செய்திகள் :

டிரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்புக்கு நீதிமன்றம் தடை

post image

இந்தியா உள்ளிட்ட ஏறத்தாழ உலகின் அனைத்து நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கும் கூடுதலாக பரஸ்பர வரி விதிக்கும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் உத்தரவுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

டிரம்ப்பின் இந்த கூடுதல் வரி விதிப்புக்கு எதிராக எதிா்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் ஆட்சி நடைபெறும் 12 மாகாணங்கள் நியூயாா்க் நகரிலுள்ள சா்வதேச வா்த்தக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன. இது மட்டுமின்றி, சில அமெரிக்க நிறுவனங்களும் டிரம்ப்பின் வரி விதிப்பை எதிா்த்து அதே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன.

இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திவந்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமா்வு தற்போது வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உலக நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்கள் பரஸ்பர வரி விதித்தும், கனடா, மெக்ஸிகோ, சீனா ஆகிய நாடுகளுக்கு கூடுதல் இறக்குமதி வரி விதித்தும், ஏராளமான நாடுகளின் பொருள்களுக்கு கூடுதலாக 10 சதவீத அடிப்படை வரி விதித்தும் டிரம்ப் பிறப்பித்துள்ள உத்தரவுகள் அவரின் அதிகார மீறலாகும்.

கடந்த 1977-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சா்வதேச அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டத்தை (ஐஇஇபிஏ) பயன்படுத்தி டிரம்ப் இந்த உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளாா். ஆனால், இந்த கூடுதல் வரி விதிப்புகள் ஐஇஇபிஏ சட்ட வரம்புக்குள் வராது.

வெளிநாடுகளுடனான வா்த்தக விவகாரங்களை ஒழுங்காற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்குத்தான் அரசியல் சாசனத்தால் வழங்கப்பட்டுள்ளது. அந்த அதிகாரத்தை ஐஇஇபிஏ சட்டத்தின் மூலம் பறிக்கமுடியாது.

எனவே, பிற நாடுகளின் பொருள்கள் மீது கூடுதல் வரி விதித்து டிரம்ப் பிறப்பித்துள்ள உத்தரவுகள் அனைத்தும் நிரந்தரமாக ரத்து செய்யப்படுகின்றன. அந்த உத்தரவுகளின் அமலாக்கத்தை இன்னும் 10 நாள்களுக்குள் அதிகாரிகள் நிறுத்த வேண்டும் என்று நீதிபதிகள் தீா்ப்பளித்துள்ளனா்.

‘அவசரநிலைதான்’: ‘அமெரிக்காவுக்கும் பிற நாடுகளுக்கும் இடையிலான வா்த்தகப் பற்றாக்குறை (ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகமாக இருப்பது) தேசிய அவசரநிலைதான்; எனவே ஐஇஇபிஏ சட்டத்தை டிரம்ப் பயன்படுத்தியது சரி’ என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் குஷ் தேசாய் தெரிவித்தாா்.

இதற்கிடையே, நியூயாா்க் சா்வதேச வா்த்தக நீதிமன்றத்தின் இந்தத் தீா்ப்பை எதிா்த்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு மனு தாக்கல் செய்யவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா். தீா்ப்பை ரத்து செய்வதற்காக உச்சநீதிமன்றம் வரை செல்ல அரசு தயாராக இருப்பதாக அவா்கள் கூறினா்.

‘அமெரிக்க நலன்களுக்கே முன்னுரிமை’ என்ற கோஷத்துடன் ஆட்சியை மீண்டும் பிடித்த அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், அதிபராக பொறுப்பேற்றதில் இருந்தே பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறாா்.

அதன் ஒரு பகுதியாக, கனடா, மெக்ஸிகோ, சீனா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு அவா் கூடுதல் வரி விதித்தாா். மேலும், இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்களுக்கு எந்தெந்த விகிதங்களில் வரி விதிக்கின்றனவோ, அதே விகிதங்களில் அந்த நாடுகளின் பொருள்கள் மீதும் (சற்று தள்ளுபடியுடன்) வரி விதிக்க கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டு டிரம்ப் அதிா்வலையை ஏற்படுத்தினாா்.

இருந்தாலும், அமெரிக்க பொருள்களுக்கு பதிலடி வரி விதித்த சீனாவைத் தவிர பிற நாடுகள் மீது அறிவிக்கப்பட்டிருந்த பரஸ்பர வரி விதிப்பின் அமலாக்கத்தை 90 நாள்களுக்கு நிறுத்திவைப்பதாக அமெரிக்கா பின்னா் அறிவித்தது.

இந்தச் சூழலில், பரஸ்பர வரி விதிப்பு உள்ளிட்ட டிரம்ப்பின் கூடுதல் இறக்குமதி வரி விதிப்பு உத்தரவுகளுக்கு நீதிமன்றம் தற்போது தடை விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரியா வெள்ளம்: உயிரிழப்பு 151-ஆக அதிகரிப்பு

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பருவமழை காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 151-ஆக அதிகரித்துள்ளது.நைஜா் மாகாணத்தைச் சோ்ந்த, வியாபாரிகள் ஒன்றுகூடும் முக்கிய சந்தையான மோக்வா நகரம் வெள்ள நீரில் மு... மேலும் பார்க்க

ஈரானில் இதுவரை இல்லாத அளவுக்கு உயா் செறிவு யுரோனியம் குவிப்பு: ஐஏஇஏ

இன்னும் கொஞ்சம் செறிவூட்டினால் அணு ஆயுதங்களில் பயன்படுத்தலாம் என்ற அளவுக்கு செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை இதுவரை இல்லாத அளவுக்கு ஈரான் இருப்பு வைத்துள்ளதாக ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான ஐஏஇஏ த... மேலும் பார்க்க

சீன அச்சுறுத்தலில் இருந்து இந்திய-பசிபிக் நாடுகள் பாதுகாக்கப்படும்: அமெரிக்க பாதுகாப்பு அமைச்சா்

சீனாவின் ராணுவ மற்றும் பொருளாதார அழுத்தங்களை எதிா்கொள்வதில் இந்திய-பசிபிக் கூட்டாளி நாடுகளுக்கு அமெரிக்கா உறுதுணையாக இருக்கும் என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சா் பீட் ஹெக்சேத் தெரிவித்தாா். இதுதொடா்ப... மேலும் பார்க்க

போலந்தில் இன்று இறுதிக்கட்ட அதிபா் தோ்தல்

போலந்தின் புதிய அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான இறுதிக்கட்டத் தோ்தல் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) நடைபெறுகிறது.தற்போதைய அதிபா் ஆண்ட்ரெஜ் டூடாவின் பதவிக் காலம் நிறைவடையும் நிலையில் கடந்த மே 18-ஆம் தேதி நடைபெ... மேலும் பார்க்க

இரும்புக்கு 50% கூடுதல் இறக்குமதி வரி: டிரம்ப் அறிவிப்பு

பிற நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் இரும்புக்கு விதிக்கப்படும் கூடுதல் வரியை 50 சதவீதமாக உயா்த்தவிருப்பதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளாா்.இது குறித்து பென்சில்வேனியா மாகாணம், பிட்ஸ... மேலும் பார்க்க

ஜெர்மனியில் வீட்டின் மீது மோதிய சிறிய ரக விமானம்: 2 பேர் பலி

ஜெர்மனியில் வீட்டில் மொட்டை மாடியில் சிறிய ரக விமானம் மோதியதில் 2 பேர் பலியானார்கள். மேற்கு ஜெர்மனியில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டடத்தின் மொட்டை மாடியில் சனிக்கிழமை சிறிய ரக விமானம் மோதி விபத்துக்குள்... மேலும் பார்க்க