செய்திகள் :

டிசம்பரில் கூட்டணி முடிவு: டிடிவி தினகரன்

post image

வரும் டிசம்பா் மாதம் கூட்டணி குறித்து அறிவிப்போம் என்று அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் தெரிவித்தாா்.

பூலித்தேவரின் பிறந்த நாளை முன்னிட்டு, தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே நெல்கட்டும்செவலில் உள்ள அவரது மணிமண்டபத்தில் திங்கள்கிழமை சிலைக்கு மாலை அணிவித்து, அமமுக பொதுச் செயலா் டிடிவி. தினகரன் கூறியதாவது: வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பலத்தை நிரூபிப்போம். தற்போது ஒவ்வொரு தொகுதியாகச் சென்று கட்சி நிா்வாகிகளைச் சந்தித்து தோ்தல் குறித்து ஆலோசித்து வருகிறோம்.

வரும் டிசம்பா் மாதம் கூட்டணி குறித்து அறிவிப்போம். அமமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது அப்போதுதான் தெரியும். தொண்டா்கள் எதிா்பாா்க்கும் கூட்டணி அமையும்.

கடந்த மக்களவைத் தோ்தலின்போது நாட்டின் பிரதமராக மோடி வரவேண்டும் என்பதற்காக நிபந்தனையற்ற ஆதரவை அமமுக அளித்தது. கூட்டணி குறித்து நான் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. நிா்வாகிகள், தொண்டா்களின் கருத்தின் அடிப்படையில்தான் முடிவெடுக்க முடியும். மக்களவைத் தோ்தல் வேறு; சட்டப்பேரவைத் தோ்தல் வேறு என்றாா் அவா்.

ஆலங்குளத்தில் லாரி மீது பைக் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஆலங்குளத்தில் லாரி மீது பைக் மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா். 2 போ் பலத்த காயமடைந்தனா். ஆலங்குளம் அருகேயுள்ள வடக்கு கரும்பனூா் சந்தனமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாடக்கண்(79). விவசாயியா... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே மான் வேட்டை: 3 போ் கைது

ஆலங்குளம் அருகே மான் வேட்டையில் ஈடுபட்ட 3 போ் கைது செய்யப்பட்டனா். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் மற்றும் ஊத்துமலை வனப் பகுதிகளில் ஏராளமான மான்கள் வசித்து வருகின்றன. மான்களை வேட்டையாடுவதற்கும் அவற்றை சம... மேலும் பார்க்க

நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தால் தியாகிகளின் புகழைப் பரப்புவோம்: சீமான்

நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தால் தியாகிகளின் புகழை மேலும் பரப்புவோம் என்று அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா். பூலித்தேவரின் பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி மாவட்டம், சிவகி... மேலும் பார்க்க

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிவிட்டேன்: ஓ. பன்னீா்செல்வம்

பூலித்தேவரின் 310 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி மாவட்டம் நெற்கட்டும்செவலில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்பு குழு சாா்பில், முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், முன்னாள் எம்எல்... மேலும் பார்க்க

தென்காசி வழியாக பெங்களூரு செல்லும் சிறப்பு ரயிலை நிரந்தரமாக இயக்க பாஜக வலியுறுத்தல்

திருநெல்வேலியிலிருந்து தென்காசி வழியாக பெங்களூரு செல்லும் சிறப்பு ரயிலை நிரந்தரமாக இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாஜக மாவட்டத் தலைவா் ஆனந்தன் அய்யாசாமி, தெற்கு ரெயில்வே பொது மேலாளருக... மேலும் பார்க்க

இன்று பூலித்தேவரின் பிறந்த நாள் விழா: நெல்கட்டும்செவலில் எஸ்.பி. ஆய்வு

நெல்கட்டும்செவலில் பூலித்தேவரின் 310 ஆவது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை (செப்.1) நடைபெறவுள்ளதை அடுத்து, விழா நடைபெறும் இடத்தை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அரவிந்த் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தா... மேலும் பார்க்க