கோடியாக குறைந்துள்ளதாக அறி... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்ந்து ரூ.85.26 ஆக முடிவு!

மும்பை: உள்நாட்டு பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட லாபம் மற்றும் நேர்மறையான பொருளாதார தரவுகள் காரணமாக இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 10 காசுகள் உயர்ந்து ரூ.85.2... மேலும் பார்க்க

பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்ததால், பங்குச் சந்தைகள் உயர்வுடன் முடிவு!

மும்பை: சில்லறை பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16 சதவிகிதமாகக் குறைந்ததால், இன்றைய வர்த்தகத்தில் பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வுட... மேலும் பார்க்க

ஷாவ்மிக்கு போட்டியாக விவோவின் புதிய ஸ்மார்ட்போன்!

ஷாவ்மி 16 ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக விவோ நிறுவனம் மேம்படுத்தப்பட்ட புதிய எக்ஸ் 300 ப்ரோ மினி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. ஷாவ்மி 16 ஸ்மார்ட்போனில் 6,800mAh பேட்டரி திறன் கொடுக்கப்பட்டுள்ள நிலை... மேலும் பார்க்க

அதிக பேட்டரியுடன் தயாராகும் ஷாவ்மி 16! இந்தியாவில் எப்போது அறிமுகம்?

ஷாவ்மி 16 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் தேதி குறித்து அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதோடு மட்டுமின்றி, ஷாவ்மி 16 ஸ்மார்ட்போனில் இதுவரை இந்நிறுவனத்தின் வேறு எந்த தயாரிப்பிலும் இல... மேலும் பார்க்க

அதிரடியாக விலையுயர்ந்த ஹோண்டா சிட்டி ஹைப்ரிட்!

ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் என்றழைக்கப்படும் எச்இவியின் விலையை அதிரடியாக உயர்ந்துள்ளது. உலக அளவில் பல்வேறு நாடுகளில் பிரபலமான செடான் வரிசையில் குறிப்பிடத்தக்க ஒன்று ஹோண்டா சிட்டி. அவ்வப்போது ஹோண்டா சிட்டிய... மேலும் பார்க்க