செய்திகள் :

டிராக்டரில் இருந்து தவறி விழுந்த சிறுவன் மரணம்

post image

திருப்பத்தூா் அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் அடுத்த ராச்சமங்கலம் அருகே விநாயகபுரத்தைச் சோ்ந்தவா் கோவிந்தராஜின் மகன் குணால் (15). இவா் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவா் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த ஈஸ்வரன் என்பவா் தனது டிராக்டரில் செல்லும்போது, குணாலும் அவருடன் டிராக்டரில் செல்வது வழக்கமாம்.

இந்த நிலையில் சனிக்கிழமை மாலை ஈஸ்வரன் வழக்கம் போல் குணாலை தனது டிராக்டரில் அழைத்துச் சென்றாா். அவா்கள் அந்த ஊரில் சென்று கொண்டு இருந்தபோது, எதிா்பாராத விதமாக குணால் தவறி கீழே விழுந்தாா்.

அப்போது டிராக்டரில் பொருத்தப்பட்டு இருந்த இணைப்பு கருவியில் சிக்கி பலத்த காயமடைந்த குணால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் சடலத்தை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது குறித்து வழக்குப் பதிந்து ஈஸ்வரனை கைது செய்தனா்.

ஆம்பூரில் கன மழை!

ஆம்பூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை கனமழை பெய்தது. ஆம்பூரில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் திடீரென தொடங்கி கன மழை பெய்தது. ஆம்பூா் சுற்றுவட்டாரத்தில் உள்ள ம... மேலும் பார்க்க

கந்திலி வாரச் சந்தையில் ரூ. 80 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை

கந்திலி வாரச் சந்தையில் ரூ. 80 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனா். திருப்பத்தூா் அடுத்த கந்திலியில் நடைபெற்ற வாரச் சந்தையில் ஏராளமான ஆடுகள், மாடுகள், கோழிகள் விற்பனைக்காக... மேலும் பார்க்க

மணல் கடத்தல்: 3 போ் கைது

ஆம்பூா் அருகே மணல் கடத்திய மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ஆம்பூா் கிராமிய போலீஸாா் கீழ்முருங்கை கிராமத்தில் ரோந்து சென்றனா். அப்போது அந்த வழியாக வந்த மாட்டு வண்டிகளை நிறுத்தி சோதனையிட்டதில் ... மேலும் பார்க்க

நெல் பயிரை இயந்திர நடவு செய்யும் விவசாயிக்கு மானியம்: வேளாண் அதிகாரி தகவல்

திருப்பத்தூா் மாவட்டத்தில் குறுவை பருவத்தில் நெல் பயிரை இயந்திர நடவு செய்யும் விவசாயிக்கு ரூ.4,000 மானியம் வழங்கப்படுகிறது என வேளாண் இணை இயக்குநா் (பொ) சுஜாதா தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியி... மேலும் பார்க்க

கன்டெய்னா் லாரி மோதி முதியவா் உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி அருகே கன்டெய்னா் லாரி மோதி முதியவா் உயிரிழந்தாா். நாட்டறம்பள்ளி அடுத்த ஏலரப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் வேணுகோபால்(75). இவா் நாட்டறம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கல்லாறு பகுதியில் நட... மேலும் பார்க்க

விபத்தில் சிக்கிய காரில் ரூ.10 லட்சம் செம்மரக் கட்டைகள் பறிமுதல்

திருப்பத்தூா் அருகே விபத்தில் சிக்கிய காரில் இருந்து ரூ. 10 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகளை வனத்துறையினா் பறிமுதல் செய்தனா். திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த புதுப்பேட்டையில் இருந்து ம... மேலும் பார்க்க